<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535</id><updated>2012-02-10T21:10:23.623-08:00</updated><category term='விருது'/><category term='சிறுகதை'/><category term='ஆன்மீகம்'/><category term='விளையாட்டு'/><category term='இலங்கை'/><category term='மலையகம்'/><category term='கவிதைகள்'/><category term='சரித்திரம்'/><category term='திரைப்படம்'/><category term='உலகம்'/><title type='text'>தாண்டவம்</title><subtitle type='html'>அநியாயம் கண்டு பொங்கியெழும் அனைவரும் சிவனே</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>52</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-5064087682242486157</id><published>2012-02-10T21:04:00.000-08:00</published><updated>2012-02-10T21:10:23.639-08:00</updated><title type='text'>லதா அக்கா....!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-PAQUFoaBvPg/TzX35AWW45I/AAAAAAAAARg/WobjuLszydI/s1600/269497_10150355903739829_545804828_10213809_3662469_n.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5707740661480350610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 271px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-PAQUFoaBvPg/TzX35AWW45I/AAAAAAAAARg/WobjuLszydI/s320/269497_10150355903739829_545804828_10213809_3662469_n.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;வீரகேசரி ஆசிரியப்பீடத்தில் மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த போது எங்கிருந்தோ வந்து எம்முடன் இணைந்து கொண்டவர் லதா அக்கா. மிகவும் கடும்போக்கான குணத்தையுடையவர் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும் நாட் செல்ல செல்ல எங்கள் வழிக்கு வந்து விட்டார். அவர் வளர்ந்த சூழநிலை அவரைச்சுற்றி ஒரு வேலியை போட வைத்திருக்கலாம். இசைக்கும் நகைச்சுவைக்கும் இவர் அடிமை ,அது தான் இவரது பலவீனமும் என்று கூட சொல்லலாம்,காரணம் அவர் மிகக்கோபமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவருக்கு பிடித்த பாடலை மெதுவாக இசைக்க விடுவேன் தூரத்திலிருந்து அவர் முகத்தை பார்ப்பேன் முகம் மலரத்தொடங்கும் கீச்சு குரலில் அந்த பாடலை வாய் முணுமுணுக்கும் பிறகு என்ன வழமையான லதா அக்கா தான். நகைச்சுவைக்கு வாய் விட்டு சிரிக்கும் அவர் சில நேரங்களில் கண்ணீர் வரும் அளவுக்குக்கூட ரசித்து சிரிப்பார். சர்ச்சைக்குரிய செய்திகள் வரும் போதும் அது விவாதத்திற்குட்படும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது நிலையிலிருந்து பின் வாங்கமாட்டார். தீவிரமான பெண்ணியவாதியான இவர் ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் முன்னுதாரணம் காட்டும் சில விடயங்களை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டு விடுவார். பின்பு என்ன அவரை வழிக்கு கொண்டு வரத்தான் இருக்கிறதே பாரதி கண்ணம்மா பாடல் ,எனக்குத்தெரிய அவர் மிகவும் இரசித்து கேட்கும் பாடல்கள் நிழல் நிஜமாகிறது படங்களில் வரும் அனைத்துப்பாடல்களும் , கம்பன் ஏமாந்தான் , பாரதி கண்ணம்மா, மற்றும் மூங்கிலிலே பாட்டிசைத்து ,என் இனிய பொன் நிலாவே , இப்படி பல ...! இப்போதும் கூட இந்த பாடல்களை எனது கணிணி வழியாக கேட்கும் போது உங்கள் ஞாபகங்கள் வந்து போகும் லதா அக்கா! போராட்டம் ஒன்று தான் வாழ்க்கை என்று அடிமை தளையை தூக்கியெறிந்து விட்டு எமது ஆசிரியப்பீடத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள் நீங்கள். உங்களது காலகட்டத்தில் பலரது மௌனங்களை மொழிபெயர்த்து மொழிபெயர்க்கப்பட்ட மௌனங்கள் என்ற நூலை வெளிக்கொணர்ந்த நீங்கள் இப்போது மௌனத்தையே கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை நான் ரஜீவன் ,சார்ல்ஸ், ரவி அண்ணா, நிரஞ்சனி அவ்வப்போது உங்கள் பேப்பர் பந்தில் திடீர் அடி வாங்கும் எமது ஒப்பு நோக்காளர் பாலசிங்கம் என நல்ல ஒரு குழு இப்போது பிரிந்து எங்கெங்கோ இருக்கிறோம். எமது குழுவில் மூத்த சகோதரி என்ற வகையில் அவ்வப்போது பல நல்ல அறிவுரைகளை கூறியிருக்கிறீர்கள் எங்களை ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை ஆனால் நீங்கள் பாங்கொங் போய் வந்த நேரம் எனக்கு ஆசையாய் வாங்கி வந்த தாய்லாந்து என்ற பெயர் பொறித்த வெள்ளை டீ சேர்ட்டை நான் இன்னமும் பாதுகாத்து வருகிறேன் லதா அக்கா!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-5064087682242486157?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/5064087682242486157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=5064087682242486157' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5064087682242486157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5064087682242486157'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/02/blog-post_7988.html' title='லதா அக்கா....!'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-PAQUFoaBvPg/TzX35AWW45I/AAAAAAAAARg/WobjuLszydI/s72-c/269497_10150355903739829_545804828_10213809_3662469_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-4233149946566353337</id><published>2012-02-10T20:24:00.000-08:00</published><updated>2012-02-10T20:32:12.433-08:00</updated><title type='text'>சர்வதேச தாய் மொழி தினம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-w3HPoS1N2ao/TzXt4weT8dI/AAAAAAAAARU/DwlBWD_4RuY/s1600/Shaheed_minar_Roehl.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5707729662102467026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-w3HPoS1N2ao/TzXt4weT8dI/AAAAAAAAARU/DwlBWD_4RuY/s320/Shaheed_minar_Roehl.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;உயிர் நீத்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சர்வதேச தாய் மொழி தினம் ((International Mother Language Day) இம்மாதம் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியாக இந்த தாய் மொழி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இலங்கையில் இந்த வருடத்திலிருந்து மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன.இதை அமுல் படுத்தவும் அதில் உள்ள நன்மைகளை விளக்கவும் இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூட அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். ஆகவே இத்தினம் குறித்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் தினங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இதற்கு பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. சரி வாசகர்களே 1948 ஆம் ஆண்டுக்கு செல்வோமா?&lt;br /&gt;1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மொகமட் அலி ஜின்னா. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய பிரிவுகளே அவை. இப்போது கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் அலி ஜின்னா பாகிஸ்தான் நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உருதை பிரகடனம் செய்தார். இது கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை,காரணம் அங்கு வாழ்ந்து வந்தோர் தமது தாய் மொழியாக வங்காள மொழியை கொண்டிருந்தனர். வங்காள மொழியானது இந்திய ஆரிய மொழி குடும்பத்திலிருந்து தோன்றியதொன்றாகும். வங்காள மொழி பேசப்பட்டதால் தான் வங்காளதேசம் என இந்நாடு பின்னாளில் இந்தியாவின் உதவியுடன் சுதந்திர நாடாகியது. இந்த மொழியை உலகின் 232 மக்கள் பேசுகிறார்கள் என்பது கூடுதல் தகவல். சரி இனி விடயத்திற்கு வருவோம் அலி ஜின்னாவின் இந்த பிரகடனத்தால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை தாய்மொழியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற மக்கள் இயக்கம் தோற்றம் பெற்றது. சுமார் நான்கு வருடங்கள் இந்த இயக்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்பட்டன. இதன் உச்சகட்டமாக 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி டாக்கா பல்கலைகழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை பாகிஸ்தான் இராணுவமும் பொலிஸாரும் தமது இரும்பு கரங்களால் நசுக்கினர். இதன் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். உலகில் தாய் மொழியை பாதுகாப்பதற்காக இடம்பெற்ற ஒரே போராட்டம் என்ற பெருமை இதற்கு உண்டு அதே வேளை தாய் மொழியை காப்பதற்காக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஒரே சந்தர்ப்பமாகவும் இது விளங்குகிறது. உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக டாக்கா பல்கலைகழகத்தின் முன்றலில் நினைவு தூபி ஒன்று எழுப்பப்பட்டது. இந்த மொழி வேறுபாடு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தானில் தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றது என்பதும் இந்தியாவின் உதவியுடன் 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் என்ற பெயருடன் இது தனி சுதந்திர நாடாகியது என்பது வரலாறு. இந்த சம்பவத்தை முன்வைத்தே ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோ, 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தனது 30 ஆவது அமர்வின் போது பெப்ரவரி 21 ஐ சர்வதேச தாய் மொழி தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என பிரகடனம் செய்தது.&lt;br /&gt;தமிழ் மொழி&lt;br /&gt;ஆதி கால மனிதனின் மொழியானது சைகைகளாலும் ஓசைகளை வெளிப்படுத்தியும் தோற்றம் பெற்றது ,இன்று கருத்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மொழி விளங்குகிறது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் 30006000 வரையான மொழிகள் பேசப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனின் மொழியை இயற்கையின் மொழி என்று சிலாகிக்கின்றனர். பெரும்பாலான மொழிகள் ஏதோ ஒரு குடும்பத்தை சார்ந்தனவாகவே உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச்சேர்ந்த மொழிகள் எல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. அந்த வகையில் உலகின் புராதன மொழியாக விளங்கும் எமது தாய் மொழியான தமிழ் கூட இன்று அழிவுறும் நிலையில் உள்ளது என பல அறிஞர்கள் கூறி வருகின்றனர். சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான தமிழ் மொழி,திராவிட மொழி குடும்பத்தின் முதன்மையானதும் செம்மொழியாகவும் விளங்குகிறது. இந்தியா ,இலங்கை ,மலேசியா ,சிங்கபூர் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாகவும் ஐக்கிய அரபு இராஜியம்,தென்னாபிரிக்கா,மொரீஷயஸ், பிஜி தீவுகள்,டிரினிடாட் ஆகிய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட பத்து கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது. உலகலவில் தாய் மொழியை பேசும் மக்களின் எண்ணிக்கையில் பார்த்தால் எமது தமிழ் மொழி 18 ஆவது இடத்தில் உள்ளது. இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் தமிழர்கள் எமது மொழியைப்பேசியும் பரப்பியும் வருகின்றனர்,ஆனால் தமது பிள்ளைகளுக்கு ஏனோ அவர்கள் தமிழ் மொழி கல்வியை வழங்குவதில்லை என்பது கவலைக்குரியது.&lt;br /&gt;வரலாற்றைப்பார்த்தால் எமது மொழி கி.மு.300 நூற்றாண்டைச்சேர்ந்த பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டதாகும். வரலாற்று ரீதியாக எமது தமிழ் மொழி பல அந்தஸ்த்துகளைப்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு சிலவற்றைப்பார்ப்போம். இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாகவுள்ளது. இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் தமிழும் ஒன்று.மேலும் எமது நாடான இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று (அது முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பது வேறு விடயம்) சிங்கபூரில் நாடளாவிய அங்கீகாரம் தமிழுக்கு உண்டு.மேலும் தென்னாபிரிக்காவில் தமிழ் மொழிக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரமே உள்ளது. மலேசியாவின் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் அடக்கம்.&lt;br /&gt;செம்மொழி அங்கீகாரம்&lt;br /&gt;இந்தியாவிலும் மற்றும் உலகெங்கனும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக தமிழ் மொழிக்கு இந்திய அரசினால் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. இந்த செம்மொழி அந்தஸ்த்து பெற்ற முதலாவது இந்திய மொழியாக தமிழ் விளங்குகிறது. 2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடரின் போது அப்போதைய குடியரசு தலைவரும் தமிழ் பற்றாளருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ( ஆனால் தமிழ் நாட்டில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில்,ஏற்பாட்டாளர்களால் இவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறு)&lt;br /&gt;இன்று தமிழ் மொழி தமிழ் நாட்டின் பல இடங்களில் பல வித்தியாசமான பேச்சு மொழியாக உள்ளது.இலங்கையிலும் கூட யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் மலையகப்பகுதிகளில் தமிழ் வித்தியாசமான பேச்சு வழக்காகவே உள்ளது. சில வட்டார வழக்குச்சொற்களின் சேர்க்கையும் இதற்குக்காரணம் எனினும் பேச்சுத்தமிழ் என்று பார்க்கும் போது மேடைகளில் செந்தமிழையே அனைவரும் வழக்காக கொண்டு வருகின்றனர். காலங்காலமாக எமது தமிழ் மொழியை அறிஞர்களும் ,கவிஞர்களும் எழுதியும், பாடியும்,பேசியும் வந்திருக்கின்றனர். ஆனாலும் அந்தஸ்த்து ,தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் இன்று தமிழ் மொழி கல்வி அழிந்து வருகின்றது. தமிழ் நாட்டில் இது மிக அதிகம். நான் தமிழில் பேசி விட்டேன் என அங்கு பெருமைப்பட்டு கொள்வது ஒரு கலாசாரமாகி விட்டது.ஒருவன் தனது தாய் மொழியில் பேசுகிறேன் என்று ஆச்சரியப்படுவது எவ்வளவு மோசமான கலாசாரம்? அந்த வகையில் இலங்கை மக்களாகிய நாம் எமது தாய்மொழியை போற்றியும் வளர்த்தும் வருகின்றோம் என்பதை உறுதியாக சொல்லலாம். டாக்கா பல்கலைகழக மாணவர்கள் போல தாய் மொழிக்காக போராட்டம் செய்து உயிர் விடத்தயாராகும் படி சொல்லவில்லை. வீட்டிலும்,வீதியிலும் ஏன் தமிழர்களைக்கண்டால் தமிழிலேயே பேசுவோமே ,கல்லூரிகளில் தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி எமது மொழியின் செழுமையை வலிமையை உணரச்செய்வோமே இது வரை செய்யாவிட்டால் பரவாயில்லை இந்த வருட சர்வதேச தாய் மொழி தினத்திலிருந்து திடசங்கற்பம் பூணுவோம். ஏனெனில் தாய் வேறு தாய் மொழி வேறு அல்ல நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வகைகள்&lt;br /&gt;தமிழ்&lt;br /&gt;செந்தமிழ்&lt;br /&gt;கொடுந்தமிழ்&lt;br /&gt;முத்தமிழ்&lt;br /&gt;தனித்தமிழ்&lt;br /&gt;நற்றமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவுகள் வாரியாகத் தமிழ்&lt;br /&gt;தமிழிசை&lt;br /&gt;நாடகத் தமிழ்&lt;br /&gt;இயற்றமிழ்/இயல்தமிழ்&lt;br /&gt;ஆட்சித் தமிழ்&lt;br /&gt;சட்டத் தமிழ்&lt;br /&gt;அறிவியல் தமிழ்&lt;br /&gt;மீனவர் தமிழ்&lt;br /&gt;மருத்துவத் தமிழ்&lt;br /&gt;செம்மொழித் தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;வட்டார வழக்கு தமிழ் பிரிவுகள்&lt;br /&gt;அரிசனப் பேச்சுத் தமிழ்&lt;br /&gt;கொங்குத் தமிழ்&lt;br /&gt;யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்&lt;br /&gt;மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்&lt;br /&gt;மலேசியத் தமிழ்&lt;br /&gt;பிராமணத் தமிழ்&lt;br /&gt;முஸ்லிம்கள் தமிழ்&lt;br /&gt;திருநெல்வேலித் தமிழ்&lt;br /&gt;தஞ்சாவூர்த் தமிழ்&lt;br /&gt;மதுரைத் தமிழ்&lt;br /&gt;நாஞ்சில் தமிழ்&lt;br /&gt;செட்டிநாட்டுத் தமிழ்&lt;br /&gt;குமரிமாவட்டத் தமிழ்&lt;br /&gt;கரிசல் தமிழ்&lt;br /&gt;சென்னைத் தமிழ்&lt;br /&gt;மணிப்பிரவாளம்&lt;br /&gt;தமிங்கிலம்&lt;br /&gt;ஜுனூன் தமிழ் (இலக்கண விதிகளை மீறிய தமிழ்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-4233149946566353337?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/4233149946566353337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=4233149946566353337' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4233149946566353337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4233149946566353337'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/02/blog-post_10.html' title='சர்வதேச தாய் மொழி தினம்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-w3HPoS1N2ao/TzXt4weT8dI/AAAAAAAAARU/DwlBWD_4RuY/s72-c/Shaheed_minar_Roehl.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-6960986854448762022</id><published>2012-02-06T21:37:00.000-08:00</published><updated>2012-02-06T21:41:39.183-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>மரங்களை தறிப்பதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம்தேயிலை மீள் நடுகை பற்றி வாய்திறப்பதேயில்லை</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5706264446600140770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-0eJGFopbV_s/TzC5R_YK1-I/AAAAAAAAARI/3fcKSikIR_s/s320/baguette-bambou-nilgiris1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கம்பனிகள் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மீள்நடுகை, தேயிலை மலைகளை பராமரித்தல் போன்றவற்றில் அதிக &lt;span class=""&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-lJC_sk0u5z0/TzC4_Zo4qfI/AAAAAAAAAQ8/m6a8cS7g54I/s1600/AfterThinning.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5706264127232059890" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 192px" alt="" src="http://4.bp.blogspot.com/-lJC_sk0u5z0/TzC4_Zo4qfI/AAAAAAAAAQ8/m6a8cS7g54I/s320/AfterThinning.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அக்கறை&lt;/span&gt; காட்டப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.முக்கியமாக தரிசு நிலங்களில் புதிய தேயிலை கன்றுகளை நடுவதில்லை என்றும் ஆரம்ப காலத்தில் பயிரிடப்பட்ட மிகவும் வயது கூடிய தேயிலைச்செடிகளை நீக்கி விட்டு அவ்விடத்தில் புதிய கன்றுகளை நடுவதில் எந்த தோட்ட நிர்வாகமும் அக்கறை காட்டவில்லை என்று பரவலாகவே கூறப்பட்டு வந்தது. இதற்காக அதிக பநணத்தை செலவளிப்பதை சில நிர்வாகங்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.அதற்கு மாற்றீடாக குறைந்த செலவில் அதிக இலாபத்தை தரும் வழிமுறைகளையே சில கம்பனிகள் கையாண்டன. இதில் முக்கியமான ஒருவிடயம் பெறுமதி வாய்ந்த மரங்களை தறித்து வெளியாருக்கு விற்பதாகும். பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் காணப்படும் கருப்பந்தேயிலை,சவுக்கு மற்றும் காட்டு வேப்பம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பலகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான மரங்கள் தறித்து விற்கப்பட்டன. ஒரு சில தோட்டப்பகுதிகளில் தரிசு நிலங்களாக இருந்த இடங்களில் தேயிலைக்குப்பதிலாக மரக்கன்றுகளே நடப்பட்டன. காரணம் தேயிலையைப் போல் இதற்கு பராமரிப்பு செலவு எதுவும் இல்லை என்ற காரணம் தான். இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது,எனினும் 22 கம்பனிகளுக்கு 56 வருடங்கள் என்ற அடிப்படையில் தோட்டப்பகுதிகள் கையளிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலப்பகுதி வரை சில விடயங்களுக்கும் விட்டு கொடுப்புகளுக்கும் அரசாங்கம் உட்பட வேண்டியதாயிற்று.இதன் காரணமாக தொழிலாளர்களின் குரல் வெளிவரவேயில்லை. பெருந்தோட்டப்பகுதிகளில் மரங்கள் தறிக்கப்பட்டு வெளியாருக்கு விற்படுதல் பற்றி எவருமே வாய் திறக்க வில்லை.இதை ஒரு வர்த்தக நோக்காக அன்றி சூழலியல் தாக்கம் என்ற வகையில் கூட இலங்கையில் உள்ள எந்த ஒரு நிறுவனமே அமைப்போ கருத்து கூற வில்லை. இச்சந்தர்ப்பத்தில் தான் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு மரங்கதள தறிப்பதற்கான தடை உத்தரவை அரசாங்கம் கொண்டு வந்தது. இதற்கு பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய வற்றின் எதிர்ப்புக்குரல்கள் வழிசமைத்தன எனலாம். அதன் பிறகு மரங்ஙகள் தறிப்பது முடிவுக்கு வந்தது . இச்சந்தர்ப்பதில் பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்களை எரிபொருளுக்காக மட்டும் தறிப்பதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கேட்டிருந்தது முதலாளிமார் சம்மேளம். இந்த அனுமதியை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாகவே மேற்படி சம்மேளனம் கேட்டிருந்தது. கடந்த ஒரு வருட காலமாக இது குறித்து பேசப்பட்டு வந்தது இதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த வாரம் வழங்கியிருக்கிறது. இதை வரவேற்றுள்ள முதலாளிமார் சம்மேளனம் இந்த தடையுத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் தமது தொழிற்சாலைகளுக்கு தேவயான எரிபொருள் விறகுகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், இதற்காக இனிவரும் காலங்களில் பெருமளவு தொகையை செலவிட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது. முக்கியமான விடயம் என்னவெனில் தறிக்கப்படும் மரங்கள் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது விற்கப்படுகின்றனவா என்பது அவர்களுக்கே வெளிச்சம். மரங்களை தறிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டவுடன் முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையின் சில வசனங்களை வாசித்துப்பாருங்கள்இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலமாக, அதிகளவு செலவீனங்களின் மூலம் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு பதிலாக மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த விறகுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். எரிபொருள் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மாற்றுவழிகளில் வருமானமீட்டக்கூடியதாகவும் இது அமையும். பெருமளவான பெருந்தோட்ட கம்பனிகள் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் முற்றிலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த மரங்கள் விசேடமாக எரிபொருள் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதாவது இந்த மரங்கள் நடப்படும் பொழுதே தெரியும் என்றோ ஒரு நாள் தறிக்கப்படப்போகிறது என. இவற்றை தறிக்கும் பொழுது கூட முறையான விதிமுறைகள் கைக்கொள்ளப்படுகின்றன .&lt;br /&gt;இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தறிக்கப்படும் போது முறையான விதிமுறைகள் கையாளப்படுகின்றன எனக்கூறும் முதலாளிமார் சம்மேளனம் தறிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக மற்றுமோர் மரக்கன்று நடப்படும் என்று தெரிவிக்கவில்லை. மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளைப்பொறுத்தவரை இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை. எனினும் தேயிலைச்செடிகளுக்கு பாதுகாப்பாக மட்டுமன்றி மலையகத்துக்கு அழகு சேர்க்கும் ஒரு அம்சமாகவும் மழை வீழ்ச்சிக்கு பெரும் பங்காற்றும் காரணியாகவும் உள்ள மரங்கள் தறிக்கப்படுவது பற்றி எவருமே அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். மேலும் பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று கைவிடப்பட்ட நிலையில் பல தேயிலைமலைகள் காடு மன்றி கிடக்கின்றன. இப்பகுதிகளில் மீள் நடுகை செலவை காரணங்காட்டி சில நிர்வாகங்களும் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இன்று தோட்டப்பகுதிகளில் அதிக வேலை நாள் இன்மை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுவதற்குக் காரணம் இங்கு வாழ்வோர் சிறுபான்மையினத்தவர் என்பதினாலோ தெரியவில்லை. காரணம் இதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவராக கடமையாற்றி வருகின்றார். தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள தேசிய பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசங்களுக்கு விளக்கும் பதிலளிக்கும் பெரும் நெருக்கடியான பணியையே இதற்கு பொறுப்பான அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.இச்சந்தர்ப்பத்தில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அக்கறைப்பட அவருக்கு காலநேரம் இல்லை அதாவது பெருந்தோட்டத்துறை பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்கும் இனங்காணுவதற்கும் இவருக்கு நேரமில்லை என்பதே யதார்த்தமாகும். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எவருக்காவது இந்த பொறுப்பை கொடுத்திருக்கலாம் என்றால் அதற்கு சாத்தியமே இல்லாத நிலையே உள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க கம்பனிகள் வசம் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மீள் நடுகை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும் இல்லாவிடின் குறித்த பகுதிகள் மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அத்தோடு சரி ஒன்றுமே நடக்கவில்லை. மறுபக்கமோ அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள தேயிலை தோட்டங்கள் நஷ்டத்தில் படுபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தகவலையும் அரசாங்கமே வெளியிட்டுள்ளது. தற்போது பெருந்தோட்டப்பகுதி தொழிற்றுறையானது மிகவும் அபாயகரமான ஒரு காலகட்டத்தை சந்தித்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன.தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.இருக்கும் வளங்களை விஸ்தரித்து மேற்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக வளங்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளே ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகின்றன என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தேன். இதை வாசித்த ஒரு அன்பர் ஒரு காலத்தில் இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தது என்று எழுதும் காலகட்டம் விரைவில் வரும் என்று கவலையுடன் தெரிவித்தார். நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது எமக்கே தெரியவில்லை. ஊடகங்கள் வாயிலாக நாம் எமது சமூகம் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டினாலும் அக்கறை உள்ளவர்கள் இந்நிதலை குறித்து வாய் திறப்பார்களா? &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-6960986854448762022?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/6960986854448762022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=6960986854448762022' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/6960986854448762022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/6960986854448762022'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/02/blog-post.html' title='மரங்களை தறிப்பதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம்தேயிலை மீள் நடுகை பற்றி வாய்திறப்பதேயில்லை'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-0eJGFopbV_s/TzC5R_YK1-I/AAAAAAAAARI/3fcKSikIR_s/s72-c/baguette-bambou-nilgiris1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-7769845024683956206</id><published>2012-01-31T03:50:00.000-08:00</published><updated>2012-01-31T04:00:11.862-08:00</updated><title type='text'>சீனாவின் பட்டுப்பாதை (The Silk Road) ஆராய்ச்சியும் இலங்கையும்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உலகபொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர்,ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,&lt;span class=""&gt;தொழில்நுட்ப&lt;img id="BLOGGER_PHOTO_ID_5703764352948053522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-AvO1VUOpRWM/TyfXdYwBJhI/AAAAAAAAAQw/mGvdHM3Moj8/s320/800px-Summer_Vacation_2007%25252C_263%25252C_Watchtower_In_The_Morning_Light%25252C_Dunhuang%25252C_Gansu_Province.jpg" border="0" /&gt;ம்&lt;/span&gt; என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் &lt;span class=""&gt;தரை&lt;a href="http://4.bp.blogspot.com/-9VyaP8Pv2eU/TyfXMgW0HhI/AAAAAAAAAQk/V9bWoC4QQik/s1600/800px-Silk_route.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5703764062932049426" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 208px" alt="" src="http://4.bp.blogspot.com/-9VyaP8Pv2eU/TyfXMgW0HhI/AAAAAAAAAQk/V9bWoC4QQik/s320/800px-Silk_route.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ப்போக்குவரத்துக்காக&lt;/span&gt; பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியையும் அது கேட்டுள்ளது. அதாவது கடல் மார்க்கமாக அக்காலத்தில் வந்த கப்பல்கள் இலங்கையின் கரையோர பகுதிகளில் முழ்கியிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ள சீன அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை கோரியுள்ளது. பட்டுப்பாதை என்பது பண்டைய காலத்தில் வண்டிகளும் கடற்கலங்களும் பயணம் செய்த பாதையாகும். ஆசியாவுக்கு கூடாக சென்று ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைத்த பெருமையைப்பெறும் தரைவணிகப்பாதையாக விளங்கும் பட்டுப்பாதை சுமார் இரண்டாயிரம் வருட வரலாறு கொண்டது என்பத முக்கிய விடயம். ஐரோப்பாவிலிருந்து தரை மார்க்கமாக எகிப்து, அரேபியா ,பாரசீகம் (இன்றைய ஈரான்) இந்தியா , ஆகிய நாடுகளூடாக சீனானின் தென் பகுதி வரை இந்த பட்டுப்பாதை செல்கிறது.கடல் மார்க்கமாக பார்த்தால் மத்திய தரை கடலிலிருந்து ஆரம்பிக்கும் பாதை ஆபிரிக்காவிற்கு ஒரு பிரிவாகவும் அரேபியா,ஈரான் வழியாகவும் அங்கிருந்து இந்தியா மற்றும் இலங்கையை ஊடறுத்து சீனா மற்றும் தென்கிழக்காசியாவின் ஜாவா வரை செல்கிறது. உண்மையில் ஆசியா கண்டத்தின் தென்பகுதிகளையே கூடுதலாக இப்பாதை இணைக்கிறது. இதன் முக்கியத்துவம் உணரப்படுவதற்குக்காரணம் பண்டப்பரிமாற்றங்கள் கூடாக குறிப்பிட்ட நாடுகளிடையே வளர்ந்த நாகரிக வளர்ச்சிதான். அதாவது குறிப்பிட்ட மார்க்கமாக வணிகப்பரிமாற்றம் மட்டும் இடம்பெறவில்லை. இப்பாதை ஊடறுத்துச்செல்லும் வழியில் உள்ள நாடுகள்,நகரங்கள், அங்கு வாழும் மக்கள் பற்றியும் அவர்களின் நாகரிகங்கள் பற்றியும் பல தகவல்கள் பரப்பப்பட்ட அதே வேளை புதிய உலகொன்றை உருவாக்கும் வளர்ச்சிக்கும் இவை வித்திட்டன.மொழி மற்றும் பண்பாடு வளர்ச்சிக்கு இந்த பட்டுப்பாதை அளப்பரிய சேவையாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டைய சீனா, எகிப்து , ரோம்,மெசபெத்தேமியா,பாரசீகம்,இந்தியா ஆகிய நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்கு இந்த பட்டுப்பாதை உறுதுணை புரிந்துள்ளது என்பது உண்மையே. பெயர் வரக்காரணம்சீனாவின் கிழக்கு மாநிலமான ஷெங்சியானின் (Zhang Qian) பழம்பெரும் நகரான சிஆனிலிருந்து மத்தியதரை கடல் வரை செல்லும் மார்க்கத்தில் சீனாவின் பிரபல பட்டுத்துணிகளை கொண்டு சேர்ப்பதே அக்காலத்தின் பிரதான வணிகமாக இருந்தது. அக்காலத்தில் சீனப்பட்டிற்கு உலகளவில் ஏற்பட்ட வரவேற்பே இதற்குக்காரணம்.ஆகையால் இம்மார்க்கமூடாக பட்டுத்துணிகளே ஆரம்பத்தில் கொண்டு செல்லப்பட்டன.இதன் காரணமாக இது பட்டுமார்க்கம் (the silk Route) அல்லது பட்டுப்பாதை என அழைக்கப்படலாயிற்று. பட்டுப்பாதையின் மொத்த நீளம் சுமார் 7ஆயிரம் கிலோ மீற்றர்களாகும் சீனாவிற்குள்ளேயே இது அரைவாசிப்பகுதியை கொண்டுள்ளது என்பது தான் விசேட அம்சம்.எனினும் காலப்போக்கில் ஏனைய விடயங்களையும் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு இது விரிவடைந்தது.காலப்போக்கில் நாடுகளிடையேயான எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டவுடன் இந்த பட்டுப்பாதையும் கைவிடப்பட்டது. பட்டுப்பாதையின் மொத்த நீளம் சுமார் 7ஆயிரம் கிலோ மீற்றர்களாகும் சீனாவிற்குள்ளேயே இது அரைவாசிப்பகுதியை கொண்டுள்ளது என்பது தான் விசேட அம்சம். எனினும் சீனாவில் இன்றும் இந்த மார்க்கம் உல்லாசப்பயணிகளால் பெரிதும் கவரப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;காலகட்டம்இந்த பட்டுப்பாதை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் கி.மு 202 ஆம் ஆண்டு ஆகும். இது ஹான் (The Han Dynasty) என்ற அரசமரபுக்குரிய காலகட்டம். இந்த பரம்பரையினர் கி.மு 202 இலிருந்து கி.பி 220 வரை 426 ஆண்டுகள் சீனாவை ஆண்டனர்.இந்த காலகட்டம் சீனாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகின்றது. கைப்பணி ,வணிகம்,விவசாயம் என்று துறைகளில் சீனா முன்னேறியிருந்தது மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 5 கோடியையும் தாண்டியிருந்தது என குறிப்புகள் கூறுகின்றன. பட்டுப்பாதை வழியாக வணிகம் இடம்பெறும் போது எச்சந்தர்ப்பத்திலும் வணிகர்களுக்கு இன்னல்கள் வரக்கூடாது என்பதில் இவர்கள் அக்கறையாக இருந்தனர்.இதற்காக இவர்கள் பட்டுப்பாதை வழியெங்கும் காவற்கோபுரங்களை அமைத்திருந்தனர்.இன்றும் கூட அம்மார்க்கத்தில் சிதைந்த நிலையிலான காவற்கோபுரங்களை காணலாம்.&lt;br /&gt;ஆய்வுக்கான காரணங்கள்சரி வாசகர்களே பட்டுப்பாதை பற்றிய வரலாற்றைப்பார்த்து விட்டோம்.இனி சீனா ஏன் இந்த இரண்டாயிரம் வருடம் பழமையான பாதை பற்றிய ஆய்வை ஏன் மேற்கொள்ளப்போகின்றது என்பதையும் பார்க்க வேண்டும். கடல் மார்க்கமாக சீனாவுக்கு வந்த சுமார் 75 கப்பல்களின் சிதைவுகள் காலி துறைமுகத்தை சூழவுள்ள பகுதிகளில் இருப்பதாக தெரிவித்துள்ள சீனா இதில் 25 கப்பல் சிதைவுகள் குறித்த ஆவணங்களும் உள்ளதாகத்தெரிவித்துள்ளது. மேற்படி கப்பல்களை ஆராய்வதற்கு நிபுணர்களை ஈடுபடுத்துவது குறித்தே அனுமதியை சீனா கேட்டுள்ளது. கடலுக்கடியில் இருக்கும் கப்பற் சிதைவுகளை ஆராயும் அளவிற்கு சீனாவின் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதா என இந்தியாவும் அமெரிக்காவும் வாய் பிளக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு இதில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.ஏற்கனவே இலங்கையில் தனது தலையீட்டை பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் ஸ்திரப்படுத்தியிருக்கும் சீனா, கப்பல் ஆராய்ச்சி என்ற பெயரில் தனது பிராந்திய பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு அதற்கு தக்கபடி திட்டங்களை வகுக்கப்போகின்றதோ என்ற அச்சமும் இந்தியாவுக்கு தோன்றாமலில்லை. பிராந்திய வல்லாதிக்கம் என்ற விடயத்தில் இந்தியாவும் சீனாவும் தென்னாசியாவிலுள்ள பல சிறிய நாடுகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தம்வசப்படுத்தி வருகின்றன. துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய கட்டுமானத்திட்டங்களுக்கு இலங்கைக்கு சீனாவே பல வழிகளில் உதவி வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ள சீனா அனுமதி கேட்கும் போது இலங்கைக்கு மறுக்கத்தான் முடியுமா? இது தொடர்பாக பரிசீலனை இடம்பெற்று வருவதாக இலங்கை தொல்லியல் திணைக்களம் கருத்துத்தெரிவித்துள்ளது. இவ்விடயத்தில் நழுவல் போக்கை இலங்கை கடைபிடிக்க முடியாது. அதே நேரம் தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வழிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது என இந்தியா பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருகின்றது. இன்னமும் சில நாட்களில் இராமயண காலத்து பாலம் குறித்த ஆராய இந்தியா இலங்கையிடம் அனுமதி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளிடம் அகப்பட்டுக்கொண்டு முழி பிதுங்கி நிற்கும் நிலை இலங்கைக்கு வரப்போகின்றது என்பதே உண்மை. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-7769845024683956206?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/7769845024683956206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=7769845024683956206' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/7769845024683956206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/7769845024683956206'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/01/silk-road.html' title='சீனாவின் பட்டுப்பாதை (The Silk Road) ஆராய்ச்சியும் இலங்கையும்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-AvO1VUOpRWM/TyfXdYwBJhI/AAAAAAAAAQw/mGvdHM3Moj8/s72-c/800px-Summer_Vacation_2007%25252C_263%25252C_Watchtower_In_The_Morning_Light%25252C_Dunhuang%25252C_Gansu_Province.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-1656311265732123536</id><published>2012-01-18T20:36:00.001-08:00</published><updated>2012-01-18T20:38:21.046-08:00</updated><title type='text'>நடராஜா டீச்சர்....! சில நினைவுகள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-yxUD5DFcJTM/Txed2wiAgRI/AAAAAAAAAQY/fYTHLOX-G0I/s1600/nada.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5699197417526690066" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 197px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/-yxUD5DFcJTM/Txed2wiAgRI/AAAAAAAAAQY/fYTHLOX-G0I/s320/nada.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நமது வாழ்க்கையில் சிறு வயது ஞாபகங்கள் என்பதை பொறுத்த வரை நம்மோடு அதிகமாக அன்போடு பழகியவர்கள் அல்லது வழிநடத்தியவர்கள் ,இவர்களுக்கு அப்பாற்பட்டு எம்மோடு கடுமையாக நடந்து கொண்டவர்களையும் மறக்க முடியாது. எனினும் பாடசாலை வாழ்க்கையில் எமக்கு கல்வி போதித்தவர்களில் எக்காலமும் மறக்க முடியாத ஒரு சிலரே மனதை தொட்டு செல்கின்றனர்.எங்கு கண்டாலும் மனம் நெகிழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துபவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் எ னக்கு அரிவரி சொல்லிக்கொடுத்த ஆசிரிய அன்னை தான் நடராஜா டீச்சர் என்று நாங்கள் வாய் ஓயாமல் அழைக்கும் ராஜேஸ்வரி டீச்சர். எனக்கு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது . தரம் 2 மற்றும்தரம் 3 களில் எமது வகுப்பாசிரியராக இருந்து எமக்கு அற்புதமான கல்வியைப் புகட்டியவர். இந்த சின்ன வகுப்பில் நடந்த சம்பவங்கள் எப்படி ஞாபகம் இருக்கும் என்று பலரும் நினைக்கக்கூடும் அதற்கு வழிசமைத்தது எங்கள் கல்லூரிதான். மிகச்சிறந்த ஒழுக்க பண்புகளை போதித்து ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கக் கற்று கொடுத்த அதே நேரம் எவருக்கும் கிடைக்காத அற்புதமான ஆசிரியர்களை பெற்று ஒரு பொற்காலத்தை உருவாக்கித்தந்தது எமது கல்லூரி. நடராஜா டீச்சர் ... ஒரு ஆசிரியையாக அல்லாது தனது பிள்ளைகளாக எம்மை வளர்த்த விதம் பசுமரத்தாணியாக பதிந்துள்ளது. எமக்கு சைவசமய பாடம் எடுக்கும் நேரம் தேவாரத்தை ஒரே மூச்சில் நான் கூறுவதை கேட்டு நல்ல பிள்ளை என்று கூறியதை எப்படி மறக்க முடியும் ? எவரிடமும் பேதம் காட்டாது அனைவரையும் ஒரே பிள்ளைகளாக கருதி பாடம் போதித்தார். தரம் 5 இற்குப்பிறகு நாம் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தை விட்டு பிரதான கல்லூரி மண்டபத்திற்கு செல்லும் போது கண்கலங்கி டீச்சர மறந்துடாதிங்கடா இங்க வந்து பார்க்கனும் சரியா என சொன்ன காட்சி மனதை விட்டு அகல மறுக்கிறது. உயர்கல்வி கற்று பாடசாலையை விட்டு பிரிந்து சென்று பிறகும் எங்கு கண்டாலும் அதே பாசப்பிணைப்போடு கதைக்கும் பாங்கு ஒரு சில ஆசிரியர்களுக்கு உரித்தானது . அதில் முதன்மையான இருவரில் ஒருவர் நடராஜ் டீச்சர் மற்றவர் மரியதாஸ் டீச்சர். நான் கடமையாற்றும் வீரகேசரி காரியாலத்திற்கு வருகை தந்து பெருமை பொங்க என் மாணவன் நீ ,உன்னுடைய ஆக்கங்கள் ஒன்றை கூட நான் வாசிக்காமல் இருந்ததில்லை என்று சொல்லிய அந்த நாளை எனக்கு மறக்க முடியாது டீச்சர். நீங்கள் மரித்தாலும் உங்கள் ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்த்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அரிவரி சொல்லிக்கொடுத்தாய் அன்னையாய் விளங்கினாய்உன்னால்அறிவேற்றங்கொண்டோர் கண்டு உளம் மகிழ்ந்தாய்என் பிள்ளைகள் என்று சொல்லி மனம் பூரித்தாய்இன்று எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாய் உன்னால்ஏற்றம் கண்ட நாம் இப்போது கண்ணீர் துளிகளைகாணிக்கை மாலைகளாக தர வேண்டிய சூழல் !உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்துயரங்களுடன்&lt;/em&gt;,&lt;br /&gt;&lt;strong&gt;அன்பு மாணவன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-1656311265732123536?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/1656311265732123536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=1656311265732123536' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1656311265732123536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1656311265732123536'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/01/blog-post_18.html' title='நடராஜா டீச்சர்....! சில நினைவுகள்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-yxUD5DFcJTM/Txed2wiAgRI/AAAAAAAAAQY/fYTHLOX-G0I/s72-c/nada.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-2569483499648289324</id><published>2012-01-17T02:46:00.000-08:00</published><updated>2012-01-17T03:33:22.203-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>இலங்கையில் தேயிலை பரியிடப்பட்டு 145 வருடங்கள்…!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-J-qFt0Fm0Ng/TxVbN7_3eyI/AAAAAAAAAQM/Jrl5yGumURo/s1600/DSCF0702.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5698561198509226786" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/-J-qFt0Fm0Ng/TxVbN7_3eyI/AAAAAAAAAQM/Jrl5yGumURo/s320/DSCF0702.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இலங்கையில் வர்த்தக நோக்கத்திற்காக தேயிலை பயிரிடப்பட்டு 2012 ஆம் ஆண்டோடு 145 வருடங்களாகின்றன. முதன் முதலாக 1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லரால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் தோட்டத்தில் 19 ஏக்கர் விஸ்தீரணத்தில் தேயிலை வர்த்தக நோக்கத்திற்காக முதன் முதலில் பயிரிடப்பட்டது. ஆங்கிலேயர்களால் பயிரிடப்பட்டாலும் பராமரிப்பில் இத்தனை வருடங்கள் இத்தொழிலில் தம்மை அர்ப்பணித்த தொழிலாளர் வர்க்கத்தினர் பெருமிதத்தோடு பார்க்கப்பட வேண்டியவர்கள். இன்று நாட்டின் தேசிய உற்பத்தியிலும் கணிசமான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இந்த தேயிலை தொழிற்றுறை குறித்து அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் கவலை தருபவனவாக உள்ளன. பெருந்தோட்டங்கள் சிறு ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு சிறு தேயிலை தோட்டங்களாக மாறி வருகின்றமை, மற்றும் நிர்வாகங்களால் உரிய பராமரிப்பின்மை , இதன் காரணமாக தொழிலாளர்கள் வேறு தொழிலை நாடுதல் , நிர்வாக அழுத்தங்கள் என பல்வேறு வகையான சவால்களை இன்று இத்துறை எதிர்நோக்கியுள்ளது. எனினும் 145 வருடங்கள் என்று பார்க்கும் போது தேநீர் அருந்துதல் என்ற விடயம் எமது நாட்டை பொறுத்தவரை மரபு வழி அம்சமாகவே உள்ளதை அவதானிக்கலாம். தேயிலை பரியிடாத ஏனைய நாடுகள் தேநீரை இன்று பல்வேறு வகைகளில் ,வடிவங்களில் தயாரித்து நுகர்வோரை கவர்வதில் அக்கறை காட்டுகின்றன. நம் நாட்டை பொறுத்தவரை இது சாத்தியமான விடயமா என்பதை யோசிக்க வேண்டும். உதாரணமாக மேலை நாடுகளில் இன்று எனப்படும் சிறிய தேயிலை பக்கற்றுகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் ice Tea எனப்படும் குளிர் தேநீர் பானம் பிரபலமானது. தற்போது அமெரிக்காவில் மென்பானங்களுக்கு ஈடாக இந்த குளிர் தேநீர் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் இந்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் என்ன என்பது இத்துறையோடு தொடர்புடைய சந்தைப்படுத்தல் நிபுணர்களின் கேள்வியாகவுள்ளது.&lt;br /&gt;&lt;strong&gt;RTD –Ready to Drink&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் அதிக அக்கறை கொண்டியங்குகின்றன. அங்குள்ள தொழில்களும் அப்படியானவை. இதன் காரணமாகவே அங்குள்ள வாழ்வியல் கோலங்களை இயந்திரமயமான வாழ்க்கை என வர்ணிக்கின்றனர். இதன் காரணமாக சடுதியாக தமது காரியங்களை ஆற்றக்கூடிய நிலையில் அம்மக்கள் உள்ளனர். இதன் காரணமாக அருந்துவதற்கு தயாராக உள்ள பானங்களை ( ஆங்கிலத்தில் RTD –Ready to Drink ) இவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இவ்வகை தேநீர் பானங்கள் பிரபலம்.மக்கள் இதை விரும்பி வாங்கி பருகுகின்றனர். அமெரிக்காவில் மட்டுமன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இன்று இந்த ரக தேநீர் பானங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. எனினும் போத்தல்களில் அடைக்கப்பட்ட தேநீரை விட அண்மைக்காலமாக ஐஸ் டீ எனப்படும் குளிர் தேநீர் பிரபலமாகி வருகின்றது. இதன் காரணமாக ஏனைய மென்பானங்களின் விற்பனையுடன் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே உற்பத்தி பொருளை ஒரே வடிவத்தில் எத்தனை நாளுக்கு தான் மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருப்பது ? ஒரு மாற்றம் வேண்டாமா என்று தான் இந்த முயற்சி . சரி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தேநீர் இவ்வாறு மறு வடிவம் பெற்று அங்குள்ளோரை கவர்ந்துள்ளது. பிரதானமாக இந்த தேயிலையை உற்பத்தி செய்து உலகம் எங்கும் விநியோகிக்கும் இலங்கை,கென்யா,இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் ஏன் இந்த முறை பிரபலமாகவில்லை ?எல்லது ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல இந்நாட்டு மக்கள் பாரம்பரிய நெறிகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். போத்தலில் இருக்கும் தேயிலை தூளை தேயிலை வடியில் இரண்டு கரண்டி போட்டு அதில் சுடு நீரை இட்டு பெறப்படும் சாயத்தண்ணியில் சீனி விட்டு பருகுவது இல்லாவிடின் அதில் பால் கலந்து பருகுவது என இவர்கள் வாழ்க்கை இப்படி போகிறது. சீனாவிலும் கூட மிகப்பிரபலமான கிரீன் டீ தகர டின்களில் அடைக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது. சீன கிரீன் டீக்கு உலகம் முழுவதும் வரவேற்பிருப்பது நாம் அறிந்ததே. சரி இந்த நாடுகளில் ஐஸ் டீயை அறிமுகப்படுத்தினால் வரவேற்பு இருக்குமா?முதலில் சூடாக நாம் பருகும் தேநீருக்கும் குளிர்பானமாக பருகும் ஐஸ் டீக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளல் அவசியம். வழமையாக நாம் பருகும் தேநீரில் சீனியை த்தவிர வேறு எந்த இரசாயன கலவைகளோ செயற்கை தாது பொருட்களோ இல்லை என்பது நிச்சியம். ( தேநீரில் இயற்கையாக உள்ள அதே நேரம் அதிக பக்கவிளைவை ஏற்படுத்தாத ரனின் என்ற நச்சு பதார்த்தம் இதில் அடக்கம்) ஆனாலும் ஐஸ் டீ எனப்படும் போது வர்ணப்பொருட்கள் மற்றும் கார்பனேட் பொருட்கள் கலக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இயற்கையாக தேநீரில் உள்ள சுவையை கூட்ட அல்லது வித்தியாசப்படுத்த இவை சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக தேநீரானது அதன் இயற்கையான சுவையிலிருந்து விலகிச்செல்கின்றது என்பது கண்கூடு. உலகப்பிரச்சித்த பெற்ற சீனாவின் கிரீன் டீயானது வெறும் சுடு நீரில் வேக வைக்கப்பட்டு சீனியோ அல்லது வேறு எந்த சுவையூட்டியோ சேர்க்காமல் பருகப்படுவதற்கு காரணமே அதன் இயற்கையான சுவையை அனுபவிப்பதற்கு தான். இருப்பினும் மேற்குல நாட்டு மக்களின் உணவு முறை பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை என்பது நாம் அறிந்ததே. அமெரிக்காவில் மட்டும் உடனடியாக அருந்துவதற்கு தயாராக இருக்கும் தேநீரின் 2009 ஆம் ஆண்டு சந்தைபுரழ்வு பெறுமதி 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த வருடம் இது 11 பில்லியனை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாருங்கள் வாசகர்களே நமது தொழிலாளர்கள் வியர்வை சிந்தி கடினப்பட்டு 145 வருடங்கள் உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பதோ வெறும் டஸ்ட் தேயிலை தானே ; ஆனால் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உயர் இரகமாக இன்று ஐரோப்பிய நாடுகளின் அரச குடும்பங்களும் ஏனைய உயர் அந்தஸ்த்து உள்ளவர்களும் பருகும் பானமாக விளங்குகிறது. அமெரிக்காவில் மாற்று வடிவம் பெற்று வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆக மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்ற முடியாது ஒன்று என்பதற்கு ஏற்ப எல்லாமே மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றன. எனினும் இலங்கையோ தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகியும் அத்துறையின் பழைய பல்லவிகளையே பாடி வருகின்றது. கொழுந்து பறிப்பவர்களும் இன்று நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அதே வடிவிலான ஆடைகளே அணிகின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இல்லை. ஏதோ இப்போது சிலர் செருப்புகள் அணிந்து செல்கின்றனர். எனினும் இலங்கையில் மிகப்பழைய இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்ற பாரிய தொழிலாளர் விசையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற தேயிலை தொழிற்றுறை மாற்றங்களுக்குட்பட வேண்டும் என்பதே பலரினதும் அவா. ஆனால் இதில் எந்த விதத்திலும் தொழிலாளர்களோ தேநீரின் பாரம்பரிய அம்சங்களோ மாறி விடக்கூடாது என்பது முக்கியமானது. ஆகவே புதிய,நவீன யுக்திகளை புகுத்தும் யோசனைகளே இப்போதைய தேவையே ஒழிய இந்த தொழிற்றுறையையும் அதனோடு தொடர்புடைய மக்களின் வாழ்வியல் விடயங்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருவதை உரியோர் நிறுத்திக்கொள்ளல் அவசியம்.&lt;br /&gt;சிவலிங்கம் சிவகுமாரன்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-2569483499648289324?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/2569483499648289324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=2569483499648289324' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/2569483499648289324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/2569483499648289324'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/01/145.html' title='இலங்கையில் தேயிலை பரியிடப்பட்டு 145 வருடங்கள்…!'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-J-qFt0Fm0Ng/TxVbN7_3eyI/AAAAAAAAAQM/Jrl5yGumURo/s72-c/DSCF0702.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-7216105296334577416</id><published>2012-01-10T20:30:00.000-08:00</published><updated>2012-01-10T20:36:59.899-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>அரபு, இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-IcuPOmeOtNM/Tw0QnXc6vuI/AAAAAAAAAP0/blqyjAnutqI/s1600/2l.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5696227372189794018" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 181px" alt="" src="http://3.bp.blogspot.com/-IcuPOmeOtNM/Tw0QnXc6vuI/AAAAAAAAAP0/blqyjAnutqI/s320/2l.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஷகார் குல் மீட்கப்பட்ட போது&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3ZF9O65pWOs/Tw0QzoxUyxI/AAAAAAAAAQA/f0SBUV4HpXQ/s1600/4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5696227582997220114" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/-3ZF9O65pWOs/Tw0QzoxUyxI/AAAAAAAAAQA/f0SBUV4HpXQ/s320/4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மரியம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் எந்தளவிற்கு இறுக்கமான கலாசாரம் பேணப்படுகின்றதோ அந்தளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் தலைவிரித்தாடுவதை கூறாமல் இருக்க முடியாது. பெண்கள் கல்வி கற்பதற்கு தடை, உடலின் எப்பாகமும் வெளியே தெரியும் படி ஆடைகள் அணிந்தால் கடுமையான தண்டனை , பெண்கள் என்றால் வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும் இப்படி பல கடுமையான சட்ட திட்டங்களை வகுத்த தலிபான்களால் கூட ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக மிக மோசமாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளது. இதற்கு இவர்கள் பெண்களுக்கு எதிராக வகுத்த கடுமையான சட்டங்களே காரணமாகிவிட்டன. கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் 15 சிறுமிக்கு இடம்பெற்ற சம்பவம் வெளிவந்ததையடுத்து உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் அரபுலகம் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான சித்திரவதைகள் ,கொடுமைகள் போன்றவற்றை பகிரங்கப்படுத்தி இந்தப்பெண்கள் சிறுமிகள் படும் அவஸ்த்தைக்கு முற்றுப்புள்ள வைக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பியுள்ளன. அப்படி என்ன தான் நடந்தது ஆப்கானில் ?ஆப்கானிஸ்தானின் வட பிராந்திய மாநிலம் தான் பக்லான் . இங்கு வாழும் 30 வயதுடைய ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டவள் தான் 15 வயது சிறுமியான ஷகார் குல். ஏழு மாதத்திற்கு முன்னர் தமது பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததாகவும் அதன் பின்னர் தமது மகள் தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்க வில்லையென ஷகார் குல்லின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். விசாரணைகளின் பின்னர் ஷகாரை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினர் பொலிஸார். இறுதியில் பக்லான் பிராந்தியத்தின் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் மலசலகூட அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஷகாரை கண்டு பிடித்தனர் பொலிஸார். ஆனால் அந்த சிறுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர், காரணம் நகங்கள் பிடுங்கப்பட்டு உடம்பெங்கும் சிகரட்டுகளால் சுடப்பட்ட காயம் மற்றும் பலமாக தாக்கியதால் தலை மற்றும் கண் பகுதிகளில் இரத்தம் வழிந்தோடிய நிலையில் கிட்டத்தட்ட அரைவாசி இறந்த விட்ட நிலையிலேயே அவர்கள் ஷகாரை மீட்டுள்ளனர். விசாரித்துப்பார்த்ததில் ஷகார் அரை குறையாக சொன்ன தகவல்கள் பொலிஸாரை திடுக்கிட வைத்தன. தனது கணவர் தன்னை கட்டாய விபசாரத்தில் ஈடு பட சொன்னதாகவும் மறுத்ததால் அடித்து உதைத்ததாகவும் கூறிய இவர் பின்னர் தனது கணவனின் சகோதரிகள் அனைவரும் தன்னை விபசாரத்தில் ஈடுபடுமாறும் அதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும் வற்புறுத்தி அடித்து சித்திரவதை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர்களின் கட்டாயத்திற்கு தான் மறுத்த காரணத்தினாலேயே தன்னை கடந்த 5 மாதங்களாக வீட்டின் கீழ்த்தளத்திலுள்ள மலசலகூடத்தில் அடைத்து வைத்ததாகவும் சிறிதளவு உணவு நீரே வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். நினைத்த நேரத்தில் அறைக்குள் புகுந்து தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிகள் தன் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கும் ஷகாரின் முழு வாக்குமூலத்தையும் பெறும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர். தற்போது இச்சிறுமி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஷகாரின் கணவன் தலைமறைவாகி விட அவரின் சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் பெண்களைப்பொறுத்தவரை ஏற்படுத்தப்பட்டுள்ள கடுமையான சட்ட திட்டங்களை தமக்கு சாதகமாகப்பயனபடுத்திக்கொள்ளும் குற்றச்சம்பவங்களே நாள் தோறும் இடம்பெறுகின்றன.இதில் பெண்களும் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும். ஆப்கானிஸ்தானின் சுதந்திர மனித உரிமை ஆணைக்குழுவின் புள்ளி விபரங்களின் படி கடந்த ஆண்டின் இரண்டாது காலாண்டு வரை பெண்களுக்கெதிராக 1026 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் மற்றுமோர் கடுமையான வழிமுறை தான் கௌரவக்கொலைகள். ஒரு குடும்பத்தில் உள்ள பெண் கலாசார விதிமுறைகளை மீறி நடந்ததாகவோ ,அல்லது நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டாலோ குடும்பத்தினரே அப்பெண்ணை கொலை செய்யும் முறைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகை நிதியத்தின் அறிக்கைகளின் படி வருடந்தோறும் இவ்வாறு தமது சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேலாகும். அதிகமாக மத்திய கிழக்கு மற்றும் தென் மேற்கு ஆசிய நாடுகளிலேயே இந்த கொடுமைகள் இடம்பெறுகின்றன.இதில் துயரமான சம்பவம் என்னவெனில் குறித்த பெண்ணுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொண்ட அல்லது காரணமான ஆணுக்கு எந்த தண்டனையும் இல்லை என்பதே. எனினும் இதில் மத கோட்பாடுகள் ,சட்டங்கள் செல்வாக்கு செலுத்துவதால் பலரும் இது குறித்து பேசத்தயங்குகின்றனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;“ நூறு முறை கொல்வேன்&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;“2011 ஆம் ஆண்டு வெளிவந்த சம்பவம் இது. ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த மொகமட் சாபியா என்பவர் தனது மூன்று மகள்மார் ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்பதை அறிந்து 2009 ஆம் ஆண்டு அவர்களை கொலை செய்து புதைத்துள்ளார். அவர் இப்போது கனடாவில் வசிக்கிறார். எனினும் கடந்த ஆண்டே இந்த விடயம் வெளிஉலகுக்கு வந்தது. இவர் மீது வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் கனடா பொலிஸார். தான் செய்ததை நியாயப்படுத்தும் சாபியா தனது மகள்மார் மூவரும் நூறு தடவைகள் உயிர் பெற்று வந்தாலும் நூறு தடவைகள் கொலை செய்வேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய காரணத்தினாலேயே தான் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். நான் ஒன்றும் கெட்டதை செய்ய வில்லையே என்கிறார். கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் முறையே 13,17,19 வயதையுடையவர்கள்.இந்தியாவிலும் இடம்பெறுகிறதுஎமது அண்டைய நாடான இந்தியாவில் கூட கௌரவக்கொலைகள் இடம்பெறுகின்றன.இதுவும் கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற ஒரு சம்பவம். இஸ்லாமிய மதத்தவர்கள் ஏனைய மதத்தவர்களுடனான திருமண பந்தத்தை அனுமதிப்பதில்லை. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணோ பெண்ணோ இஸ்லாமிய மதத்தை தழுவ வேண்டும்.அதன் பிறகே அனுமதி குறித்து பேசப்படும். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் பாக்பாத் எனும் இடத்தில் தமது மகள்மார் இருவரும் இந்து மதத்து இளைஞர்களை திருமணம் முடித்த சம்பவத்திற்காக இரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தாய்மார்கள் மகள்மாரை கொலை செய்துள்ளனர்.அவர்களது கழுத்தில் கயிற்றை கட்டி வலுக்கட்டாயமாக தூக்கிட்டு கொன்றுள்ளனர் இத் தாய்மார்.கௌரவக்கொலைகள் மூலமாக மட்டுமே அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது தான். வன்முறைகளில் இதுவும் ஒரு பகுதியே, முக்கியமாக அரபு நாடுகளில் கடுமையாக அமுல்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீயா சட்டம் மூலம் பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதில் ஆண்களும் உள்ளடக்கப்படுவர் என்றாலும் சந்தர்ப்பங்கள் குறைவே. மதத்தோடு சார்ந்து சட்ட முறைகளாக இவற்றை பின்பற்றுவதால் மேற்குல மனித உரிமை ஆர்வலர்கள் என்ன தான் கத்தினாலும் இவற்றை அரபுலக ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. இதே வேளை உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ,சிரியா, ஆகிய நாடுகளிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. வீட்டு வன்முறைகளில் இவை தங்கியுள்ளதால் அதிகமாக பொலிஸ் முறைப்பாடுகளும் செய்யப்படுவதில்லை. மிக இறுக்கமான கலாசாரத்தை பேணும் ஈரான் நாட்டிலும் பெண்கள், குழுக்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிகத்துள்ளன. இதை விட பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன் வந்து சொல்வதற்கு அங்கு சுதந்திரமில்லை. உதாரணத்திற்கு ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். ஈரானின் சமத்துவத்தை பேணல் அமைப்பின் உறுப்பினர் மரியம் பார்மன். கடந்த வருடம் மார்ச் மாதம் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் பெண்கள் நிலை பற்றிய இவர் உரையாற்றியிருந்தார். இதில் இவர் ஈரானில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்ட தவறவில்லை. ஆனால் நாடு திரும்பிய இரண்டு மாதங்களுக்குள் இவர் கைது செய்யப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமை, ஈரான் தொடர்பான தவறான தகவல்களை உலகம் அறியச்செய்தமை, போராட்டங்களில் பங்கெடுத்தமை, அதை விட நாட்டின் அதிஉச்சபீடத்திற்கு அபகீர்த்திடைய ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காக இவர் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. தற்போது சிறைப்படுத்தப்பட்ட மரியமை விடுதலை செய்யக்கோரி உலகெங்கினும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-7216105296334577416?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/7216105296334577416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=7216105296334577416' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/7216105296334577416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/7216105296334577416'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/01/blog-post_10.html' title='அரபு, இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-IcuPOmeOtNM/Tw0QnXc6vuI/AAAAAAAAAP0/blqyjAnutqI/s72-c/2l.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-6139430666497635251</id><published>2012-01-10T01:42:00.000-08:00</published><updated>2012-01-10T01:45:47.294-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>உங்கள் சூரியகாந்தி இன்று முதல் இணையத்தில்!</title><content type='html'>மலையகத்தின் தனித்துவ குரலாக வலம் வரும் சூரியகாந்தி பத்திரிகையை இன்று முதல் வாகர்கள் இணையத்தில் இ.பேப்பர் வடிவில் (E-Paper) &lt;a onmousedown="'UntrustedLink.bootstrap($(this)," href="http://www.sooriyakanthi.lk/" target="_blank" rel="nofollow nofollow"&gt;www.sooriyakanthi.lk&lt;/a&gt; என்ற முகவரியில் கண்டு மகிழழாம்.இதன் மூலம் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சூரியகாந்தியையும் எமது மக்களைப்பற்றியும் அறியக்கூடியதாகவிருக்கும் அதே நேரம் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள ஏது வ.ாக அமையும் நவீன தொழிற்நுட்பத்திற்கேற்ப சூரியகாந்தி பத்திரிகையின் மற்றுமொரு பரிணாமமாக இது விளங்குகிறது. தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற இந்திய வம்சாவளி மக்களில் பெருந்தொகையானோரைக்கொண்டு குறிப்பிடத்தக்க சமூகமாக விளங்கும் மலைய மக்களுக்கென தனியானதொரு முதல் பத்திரிகையாக பரிணமிக்கும் சூரியகாந்தியின் வளர்ச்சியில் தொடர்ந்தும் வாசகர்களின் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-6139430666497635251?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/6139430666497635251/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=6139430666497635251' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/6139430666497635251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/6139430666497635251'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2012/01/blog-post.html' title='உங்கள் சூரியகாந்தி இன்று முதல் இணையத்தில்!'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-3565370873895744929</id><published>2011-12-29T19:38:00.000-08:00</published><updated>2011-12-29T19:45:01.085-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>கொல வெறி பாடல் வரிகள் தமிழில்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-ah7T3C38EW4/Tv0zjMpGHsI/AAAAAAAAAPo/WMPdktaexZg/s1600/laveri_Di_Lyrics%252C_Dhanush_-_Why_This_Kolaveri_Di_Mp3_Song_Download_Free%252C_Dhanush_-_Why_This_Kolaveri_Di_Video_Song_Download_Free__%257E_Lyricspassion_blogspot_com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5691762183848206018" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://2.bp.blogspot.com/-ah7T3C38EW4/Tv0zjMpGHsI/AAAAAAAAAPo/WMPdktaexZg/s320/laveri_Di_Lyrics%252C_Dhanush_-_Why_This_Kolaveri_Di_Mp3_Song_Download_Free%252C_Dhanush_-_Why_This_Kolaveri_Di_Video_Song_Download_Free__%257E_Lyricspassion_blogspot_com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஹலோ போய்ஸ் ஐ எம் சிங்கிங் ஸோங்... &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;சூப் ஸோங்..புளொப் &lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ரிதம் கெரக்ட்…&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மெயிண்டெய்ன் &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;திஸ்வை திஸ் கொல வெறி? டி..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;டிஸ்டன்ஸ்ல மூனு மூனு &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மூனு கலரு வைட்டு.. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வைட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;நைட்டு கலரு பிளக்கு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வைட்டு ஸ்கின்னு கேர்ள்ளு கேர்ள்ளு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;கேர்ள்ளு ஹார்ட்டு பிளக்கு..!&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு.. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மை பியூட்சர் டார்க்கு..!&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மாமா நோட்ஸ் எடுத்துக்கோ ..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அப்படியே கைல ஸ்னெக்ஸ் எடுத்துக்கோ..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;பாபா பா பா பாபா பாபா பா பா…&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;சரியா வாசி..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;சூப்பர் மாமா ரெடி ரெடி 1 2 3 4.. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வட் எ சேஞ்ச் ஓவர் மாமா..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஓ கே மாமா நவ் டியூன் சேஞ்சு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;கைல கிளாசு.. ஒன்லி இங்கிலிஷ்சா..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஹேண்ட்ல கிளாசு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;கிளாஸ்ல ஸ்கொட்ச்சு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஐஸ்ல புல்லா டியரு..!&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;எம்டி லைப்பு கேர்ள் கம்மு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;லைப்பு ரிவர்சு கியரு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;லவ்வு லவ்வு ஓ மை லவ்வு &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;யூ ஷோ டு மீ பவ்வு..! &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;கவ்வு கவ்வு ஹொலி கவ்வு &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஐ வோண்ட் யூ ஹியர் நவ்வு..! &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;கோட் ஐயாம் டையிங் நவ்வு.. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஷீ இஸ் ஹெப்பி ஹவ்வு..! &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;திஸ் ஸோங்கு போர் சூப் போய்சு.. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வீ டோண்ட் ஏவ் ச்சொய்சு..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;புளொப் ஸோங்..&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;நோ டமில் ஒன்லி இங்கிலிசு..!&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onclick="'CSS.addClass($("&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-3565370873895744929?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/3565370873895744929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=3565370873895744929' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3565370873895744929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3565370873895744929'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/12/blog-post_29.html' title='கொல வெறி பாடல் வரிகள் தமிழில்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ah7T3C38EW4/Tv0zjMpGHsI/AAAAAAAAAPo/WMPdktaexZg/s72-c/laveri_Di_Lyrics%252C_Dhanush_-_Why_This_Kolaveri_Di_Mp3_Song_Download_Free%252C_Dhanush_-_Why_This_Kolaveri_Di_Video_Song_Download_Free__%257E_Lyricspassion_blogspot_com.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-1520165706744883343</id><published>2011-12-27T21:03:00.000-08:00</published><updated>2011-12-27T21:12:06.816-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>இந்திய வம்சாவளி மக்களை அடிமைகளாக சித்திரிக்கும் போக்கு மாற வேண்டும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-NF9o_ZPgT2I/TvqkgdVCIRI/AAAAAAAAAPc/jwzb78Z7Fek/s1600/1252407478hXCkLKL.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5691041956671660306" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px" alt="" src="http://4.bp.blogspot.com/-NF9o_ZPgT2I/TvqkgdVCIRI/AAAAAAAAAPc/jwzb78Z7Fek/s320/1252407478hXCkLKL.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்போர் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது தான் . தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி வந்த இந்த மக்கள் கூட்டத்தினாலேயே மலையகம் எனும் பிரதேசம் உருவாகியது. தமது இடைவிடாத உழைப்பின் மூலம் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை &lt;span class=""&gt;உருவா&lt;img id="BLOGGER_PHOTO_ID_5691041082302836914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-8DOyYMM5TQc/TvqjtkDQsLI/AAAAAAAAAPQ/yP4hDa3r3cQ/s320/DSC_2630.JPG" border="0" /&gt;க்கினர்&lt;/span&gt;. எனினும் இவர்களை அடிமைகளாக சித்திரிக்கும் அதே நேரம் இன்னமும் இந்த மக்கள் கூட்டம் எந்த வித அடிப்படை உரிமைகளும் இன்றியே வாழ்ந்து வருகின்றனர் என்றும் இவர்கள் அரசியல் அனாதைகள் என்றும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இச்செய்கை ஒரு விதத்தில் இந்த மக்கள் கூட்டத்தினரை பரிதாபமாக பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. மலையகத்திலிருந்து உருவான இலக்கியவாதிகள் சிலரும் பத்திரிகையாளர்களும் கூட இன்னமும் இந்த மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்ற போக்கிலேயே பேசியும் எழுதியும் வருகின்றனர். இலங்கையின் ஏனைய சமுகத்தினரைப்போல அல்லாது எல்லா அம்சங்களுமே இந்த மக்களுக்கு மிக தாமதமாகவே கிடைத்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு நாட்டில் வாழ்வதற்குரிய பிரஜா உரிமை கிடைத்ததே இம்மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். கல்வி ,குடியிருப்பு,சுகாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் கூட எதிர் நீச்சல் போட்டு முன்னேறி இன்று பெயர் சொல்லும் படியான ஒரு அந்தஸ்த்தை இந்த மக்கள் பெற்றுள்ளதை மறுக்க முடியாது.எனினும் பல சந்தர்ப்பங்களில் இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய, படுத்தி வரும் தலைவர்களை கேலிக்குரிய பொருளாக்கி பார்ப்பதிலும் ஏனைய பிரதேச தலைவர்களின் சேவைகளை இவர்களோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்வதுமாக தமது காலத்தை போக்கி வருகின்றனர் சிலர். இந்தளவிற்கு இவர்களுக்கு பேசுவதற்குரிய சுதந்திரமும் கல்வியும் அந்த பழைய தலைவர்களாலேயே கிடைத்தது என்பதை இவர்கள் எக்காலமும் ஏற்றுக்கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேங்காயும் மாசியும் ஒரு பொய்யான தகவல்&lt;/strong&gt;&lt;br /&gt;இலங்கையின் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் பிரதான இடத்தை வகிப்பது தேயிலை. தேயிலை பயிரிடுவதற்கு முன்பாக கோப்பி,கொக்கோ மற்றும் சிங்கோனா ஆகிய பயிர்களே பெருந்தோட்டப்பகுதிகளை அலங்கரித்தன. வரலாற்றை எடுத்துப்பார்த்தோமானால் 1769 இல் இருந்து 1830 வரை கறுவாவே இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிராக இருந்தது. எனினும் இது எதிர்பார்த்தளவு இலாபத்தை கொடுக்காததால் 1825களிலேயே மாற்றுப்பயிராக கோப்பியை பயிரிடுவது என முடிவாயிற்று. ஒரு சில இடங்களில் பரீட்சார்த்தமாக கோப்பி பயிரிடப்பட்டிருந்தது. அதன் படி வர்த்தக நோக்கிற்காக இலங்கையில் முதன் முதலாக கோப்பியானது காலி மாவட்டத்தின் பத்தேகம எனும் இடத்தில் பயிரிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் வருகை தரத்தொடங்கியது இக்காலகட்டத்தில் தான். 1824 களிலேயே அவர்கள் வந்தமைக்கான சான்றுகள் இருந்தாலும் 1827 ஆம் ஆண்டே அவர்கள் இங்கு வந்ததற்கான பதிவுகளும் குறிப்புகளும் இருக்கின்றன. அதற்குப்பிறகு 1867 ஆம் ஆண்டு தேயிலை பயிர்ச்செய்கை பற்றிய எண்ணக்கரு ஆரம்பிக்கும் வரை இலங்கைக்கு வந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்துக்கும் மேல். இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக கோப்பிப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். 1824ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைச்செடி ஒன்று பேராதனை பூங்காவில் நடப்பட்டது. 1934 களில் கிழக்கிந்திய கம்பனி (பிரிட்டிஷ்) மூலம் இந்தியாவின் அசாம் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் தேயிலை வர்த்தக பயிராக பயிரிடப்பட்டது.அதே முயற்சியை இலங்கையிலும் மேற்கொண்டால் என்ன என்று பிரித்தானியருக்கு தோன்றியது. கோப்பிப் பயிரை ஒரு வித நோய் தாக்கியதால் மாற்றுப்பயிர் ஒன்றுக்கான அவசியம் எழுந்தது. அதன் படி ஜேம்ஸ் டெயிலரினால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் இடத்தில் 19 ஏக்கர்களில் தேயிலை பயிரிடப்பட்டது. வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்ட முதல் சந்தர்ப்பம் அதுவாகும். வரலாறு இப்படியிருக்க தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் பருப்பும் இருப்பதை நம்பி தான் தென்னிந்தியாவிலிருந்து மக்கள் இலங்கைக்கு வந்தனர் என்ற கட்டுக்கதையை இன்றளவும் சிலர் சொல்லி வருகின்றனர். தேயிலையே பயிரிடப்படாத காலகட்டத்தில் அது குறித்து எவ்வாறு பேசப்பட்டிருக்கும்? தேயிலைபயிரிடப்படுவதற்கு 40 வருடங்களுக்கு முன்னரே இந்த மக்கள் இலங்கைக்கு வந்து விட்ட சான்றுகள் தாராளமாகவே உள்ளனவே? ஆகவே வரலாற்றை ஆராயாமல் எதையுமே அறுதியிட்டு சொல்ல முன் வரக்கூடாது. தென்னிந்தியாவில் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் மழையின்மை காரணமாகத்தான் மக்கள் வேறு தேசங்களுக்கு தொழில் தேடி பயணித்தனர். இலங்கைக்கு மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் அவர்கள் மலேசியா, மொரிஷியஸ்,மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் பயணித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மலையக மக்கள் அடிமைகளா?&lt;/strong&gt;&lt;br /&gt;அடிக்கடி இந்திய வம்சாவளி மலையக மக்களை பற்றி கூறப்படும் வாக்கியம் அடிமைகள் என்பதாகும். முதலில் அடிமைகள் என்றால் என்ன என்பதை பலரும் விளங்கிக்கொள்ளல் அவசியம். புராதன கிரேக்க,ரோம எகிப்து நாடுகளில் அடிமை முறை நிலவியது. ஒரு மனிதனை அவனது அனுமதி இல்லாது வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து வேலை வாங்குவது அவனை கொடுமை படுத்துவது அவனின் குடும்பத்தையும் ஆட்டிப்படைத்தல் தான் அடிமை தொழில்.அடிமைகள் என்றதுமே எமக்கு ஞாபகத்திற்கு வருவது ஆபிரிக்கா தான் . மத்திய ஆபிரிக்காவின் கொங்கோ எனும் நாட்டை தன் வசம் வைத்திருந்த பெல்ஜியம் இலட்சக்கணக்கானோரை அடிமைகளாக நடத்தியது. கைகள் கால்களை சங்கிலிகளால் பிணைத்து வேலை வாங்கப்பட்டது. இங்கிருந்து பல நாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டனர். இடையில் தப்பித்து சென்று விடக்கூடாது என்பதற்காக சங்கிலியால் பிணைத்தே அழைத்துச்செல்லப்பட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்திற்கு முன்பாகவே அடிமை முறை கிட்டத்தட்ட 95 வீதம் ஒழிக்கப்பட்டு விட்டது, 1835 ஆம் ஆண்டு காலகட்டம் எனலாம்.இலங்கைக்கு தொழில் தேடி வந்த மக்கள் இப்படியா வந்தனர் அல்லது இப்படியா அழைத்து வரப்பட்டனர்? அவர்கள் சுதந்திரமாக வருகை தந்தனர்,பிற்பாடு தேயிலை தொழிற்றுறைக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் கப்பல்களில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் கால்நடையாக மாத்தளை ,கண்டி ,நுவரெலியாவுக்கு வந்தனர். இவர்களை அழைத்து வருவதில் பெரும்பங்காற்றிய பெரியகங்காணிமார்களே இவர்களை தமது அதிகாரத்தால் நசுக்கி பிழிந்தனர். ஆனால் அடிமையாக நடத்தினர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? 1960களில் பெரியகங்காணி முறையும் ஒழிக்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போதைய காலகட்டம்&lt;/strong&gt;&lt;br /&gt;தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி இலங்கை வந்த இந்திய வம்சாவளினர் அல்லது தொழிலாளர் வர்க்கத்தினர் இங்கு குடியேறி சுமார் 188 ஆண்டுகள் ஓடி விட்டன. எனினும் இலங்கை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்களுக்கு ஓரளவிற்கேனும் சலுகைகள் கிடைக்கப்பெற்றன. அது வரையிலும் இவர்கள் அரசியல் அனாதைகளாக இருந்திருக்கலாம்.ஆனால் இப்போது அப்படியல்ல கல்வி உட்பட பல துறைகளில் இச்சமூக மக்கள் பெயர் சொல்லும் படியாக முன்னேற்றம் கண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் சலுகைகளின் காலகட்டங்களை வைத்துப்பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி தான். எனினும் பழைய பஞ்சாங்கங்களையே கூறிக்கொண்டு காலங்கழித்து வரும் ஒரு சில அரைவேக்காட்டு நபர்களினால் இம்மக்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் கிடப்பிலேயே போடப்படுகிறது. ஒரு சிலர் வடபகுதி மக்களை இவர்களோடு ஒப்பிட்டு எழுதுகின்றனர்.யுத்த சூழ்நிலைக்குப்பின்னர் வடபகுதி வாழ் மக்கள் பீனிக்ஸ் பறவைகளாக உயிர்த்தெழுந்திருக்கின்றனராம்.அது போல் இவர்களும் விழித்தெழ வேண்டுமாம் இது எவ்வளவு அபத்தமான விடயம்? வடபகுதி வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் மலையக மக்களின் பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்ளாத முட்டாள்களின் உளறல்களாகவே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மலையகத்தைப்பொறுத்த வரை அமரர் தொண்டமானுக்குப்பிறகு ஒரு தலைவர் உருவாகவில்லை என்கின்றனர் ஒரு சிலர்.உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மகாத்மா காந்திக்குப்பிறகு தன்னலமற்ற ஒரு தலைவர் ஏன் உருவாகவில்லை? இதற்கு விடை கூறுவார்களா? காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. காலமாற்றத்திற்கேற்ப சமூகம் .அரசியல் , பொருளாதாரம் ,கல்வி என அனைத்தும் மாறிக்கொண்டிருக்கும் போது மக்களின் மாற்றங்களுக்கேற்ப புதிய தலைமைத்துவங்களும் உருவாகும் ,மாற்றம்பெறும். இதை உணர்ந்து கொண்டு செயற்படுதலே சாணக்கியமாகும். முதலில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளல் அவசியம் .அதை விடுத்து ஏனைய சமுகங்களோடு ஒப்பீடு செய்து இதை ஏன் இந்த சமுகத்திற்கு செய்யமுடியாது என்று கேள்வி கேட்பது இயலாமையின் வெளிப்பாடாகவே அமையும். மலையகத்திலோ , தலைநகரிலோ அல்லது இலங்கையின் எப்பாகத்திலேனும் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்களைப்பற்றி கொச்சையாகப்பேசுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. இம்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை ஒன்றுமே கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் இந்த சமுகத்திற்கு என்ன பங்காற்றியிருக்கின்றனர் என்பதை கூற மாட்டார்கள்.காரணம் இப்படி கதைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பது தான் இவர்களின் தொழில். அரசியல் ரீதியாக இம்மக்கள் அனாதைகளாக இருக்கின்றனர் என்று கூறுபவர்கள் இம்மக்களுக்கு தலைமை தாங்க முன் வருவார்களா? மலையக இலக்கியம் இம்மக்களின் சோக வரலாற்றையே இசைக்கிறது என்பவர்கள் இம்மக்களின் மகிழ்ச்சியான பக்கத்தை எழுதுவார்களா? முதலில் வரலாற்றை தெரிந்து புரிந்து சில விடயங்களை கதைக்கவும் எழுதவும் முன் வர வேண்டும். அதை விடுத்து ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாமல் உளறக்கூடாது. இந்த நாட்டில் மூவின மக்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.இதில் மலையக மக்கள் மட்டும் விதிவிலக்கல்லர் என்பதை புரிந்து கொள்ளல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவலிங்கம் சிவகுமாரன் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-1520165706744883343?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/1520165706744883343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=1520165706744883343' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1520165706744883343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1520165706744883343'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/12/blog-post_27.html' title='இந்திய வம்சாவளி மக்களை அடிமைகளாக சித்திரிக்கும் போக்கு மாற வேண்டும்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-NF9o_ZPgT2I/TvqkgdVCIRI/AAAAAAAAAPc/jwzb78Z7Fek/s72-c/1252407478hXCkLKL.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-8530300858811349389</id><published>2011-12-19T19:53:00.000-08:00</published><updated>2011-12-19T20:00:46.942-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-1gDLFvxJw4M/TvAIL1jwhJI/AAAAAAAAAPE/vHsYZG7o0pY/s1600/5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5688055328817579154" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/-1gDLFvxJw4M/TvAIL1jwhJI/AAAAAAAAAPE/vHsYZG7o0pY/s320/5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-G4GO8gyMB0U/TvAHmyu4PQI/AAAAAAAAAO4/iDUhER7Izvs/s1600/6.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5688054692403756290" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/-G4GO8gyMB0U/TvAHmyu4PQI/AAAAAAAAAO4/iDUhER7Izvs/s320/6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-euNbrlvQPrI/TvAHYUvr6nI/AAAAAAAAAOs/I-_JRvADJQs/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5688054443835910770" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/-euNbrlvQPrI/TvAHYUvr6nI/AAAAAAAAAOs/I-_JRvADJQs/s320/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது. இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம் &lt;img id="BLOGGER_PHOTO_ID_5688054148822200418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-oNlEEy6Z0Vg/TvAHHJu78GI/AAAAAAAAAOg/3bZ3L8kjugg/s320/7.jpg" border="0" /&gt;கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோணேச்சர பெருமானின் சக்தியா என்பது தெரியவில்லை. சிலையை உற்றுப்பார்த்தால் இது விளங்கும். இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன் என்பவராவார். சிவனின் சிலை மட்டுமல்லாது இராவணன் வெட்டு எனும் கோயிலின் வாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் தியான மண்டபமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லிங்கம் ஏனைய விக்ரகங்களுடன் கிடைத்த லஷ்மி சமேத நாராயண விக்ரமும் வைக்கப்பட்டுள்ளன. சிலை திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருகோணமலை நகரத்திலிருந்து பார்த்தாலும் சிவனின் அந்த கம்பீரமும் சாந்தமும் கலந்த முகம் தெரிகிறது. பக்தர்களுக்காக அங்கு எடுக்கப்பட்ட படங்களைத்தருகிறோம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-8530300858811349389?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/8530300858811349389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=8530300858811349389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/8530300858811349389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/8530300858811349389'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/12/blog-post.html' title='இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1gDLFvxJw4M/TvAIL1jwhJI/AAAAAAAAAPE/vHsYZG7o0pY/s72-c/5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-4908321724865701623</id><published>2011-11-28T20:21:00.000-08:00</published><updated>2011-11-28T20:35:26.289-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>உள்ளுறுப்புகளை இழந்து உயிரை விடவா எம் நாட்டு  பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-dM8B27OHtoE/TtRg5FmY9HI/AAAAAAAAAOU/MIWF-mKab-I/s1600/abused_woman.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5680271563893044338" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 185px; CURSOR: hand; HEIGHT: 255px" alt="" src="http://3.bp.blogspot.com/-dM8B27OHtoE/TtRg5FmY9HI/AAAAAAAAAOU/MIWF-mKab-I/s320/abused_woman.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் குறித்து கடந்த காலங்களில் பல அதிர்ச்சிகரமாக தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. உடம்பில் ஆணிகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பெண்மணிகளிலிருந்து மர்மமான முறையில் மரணித்தவர்கள் பற்றியும் தகவல்கள் வெளிவந்தன. ஒரு சில மரணங்கள் விசாரிக்கப்படாமல் அப்படியே மூடி மறைக்கப்பட்டன. மரணத்தை தழுவியவர்களின் உறவினர்களோ தமக்கு இறந்தவரின் உடல் கிடைத்தாலே போதும் என்ற ரீதியில் அதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டனர்.இதற்காக அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் வேலைக்கு அனுப்பிய முகவர்களிடம் அலைந்து திரிவதிலேயே தமது காலத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமையாற்றுவோரின் மரணத்தின் மற்றொரு பக்கம் கடந்த வாரம் வெளிவந்து பலரை பீதியடையச்செய்துள்ளது. குவைத் நாட்டில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச்சென்ற 28 வயதுடைய சியாமலி குமாரி குணவர்தன என்ற பெண் மர்மமான முறையில் மரணத்தை தழுயுள்ளார்.இவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போதே அவரது உள்ளுறுப்புகள் பல மாயமாகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேற்படி யுவதியின் சகோதரர் பிரியந்த பண்டார குணவர்தன தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்தே நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தனது சகோதரியின் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என தமது குடும்ப வைத்தியரின் உதவியை நாடியுள்ளார். மரணித்தமைக்கான காரணத்தை ) அறியவே அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். நீர் கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.தயாபாலவினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்த யுவதியின் உள்ளுறுப்புகள் குவைத்தில் வைத்தே அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குவைத் வைத்தியசாலையில் சியாமலி குமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ( Post Mortem) உட்படுத்தப்பட்டதாயினும் பரிசோதனை அறிக்கையில் உள்ளுறுப்புகள் அகற்றப்பட்டமை குறித்து எந்த வித குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.இதுவே இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட பிரதான காரணமாகும். கலாவௌ விஜித புர என்ற இடத்தைச்சேர்ந்த சியாமலி குமாரி 7 வயது சிறுமியின் தாயாராவார். கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இவர் திடீரென மரணித்ததாக குவைத்தில் பணி புரியும் வேறு ஒரு பணிப்பெண் மூலமாகவே இவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சியாமலியின் உடல் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளது. இவர் அனுராதபுரத்திலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரின் மூலமாக கடந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் திகதி குவைத் சென்றுள்ளார். இவரின் பரிதாபகரமான மரணம் மத்திய கிழக்கில் பணி புரியும் ஏனைய பெண்களுக்கு உள்ள ஆபத்தினையும் பாதுகாப்பின்மையையும் அப்பட்டமாக இலங்கைக்கு தெரிவித்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமானது தம்மிடம் பதிவு செய்து கொள்ளாத முகவர்கள் மூலமாக வெளிநாடு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்தாலும் பலர் அதை உதாசீனப்படுத்துவதை மறுக்க முடியாது,எனினும் பதிவு செய்து கொள்ளாது இயங்கும் வேலை வாய்ப்பு முகவரமைப்புகளுக்கு எதிராக பணியகம், கடந்த காலங்களில் என்ன சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஆராய்ந்தால் பலன் பூஜ்யமே. இவ்வாறு இயங்கும் போலி முகவர்களை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கைகளாகும்.வெளிநாடுகளில் இலங்கை பணிப்பெண்கள்இலங்கைக்கு அந்நிய செலவாணியை பெற்றுத்தரும் முக்கியமான தொழிற்றுறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் பிரதான இடத்தை வகிக்கின்றனர். எனினும் இவர்களில் பணம் சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழ செல்லவில்லை , தமது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவே சொந்த பந்தங்களை விட்டு தொலை தூரம் உழைக்கச்செல்கின்றனர். எனினும் இவர்களுக்கு அங்கு உரிய தொழில் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இலங்க தூதரகங்கள் அக்கறையுடன் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. சியாமலியின் மரணம் கூட குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை ,அதை அவர்கள் அறிந்திருந்தார்களா என்பதும் அவர்களுக்கே வெளிச்சம். தற்போது அங்குள்ள இலங்கை தூதரகம் மூலமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்திருந்தாலும் சியாமலியின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படுமா என்பது சந்தேகமே. இதற்கு முன்னர் உடம்பில் ஆணிகள் ஊசிகள் ஏற்றப்பட்டு வந்த பணிப்பெண்கள் குறித்து விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளைப்பொறுத்தவரை சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலேயே இலங்கை பணிப்பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். இவ்விரு நாடுகளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு இராஜ்யம், மற்றும் கட்டார்,லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்றனர்.கூடுதலாக கிராம மற்றும் மலையகப்பகுதிகளிலிருந்து பல பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக உழைத்து வருகின்றனர்.&lt;br /&gt;மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான சட்டதிட்டங்கள் அமுலில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வருவோர் மீது தான் இவை செயல்படுத்தப்படுகின்றன என்று தான் கூற வேண்டியுள்ளது. காரணம் பணியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் எஜமானர்களோ அல்லது எஜமானிகள் மீதோ இந்த சட்டங்கள் இது வரையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். மேலும் இதற்கு முன்பு குறிப்பிட்ட நாடுகளில் பணிபுரிந்து மர்மமான முறையில் மரணத்தைத் தழுவியவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இலங்கையின் பல பாகங்களிலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றாலும் குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தனது பிராந்தி ய நிலையங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரியும் தமது பிள்ளைகள் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏற்படுகின்றது. ஆகவே இது தொடர்பில் பணியகம் அக்கறை செலுத்துமா என்பதையும் அறிய வேண்டும். அந்நிய செலாவணியைப்பெற்றுத்தரும் தொழில் என்ற வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பெற்றுச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் பாரிய கடப்பாடு உள்ளதை மறுக்க முடியாது. காரணம் கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் வெளிநாடு செல்லும் பெண்களின் தொகை அதிகரித்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் அந்நிய செலாவணி அதிகரிப்புக்கும் இவர்கள் பங்களிப்பை நல்குவதை மறுக்க முடியாது. மறுபக்கம் இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள முன் வர வேண்டும். வறுமை சூழல் காரணமாக வெளிநாடு செல்லும் பெண்கள் எந்தளவிற்கு மன உளைச்சலுடன் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. மேலும் இவர்களின் ஊதியத்தில் எத்தனை பேர் தங்கியிருக்கின்றனர் என்பதும் முக்கிய விடயம். புதிதாக வெளிநாடு செல்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி இவ்விடயத்தை சற்று கூடுதல் அக்கறை கொண்டு அரசாங்கம் அணுக வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாத அனைத்து முகவர்கள் குறித்தும் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியம்.இல்லாவிடின் எதிர் காலத்தில் பல சியாமலிகள் உறுப்புகளை இழந்து உயிரற்ற சடலங்களாகவே வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-4908321724865701623?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/4908321724865701623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=4908321724865701623' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4908321724865701623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4908321724865701623'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/11/blog-post_28.html' title='உள்ளுறுப்புகளை இழந்து உயிரை விடவா எம் நாட்டு  பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்?'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-dM8B27OHtoE/TtRg5FmY9HI/AAAAAAAAAOU/MIWF-mKab-I/s72-c/abused_woman.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-1360098146152114089</id><published>2011-11-28T19:30:00.000-08:00</published><updated>2011-11-28T19:45:35.127-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5680256926211087650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-MEEXHvVY8Xg/TtRTlD_DnSI/AAAAAAAAAN8/rd7l1npnMas/s320/Mirabal_hermanas.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிரபல் சகோதரிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;சர்வாதிகாரி ட்ரூஜிலோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-XznLElP_2ms/TtRT1U3XRLI/AAAAAAAAAOI/MTdD3OVSngk/s1600/trujillo1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5680257205620130994" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 257px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/-XznLElP_2ms/TtRT1U3XRLI/AAAAAAAAAOI/MTdD3OVSngk/s320/trujillo1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் நேற்று 25 ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாண்டு 17 ஆம் திகதி பொதுச்சபை கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த துன்பியல் நிகழ்வு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;மிரபல் சகோதரிகள் (Mirabal sisters)&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;930 1960 இற்கு இடைப்பட்ட காலகட்டம் அது . டொமினிக்கன் குடியரசை ராபெல் ட்ரூஜிலோ (Rafael Trujillo) சர்வாதிகாரி ஆண்டு வந்தான். இவனது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர். ட்ரூஜிலோவின் ஆட்சியில் பெண்கள் சொல்லணாத்துயரை எதிர்நோக்கினர். பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மிரபல் என்ற குடும்பப்பெயரை கொண்ட மூன்று சகோதரிகள் குரல் கொடுத்தனர். இச்சகோதரிகள் ஒன்றிணைந்து சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக அரசியலிலும் குதித்தனர். இதை ஒடுக்க நினைத்த ட்ரூஜிலோ அவர்களை கொல்வதற்கு உத்தரவிட்டான். 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மிரபல் சகோதரிகள் கொடூரமாக ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். இதை நினைவு கூறும் முகமாகவே ஐக்கிய நாடுகள் சபையினால் அந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக பிரகடனமாயிற்று. பின்னாளில் இவர்கள் மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள் என்று அழைக்கப்பட்டனர். 1980 ஆம் ஆண்டு முதல் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளானது பால் நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;பெண்களுக்கெதிரான வன்முறைகள்எமது நாட்டின் சனத்தொகையில் அரைவாசியானோர் பெண்கள் தான்.எனினும் பல்வேறு வகையில் இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. உள,.உடல் ரீதியான கொடுமைகள் நாளுக்கு நாள் வித்தியாசப்படுவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். என்னென்ன கொடுமைகள் பெண்களுக்கெதிரானவை என பட்டியல் படுத்தப்பட்டுள்ளன .இதில் பிரதானமானவை இவை: &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;1) திராவகம் வீசுதல்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;2) சீதனக்கொடுமைகள்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;3) வீட்டில் மனைவியை,சகோதரியை,தாயை பிள்ளையை துன்புறுத்தல்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;4) பாலியல் துன்புறுத்தல்கள்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;5) விபசாரத்திற்கு நிர்பந்தித்தல்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;6) கர்ப்பிணிகளை கொலை செய்தல்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;7) பெண் உறுப்பை சிதைத்தல் ( Female Genital Mutilation) &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;8) கடத்தல் சம்பவங்கள்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;9) கௌரவ கொலைகள்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;10) ஹித்திரவதைகள் &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;12) வேலைத்தளங்களில் வன்முறைகள்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;13) பெண் சிசு கொலை &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;14) தரக்குறைவாக நடத்துதல் மற்றும் போர்க்குற்றங்கள்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;15) இன ரீதியான ஒடுக்குமுறை&lt;br /&gt;இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள வன்முறைகளை இன்று உலகெங்கினும் உள்ள பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்களை பாதுகாக்கவும் அவர்களின் உரிமைகளை இனங்காணவுமே சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பன அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. எனினும் குறிப்பிட்ட நாள் மட்டுமே இவர்கள் ஞாபகப்படுத்தப்படுகின்றார்களோ என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அண்மைக்காலமாக வீட்டு வன்முறைகளுக்கு பெண்கள் அதிகமாக முகங்கொடுத்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த மாதம் மலையகப்பகுதியில் மாமனார் ஒருவர் மருமகளை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தது. வெளி உலகுக்கு வராத எத்தனையோ கொடுமைகளை இன்று எமது சகோதரிகள் அனுபவித்து வருகின்றனர். குடும்ப சூழ் நிலை, கௌரவம் , குழந்தைகள் என்ற வட்டத்திற்குள் இவர்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டும் மனதுக்குள் அழுது கொண்டும் இருக்கும் இவர்கள் இறுதியில் மனஉளைச்சலுக்கு ஆளாகி மனநிலை பாதிப்படைகின்றனர்.ஒரு சில சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களை கொடுமைப்படுத்தும் அநியாயங்களும் இடம்பெறுகின்றன. அதே போல் வேலைத்தளங்களிலும் உயர் அதிகாரிகளின் வக்கிர எண்ணங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பலியாகின்றனர். வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் போது பஸ்ஸிலோ இரயிலிலோ அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வெளியில் சொல்ல முடியாதவை. ஆபிரிக்க நாடுகளில் இன்று வரை வழமையில் உள்ள பெண்ணுறுப்பை சிதைத்தல் , மனித உரிமை ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் விடயமாகும். மத அனுட்டானங்களின் ஒரு அங்கமாக இதை அங்குள்ளவர்கள் கருதினாலும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் பெண் பிள்ளைகளுக்கு உடல் ,உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் அதே வேளை பல சிறுமிகள் அதிக இரத்தப்போக்கினால் இதில் உயிராபத்தையும் சந்தித்துள்ளனர் என்பதும் சோகமான விடயம். இந்தியாவில் பல மாநிலங்களில் இளவயது திருமணங்கள் இன்றும் வழக்கில் உள்ளன. பருவம் எய்த முன்னர் சிறுமிகளை இவ்வகையில் திருமணம் செய்து கொடுத்தலானது அந்த சிறுமிக்கு எதிரான வன்முறையே என்பதில் ஐயமில்லை. அதே போல் பெண் சிசுக்கொலை மற்றும் சாதி ரீதியாக பெண்களை ஒடுக்குதல் , அவர்களை துஷ்பிரயோகம் செய்தல் ,கொலை செய்தல் ,உடன் கட்டை ஏறச்செய்தல் போன்றன இன்றும் இந்தியாவில் இடம்பெற்று வரும் அக்கிரமங்களாகும். காதல் என்ற போர்வையில் இன்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளும் எல்லையில்லாது போய் விட்டது. தனது இச்சைகளுக்கு இணங்காத பெண்களின் முகம் மீது திராவகம் வீசுதல் அல்லது இணைய அரட்டை, சமூக வலை தளம் மூலம் தகவல்களைப்பெற்று அவர்களுக்கு நெருக்குதல் தருதல் போன்றனவும் இன்று பெருகி விட்டன. கடந்த வாரம் தமிழ் நாட்டில் ஏற்பட்ட இவ்வாறான சம்பவம் முழு இலக்கிய உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபல எழுத்தாளர் தனது வாசகர் வட்டத்தைச்சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் வக்கிரமான முறையில் இணைய அரட்டையில் ஈடுபட்டு அது அம்பலமாகி தற்போது தமிழ் நாட்டில் அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாகி விட்டது. நாம் நேரில் பார்க்கும் சில மனிதர்களின் மறு பக்கம் மிக மோசமானது என்பது இவ்வாறான விடயங்களில் அம்பலமாகின்றது. மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்த இளம் வாசகி இவ்விடயத்தை மற்றுமொரு பெண் இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் விளங்கும் ஒருவரிடம் தைரியமாக எடுத்துக்கூறியதாலேயே இந்த சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.முதற்கண் பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து வாய் திறக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றுமொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற உத்வேகமே இப்படியான சம்பவங்களை முடியுமானவரை தடுக்க வழி கோலும். சகோதரிகளே எத்தனை காலம் தான் வாய் மூடி மௌனியாக இருக்கப்போகின்றீர்கள்? பெண் கொடுமையை எதிர்த்து சர்வாதிக்கெதிராக குரல் கொடுத்து மரணத்தை தழுவிய மிரபல் சகோதரிகள் போன்று தியாகம் செய்யச்சொல்லவில்லை. உங்களுக்கோ அக்கம் பக்கத்தில் உங்களுக்குத்தெரிந்த தெரியாதவர்களுக்கோ ஏற்படும் வன்முறைகள் குறித்து சரி வாய் திறக்கலாமே!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-1360098146152114089?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/1360098146152114089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=1360098146152114089' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1360098146152114089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1360098146152114089'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/11/blog-post.html' title='அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-MEEXHvVY8Xg/TtRTlD_DnSI/AAAAAAAAAN8/rd7l1npnMas/s72-c/Mirabal_hermanas.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-4506105336580181076</id><published>2011-10-14T22:54:00.000-07:00</published><updated>2011-10-15T00:04:51.441-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>கல்வித்துறையில் அதிகரித்துள்ள இலஞ்ச ஊழல் செயற்பாடுகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5663610566151609346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 154px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-YXdzWMpnyI4/TpkvzYWdnAI/AAAAAAAAANc/X-tTS7tfhb4/s320/edu_cover.jpg" border="0" /&gt;&lt;br /&gt;இலங்கையில் பதிவாகும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் 70 வீதத்திற்கும் மேலானவை கல்வித்துறையோடு சம்பந்தப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளமையானது இலங்கை கல்வித்துறையில் எந்தளவிற்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.கூடுதலாக பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதிலேயே அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமாகவோ அல்லது பொருளாகவோ அதிபர்கள் இலஞ்சம் பெறுகிறார்கள் என &lt;span class=""&gt;சுட்டிக்கா&lt;img id="BLOGGER_PHOTO_ID_5663610905954389874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 212px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-Gt8cUsipBdE/TpkwHKNwj3I/AAAAAAAAANs/LDUwq-jfIfo/s320/corruption.jpg" border="0" /&gt;ட்டப்பட்டுள்ளது&lt;/span&gt;. கடந்த கால முறைப்பாடுகளை பார்த்தால் இலங்கையைப்பொறுத்தவரை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் பொலிஸ் அதிகாரிகளாவும் , அரசாங்க திணைக்களங்களைச்சேர்ந்தவர்களாகவுமே இருந்துள்ளனர்.எனினும் அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ஊழல்களில் முதலாவது இடத்தை கல்வித்துறை பிடித்துள்ளது. சமுதாய மாற்றத்திற்கான ஒரே ஆயுதமாக கூறப்படும் கல்வித்துறையில் எட்ட வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க இப்போது எட்டியிருக்கும் இலக்கை பார்க்கும் போது வெட்கித்தலை குனிய வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவானது (Commission to Investigate Allegations of Bribery or Corruption) நாளாந்தம் 15 இற்கும் குறையாத கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தமக்கு கிடைப்பதாகத் தெரிவிக்கின்றது. இதில் கூடுதலாக முதலாமாண்டுக்கு மாணவர்களை சேர்க்கும் போது பாடசாலை அதிபர்கள் பெற்றோர்களிடம் இருந்து பணம் பெறுவது தொடர்பாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.பாலபட்டபெந்தி விளங்குகிறார். அண்மையில் இவர் கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட ஊழல் செயற்பாடுகள் பற்றி தனது விசனத்தையும் வெளிப்படுத்த தவறவில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;இலஞ்சம் என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி காலத்திலேயே இலஞ்சம் பெறல் வாங்குதல் குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில் கீழ் தண்டனை வழங்கப்படும் குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. (1883ஆம் ஆண்டிலிருந்து ) 1958 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் திணைக்களமாக நீதி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது.இலஞ்ச சட்டத்தை மீரும் வகையில் சட்ட விரோதமாக அவா நிறைவொன்றை கொடுத்தல், கேட்டல், பெற்றுக் கொள்ளுதல் அல்லது அவ்வாறு ,இலஞ்ச சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் செய்யப்படும் செயற்பாடுகள் ,இலஞ்சமாக கருதப்படும். இதே சந்தர்ப்பத்தில் ஊழல் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளதுஊழல் சம்பந்தமாக ,இலஞ்ச சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்பட்டுள்ளது. அதாவது அரச ஊழியர் ஒருவர் தனது பதவியின் பிரகாரம் தனக்கு பணிக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றும் பொது அரசுக்கு நடத்தை ஏற்படுத்துவதற்கு தனக்கு நன்மையை அல்லது வேறு ஒருவருக்கு நன்மையை அல்லது தீமையை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிந்து செயற்படுதல் ஊழலாகக் கருதப்படும்.&lt;br /&gt;&lt;strong&gt;பாடசாலைகளில் இலஞ்சம்&lt;/strong&gt;மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கும் போது ஒரு சில அதிபர்கள் தேசிய கல்விக்கொள்கைகளை மீறும் வகையில் ஒரு வகுப்பிற்கு அதிக மாணவர்களை அனுமதிக்கின்றனர். அச்சந்தர்ப்பத்தில் வெளி பிரதேச மாணவர்களை பிரபலமான நகர்ப்புற பாடசாலைகளுக்கு இந்த அதிபர்கள் உள்வாங்கும் போது அவர்களின் பெற்றோரிடமிருந்து இலஞ்சமாக பெருந்தொகை பணத்தை பெறுகின்றனர். மேலும் முதலமாண்டு மட்டுமின்றி உயர்தர அனுமதியிலும் அதிகமாக பணம் பெறுகின்றனர். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பணமாகப்பெற்றால் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் பொருளாகவும் இலஞ்சம் பெறும் முறை பல மலையக பாடசாலைகளில் நடைமுறையில் இருக்கின்றது. பாடசாலைக்கு புதிய அலுமாரி தேவை என மாணவர் அனுமதிக்கு வரும் பெற்றோரிடம் அதிபர் கூறுவார்.பின்னர் நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட தளபாட வர்த்தக ஸ்தாபனத்தை கூறி அங்கு பணம் செலுத்தும் படியும் தாம் அதை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறி பின்னர் குறிப்பிட்ட வர்த்தக ஸ்தாபனத்திற்குச் சென்று ஒரு தொகையை ஸ்தாபனத்திற்கு செலுத்தி விட்டு மீதியை வாங்கிக்கொண்டு வந்து விடுவார் அதிபர். ஒரு சில பாடசாலைகளில் அபிவிருத்திச்சங்க செயலாளர்களே இந்த பண வசூலிப்பு விடயத்தில் முன்னிற்கின்றனர்.இதன் காரணமாக பல வருடங்களாக ஒரே சங்க செயலாளர்களே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார்கள். பல அதிபர்கள் அபிருத்திச்சபை கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் இருப்பதும் இந்த பின்னணயிலே தான். பல பெற்றோர்களிடம் தளபாடங்கள் அலுமாரிகள் வாங்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு அதிபர்கள் வாங்குவதோ ஒரே அலுமாரியைத்தான்இதே வேளை பல பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்ட மாணவர்களை பணம் கொடுத்து சேர்ப்பதில் ஒரு சில அதிபர்களுக்கு உதவி ஆசிரியர்களாக செயற்படுகின்றனர். மேலும் தவணை முடியும் சந்தர்ப்பத்திலும் இடையில் பல வகுப்புகளுக்கு மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு சேர்க்கும் விடயம் பல பாடசாலைகளில் இடம்பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களின் அக்கறையின்மைதமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் தாம் இலஞ்சம் கொடுப்பதையும் அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதையும் வெளியில் கூறுவதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. இந்த காரணங்களினாலேயே பல அதிபர்கள் எவ்வித இடையூறும் இன்றி இலஞ்சம் பெற்று வருகின்றனர். இச்செயற்பாடுகளே இவர்களை ஊக்குவிப்பதாக இருக்கின்றது. இதே வேளை பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டிய வலயக்கல்வி காரியாலயங்களிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் ,ஊழல்கள் இடம்பெறுவதால் பாடசாலைகளைப்பற்றி கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மையாகும். தமக்கு தேவையானவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு சில வலயக்கல்வி பணிப்பாளர்களும் ,அதிகாரிகளும் கூட இலஞ்சம் பெறுவதை மறுப்பதற்கில்லை. இவர்களின் சிபாரிசுகளுடன் வரும் மாணவர்களை சேர்க்கும் அழுத்தத்திற்கும் சில நேர்மையான அதிபர்கள் உட்படுகின்றனர். ஆகவே கல்வித்துறை இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது பாடசாலைகளில் மட்டும் தங்கியிருக்கும் விடயமல்ல என்பதை பலரும் உணர்ந்து கொள்ளல் அவசியம்.&lt;br /&gt;யார் குற்றச்சாட்டுக்கு உட்படுவர்? இலஞ்ச குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சரவை அமைச்சர்கள் , சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதித் தலைவர் , பிரதி அமைச்சர்கள் , மாகாண ஆளுனர்கள் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் , மாகாண, உள்ளுõராட்சி நிலையங்களின் அல்லது ,லஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டநிறுவனங்களில் நூற்றுக்கு 50 விதத்திற்கு மேற்பட்ட பங்குகள் அரசுடமையாகவுள்ள 1982ஆம் ஆண்டின் 17 ஆம் ,இலக்க கம்பனிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், ஆளுனர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், ஜூரி சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியும். இலஞ்ச சட்டத்தின் கீழ் ,இலஞ்சம் வாங்குவதைப் போல் ,இலஞ்சம் கொடுப்பதும் சமமான தண்டனைக்குரிய குற்றங்களாகும். என்ற போதிலும் ,இலஞ்சம் கொடுத்த நபர் முறைப்பாட்டாளராகும் சந்தர்ப்பங்களில் சட்டம் குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாக அல்லது ,இலஞ்சம் கேட்ட நபரின் சூழ்ச்சியால் சிக்கிய அப்பாவியாகவே கருதும்.இருந்த போதிலும் ஒருவர் ,இலஞ்சம் கேட்கும் போது அதைக் கொடுப்பதற்கு முன்பாக ,இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தல் காலச் சிறந்த செயற்பாடாகும்.&lt;br /&gt;தண்டனைகள்இலஞ்சம் கேட்டல், ஏற்றுக் கொள்தல், கொடுத்தல் அல்லது ,இதில் ஏதும் ஒன்றைச் செய்ய எத்தனித்தல், சூழ்ச்சி செய்தல் போன்ற குற்றங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையுடன் ரூபா 5000 இற்கும் மேற்படாத தண்டப் பணம் அபராதமாக விதிக்கப்படும். ஏதும் ஆதனமொன்று ,இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொன்டதாக நிரூபிக்கப்படும் போது மேற் குறிப்பிட்ட தண்டனைக்கு மேலதிகமாக ,இலஞ்சத்தால் பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்யப்பட்ட ஆதனத்தின் பெருமதிக்கு குறையாத அல்லது மும்மடங்கிற்கு குறையாத தொகையைத் தணடப் பணமாக நியமித்தல் அல்லது குறிப்பிட்ட ஆதனத்தை அரசுடமையாக்குதல்.&lt;br /&gt;ஊழல் குற்றச்சாட்டுக்கான தண்டனைகள்ஊழல் குற்றமொன்றில் குற்றவாளியாக்கப்படின் 10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்குச் சிறைத் தண்டனையும் ஒரு ,இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அல்லது மேற் கூறிய ,இரண்டும் வழங்கப்படும்.தனது தொழிலை அல்லது பதவியை இழப்பதோடு ஓய்வூதியம் பணிக் கொடைக்கான உரித்தும் ,ரத்துச் செய்யப் படும்.பாராளுமன்றத் தேர்தல் எனின் 7 ஆண்டுகளுக்கும், உள்ளுõராட்சி மன்றத் தேர்தல் உனில் 5 ஆண்டுகளுக்கும் வாக்காளராக பதிவு செய்வதற்கு, வாக்களிப்பதற்கு, தெரிவு செய்யப்படுவதற்கும் தகைமையை இல்லாதாக்கலாம்.அரசின் அல்லது ,இலஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல் படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொழில் ஒன்றை அல்லது பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை முற்று முழுதாக ,இழத்தல் என்பன அடங்கும். கல்வித்துறைக்கு அப்பாற்பட்டு பல அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுவதை அனைவரும் அறிவர். மேலும் தனியார் நிறுவனங்கள் மீதான இலஞ்ச செயற்பாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் இடமில்லை. அண்டைய நாடான இந்தியாவில் தலை விரித்தாடும் ஊழல்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்று விட்டன. எனினும் சமூக அக்கறை என்ற விடயத்தில் கல்வி சமுகத்திற்கு பாரிய கடப்பாடு உள்ளது.எதிர்கால இலங்கையை கருத்திற்கொண்டு தமது இலக்குகளை இவர்கள் உணர்ந்து கொள்வார்களாக. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-4506105336580181076?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/4506105336580181076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=4506105336580181076' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4506105336580181076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4506105336580181076'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/10/blog-post_14.html' title='கல்வித்துறையில் அதிகரித்துள்ள இலஞ்ச ஊழல் செயற்பாடுகள்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-YXdzWMpnyI4/TpkvzYWdnAI/AAAAAAAAANc/X-tTS7tfhb4/s72-c/edu_cover.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-463197914482993569</id><published>2011-10-14T21:50:00.000-07:00</published><updated>2011-10-14T22:49:08.261-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>வெளிநாட்டு பறவைகளின் மோகத்தால் உள்ளூர் சிட்டுகுருவிகளை மறந்து விடுகிறோம்</title><content type='html'>&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5663580876805837202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-dBgvOA8o00w/TpkUzO61EZI/AAAAAAAAANQ/FERFqrS1DBE/s320/DSCF0204.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;காய்கறிகளில் இரசாயனம் கலந்த விஷங்களே இன்று உள்ளன.ஆகவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று பல மனிதர்கள் விஷமிகளாகி விட்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தர்மம் குன்றி வரும் இக்காலகட்டதில் மக்கள் தங்களுக்கு முடிந்த வரை தான தருமங்கள் செய்ய வேண்டும். முக்கியமாக அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படுவோருக்கு அன்னம் வழங்க வேண்டும். தவங்களில் காலத்தை &lt;span class=""&gt;ஓ&lt;img id="BLOGGER_PHOTO_ID_5663579444693013010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 243px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-hLdWpY4_AXU/TpkTf34hkhI/AAAAAAAAANE/LVvB4uCZsfY/s320/raj.jpg" border="0" /&gt;ட்டாமல்&lt;/span&gt; தரும நெறி சிந்தனையில் கவனத்தை திருப்ப வேண்டும். எவர் ஒருவர் தருமத்தை கடமையாக நினைத்து செய்கிறாரோ அந்த தருமம் அவரை காப்பாற்றும் இதுவே கீதையின் தத்துவம் என்கிறார் பிரம்மரிஷி காகபுஜண்டரின் சீடராகிய பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் இராஜ்குமார் குருஜி அவர்கள். மக்கள் நலன் கருதி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சித்தர்கள் மகா யாகத்தின் போது பக்தர்களுக்கு அருளுரை வழங்கிய போது அவர் தரும நெறி சிந்தனைகளை பக்தர்கள் மனதில் விதைத்தார். மிகவும் எளிமையாகவும் அதே நேரம் மனதில் பதியும் வண்ணமும் அற்புதமான பல கருத்துக்களை அன்றைய தினம் அன்னை சித்தர் அவர்கள் வெளிப்படுத்தினார். அவரின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;சக்தி பிறக்கும் நகரிலிருந்து ஒரு யாகம்&lt;/strong&gt;அட்டன் மாநகரில் இந்த யாகத்தை நடத்துவது &lt;/span&gt;என்பது எமது கைகளிலோ அல்லது இந்த யாகத்தை ஒழுங்கு செய்தவர்களின் கைகளிலோ இல்லை. இது சித்தர்களின் எண்ணம் போல நடக்கிறது என்பதே உண்மை. காரணம் இந்த அட்டன் மாநகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மஸ்கெலியா நகருக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது .இங்கு அமைந்திருக்கும் நீர் மின் நிலையங்களை அறிந்தேன். ஆஹா, இங்கிருந்து தான் இலங்கையின் பல பாகங்களுக்கு மின்சாரம் எனும் சக்தி செல்கிறது,மின்சாரத்தின் மூலம் பல இடங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஆகவே இது சக்தி உருவாகும் பிரதேசம். இங்கிருந்து யாம் செய்யும் இந்த யாகத்தின் பயன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றடையும் .இது உண்மை. உள்ளன்போடு 210 சித்தர்களை இங்கு வரவழைத்து செய்யப்படும் இந்த யாகத்தில் எவரும் இலகுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது. ஆகவே இங்கு வந்திருக்கும் அனைவரும் அனுக்கிரகம் பெற்றவர்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;தானத்தின் பயன்&lt;/strong&gt;&lt;br /&gt;எத்தனை கோடி செல்வங்களை அள்ளிக்கொடுத்தாலும் எந்த வகையில் உதவிகளை வழங்கினாலும் அன்னதானத்திற்கு ஈடான தானம் எதுவும் கிடையாது இது சித்தர்களின் வாக்கு. ஆகவே அன்பர்களே உங்களுக்கு முடிந்த வரை அடுத்தவருக்கு அன்னதானம் செய்யுங்கள். இது கலியுகமாகும். படித்தவர்கள் படிக்காதவர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் அனைவருக்கும் வழிகாட்டுபவர்களாக சித்தர்கள் விளங்குகிறார்கள். சித்தர்கள் எந்த உருவிலும் நடமாடுவார்கள். பிச்சைகாரர்களாக ,பைத்தியம் பிடித்தவர்களாகக்கூட இருக்கலாம். எவரையும் அலட்சியம் செய்யாதீர்கள். எந்த சித்தராவது உங்களிடம் யாசகம் பெற்று விட்டால் நீங்கள் இந்த பிறவிப்பயனை அடைவீர்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;உங்களிடம் வருபவர்கள் யார்?&lt;/strong&gt;இது கலியுகம் என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன்.இக்காலத்தில் செல்வந்தர்கள்,அரசியல்வாதிகள்,அதிகாரம் மிக்கவர்கள் எவரும் சாதாரண மக்களை தேடி வருவதில்லை மாறாக மக்களே அவர்களை தேடிப்போக வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. ஆனால் சித்தர்கள் அப்படியல்ல அவர்கள் சாதாரண மக்களிடத்தே வருவார்கள் அனுக்கிரகம் செய்வார்கள். ஆரம்பத்தில் 18 ஆக இருந்த சித்தர்களின் எண்ணிக்கை மீண்டும் மீண்டும் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்து 210 அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள். சித்தர்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். உயிரினங்களிடம் அன்பு செலுத்துபவர்கள். ஆகவே எந்த உயிரையும் வதைப்பதோ அதை உணவாக உண்ணுவதோ சித்தர் வழிபாட்டுக்கு ஏற்பாகாது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;மோகம்&lt;/strong&gt;யாருக்கு&lt;/span&gt; நாம் உதவி செய்ய வேண்டும் என்பது சிலருக்கு விளங்குவதில்லை. பல நாடுகளைச்சேர்ந்த பல அழகிய பறவைகளைப்பற்றி பேசுகிறோம்,ஆனால் எமக்கு அருகாமையில் இருந்து அடிக்கடி கீச்சிடும் அந்த சிட்டுகுருவிகளை மறந்து விடுகின்றோம். அருகில் உள்ள அந்த சிட்டுகுருவிகளுக்கு உணவிடுங்கள்,அருகிலுள்ள உயிர்களை ,மனிதர்களை நேசியுங்கள். தானம் செய்யும் போது உள்ளன்போடு செய்யுங்கள். பலனை எதிர்ப்பார்த்து செய்யாதீர்கள்.&lt;br /&gt;நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர் சிவபாக்கியர் கூறியிருக்கிறார். ஆக நாதன் எங்கிருக்கிருக்கிறார் என்ற சூட்சுமம் உங்களுக்கு விளங்க வேண்டும். நீங்கள் நாதனாக இருக்கிறீர்கள் ஆக உங்கள் மனதிலிருக்கும் தெய்வாம்சம் விழிப்புற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் ? சித்தர்களை நாடுங்கள்.&lt;br /&gt;ஓம் ஜெய் குருவே துணை என்ற மந்திரத்தை கூறுங்கள்&lt;br /&gt;அப்போது உங்களுக்குரிய குரு தென்படுவார் அவரை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;strong&gt;விஷமும் &lt;/strong&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;விஷமிகளும்&lt;/strong&gt;இன்றைய&lt;/span&gt; உலகம் மிகவும் உஷ்ணம் நிறைந்தது. விஞ்ஞானிகள் கூட மெய்ஞானத்தின் தெளிவை பெறாது அதை அறிய விரும்பாது உலக மாறுதல்களுக்கு பல காரணங்களை கூறி வருகின்றனர். உஷ்ணம் காரணமாகவே இன்று மனிதனுக்கு பல நோய்கள் உருவாகின்றன. நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவும் ஒரு மூலிகை தான் .எல்லா காய்கறிகளும் மூலிகைகளே. ஆனால் இன்று எல்லா காய்கறிகளிலும் விஷம் நிரம்பியே உள்ளது. வேதியல் இரசாயனங்கள் கலந்த காய்கறிகளையே நாம் இன்று உண்கிறோம். எனவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று மனிதர்களில் பலர் விஷமிகளாகி விட்டனர். ஆனால் உலகத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சித்தர்கள் கூறி விட்டனர். 2010 இற்குப்பிறகு இந்த உலகத்தில் இயற்கை சீரழிகள் எப்படியெல்லாம் இடம்பெறும் என்பதை பிரும்மரிஷி காகபுஜன்டர் கூறி விட்டார். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-463197914482993569?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/463197914482993569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=463197914482993569' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/463197914482993569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/463197914482993569'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/10/blog-post.html' title='வெளிநாட்டு பறவைகளின் மோகத்தால் உள்ளூர் சிட்டுகுருவிகளை மறந்து விடுகிறோம்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-dBgvOA8o00w/TpkUzO61EZI/AAAAAAAAANQ/FERFqrS1DBE/s72-c/DSCF0204.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-9092643835953540306</id><published>2011-09-26T02:34:00.000-07:00</published><updated>2011-09-26T02:47:45.146-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயம்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;உலகத்தில் மிகப்பெரிய பௌத்த ஆலயம் அமைந்துள்ள நாடானது உலகில் அதிக இஸ்லாமியர்கள் &lt;a href="http://1.bp.blogspot.com/-VUqNjwsgp4A/ToBJDUrZ5PI/AAAAAAAAAM8/GEMk9ULzIwo/s1600/b4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5656601453416539378" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 238px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/-VUqNjwsgp4A/ToBJDUrZ5PI/AAAAAAAAAM8/GEMk9ULzIwo/s320/b4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வசிக்கும் நாடான &lt;span class=""&gt;இந்தோனேசியா&lt;/span&gt; என்பது பலருக்கு தெரியாத விடயம் தான். ஆனால் அது தான் உண்மை.தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தம் வேரூன்றி இருந்த காலத்திலேயே அதாவது எட்டாம் நூற்றாண்டிலேயே போராபுதூர் என்ற இந்த பிரமாண்டமான பௌத்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.இந்த பௌத்த ஆலயமானது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொன்டது. இவை, 2,672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;Sir Thomas Stamford Bingley Raffles&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;, 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் &lt;span class=""&gt;கொண்ட&lt;/span&gt; தாது கோபுரங்களுக்குள் அமர்ந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. &lt;a href="http://2.bp.blogspot.com/-VS4IYpx2auQ/ToBIJ4DYk8I/AAAAAAAAAMs/VZnU8n3UjDw/s1600/Borobudur-Nothwest-view.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5656600466479944642" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 126px" alt="" src="http://2.bp.blogspot.com/-VS4IYpx2auQ/ToBIJ4DYk8I/AAAAAAAAAMs/VZnU8n3UjDw/s320/Borobudur-Nothwest-view.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பௌத்தருக்கான ஆலயமாக மட்டுமல்லாது யாத்திரைக்குரிய இடமாகவும் உள்ளது. புனிதப்பயணம் செய்வோர், இதன் அடியில் தொடங்கி, இதைச் சுற்றியபடியே மூன்று தளங்களுõடாக மேலேறுவர். இம் மூன்று தளங்களும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;கா&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5656601021594691186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-IFsgnq_rLB4/ToBIqMBDZnI/AAAAAAAAAM0/iTDLCskUP8M/s320/b1.jpg" border="0" /&gt;மதாது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;, ரூபதாது, அரூபதாது எனப்படும் பௌத்த அண்டக் கோட்பாட்டில் கூறியுள்ளவாறு மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. இந்தப் பயணத்தின்போது, புனிதப்பயணிகள், 1,460 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுவர்கள், காப்புச் சுவர்கள் ஆகியவற்றுடன் அமைந்த படிக்கட்டுகள், நடைவழிகள் என்பவற்றினூடாகச் செல்வர் என்பது முக்கிய விடயம்.&lt;br /&gt;வரலாறுபோராபுதூர் பௌத்த ஆலயமானது கிறிஸ்துவுக்குப்பின் 800 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தத்தை பரப்புவதில் முன்னின்ற சைலேந்திர மன்னர் வம்சம் மற்றும் சுமாத்ரா பகுதியில் ஆட்சி செலுத்தி ஸ்ரீ விஜயன் ஆகியோரின் காலப்பகுதிகளே இவை. இம்மன்னர்களின் இருவருமே இவ்வாலயத்தை நிர்மாணிப்பதில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர்.இந்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் சுமார் 75 வருடங்களாக இடம்பெற்றுள்ளன. சைலேந்திர மன்னர் வம்சத்தில் வந்த சமரதுங்காவின் ஆட்சி காலத்தில் இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இக்காலகட்டத்திலேயே சுமாத்ரா ,ஜவா பகுதிகளில் இந்து சமயத்தை பரப்பும் வகையில் இந்து ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன என வரலாற்றாசிரியர்களும் தொல்லியலாளர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் சைலேந்திர வம்சமானது ஆரம்பத்தில் மகாயான பௌத்தத்தில் முனைப்பு காட்டினாலும் பின்னர் இந்து மதத்தில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் இதே காலப்பகுதியில் போராபுதூருக்கு 10 மைல் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிவன் ஆலயம் தான் சிவபிரம்மனன். சைலேந்திர மன்னர்களின் ஆதரவில்லாமல் இவ்வளவு பிரமாண்ட சிவன் ஆலயத்தை அமைத்திருக்க முடியாது என்பது வரலாற்று குறிப்புகளின் தகவல்.&lt;br /&gt;மறைந்து கிடந்த ஆலயம்14 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் பௌத்த மற்றும் இந்து சாம்ராஜ்யங்கள் னீழ்ச்சியுற்றன.இதற்கு காரணம் இஸ்லாம் தலை தூக்கியதாகும். இதன் காரணமாக இந்து ,பௌத்த ஆலயங்களின் பராமரிப்பு கைவிடப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் காரணமாக எரிமலை சாம்பரால் மேற்படி போராபுதூர் ஆலயம் முற்றாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்று. பின்னர் காடுகள் மூடியதால் கிட்டத்தட்ட இப்பிரதேசமே மறைந்து விட்டது. இதை வரலாறுகள் தான் சொல்கின்றன.எனினும் இவ்வளவு பிரமாண்ட ஆலயமும் அதன் சுற்றுபுறமும் மறைந்தமையை வரலாற்று மர்மம் என்கின்றனர் தொல்லியலாளர்கள்.மீண்டும் கண்டி பிடிப்பு 1811 இலிருந்து 1816 வரை ஜவாவானது பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இக்காலகட்டத்தில் ஜவாவின் கவர்னராக இருந்தவர் சேர் தோமஸ் ஸ்டென்போர்ட் பிங்லே ரபல்ஸ்ஸ் என்பவராவார்.( Sir Thomas Stamford Bingley Raffles) இவர் ஜாவாவின் வரலாற்றை அறிய மிகவும் அக்கறை காட்டினார். இதற்காக நெருந்தூர பயணங்களை மேற்கொண்டார். கோர்னலியஸ் என்ற டச்சு பொறியியலாளரை தலைமைத்துவமாக கொண்டு 200 பேர் கொண்ட குழுவினர் போராபுதூர் பகுதியை சுத்தம் செய்து மீண்டும் இந்த ஆலயத்தை கண்டு பிடித்தனர்.பின்பு முழுமையான ஆலயத்தை கண்டு பிடிக்க சுமார் 50 ஆண்டுகள் வரை சென்றன. மரங்களை வெட்டி இவ்விடத்தை சுத்தம் செய்வது இலகுவாக இருக்க வில்லை. இந்தோனேசிய அரசும், யுனஸ்கோவும் இணைந்து செயற்படுத்திய பெரிய அளவிலான மீளமைப்புத் திட்டம் ஒன்று 1975 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்புகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் பலரை திகைக்க வைக்கின்றன. உச்சியில் அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தர் சிலையானது தர்ம சக்கர முத்திரையடன் உள்ளது. வாயிலில் அமைக்கப்பட்டுள்ள காவற்சிங்க சிலைகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் என்பன அதிசயிக்க வைக்கின்றன. கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் புடைப்புச்சிற்பங்களும் இந்த ஆலயத்தை இன்னும் மதிப்பால் உயர்த்துகிறது.உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை பௌத்த யாத்ரீகர்கள் மற்றும் உல்லாசப்பயணிகள் விரும்பி வருகை தரும் இடமாகவும் இது விளங்குகிறது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-9092643835953540306?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/9092643835953540306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=9092643835953540306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/9092643835953540306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/9092643835953540306'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/09/blog-post_26.html' title='உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயம்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-VUqNjwsgp4A/ToBJDUrZ5PI/AAAAAAAAAM8/GEMk9ULzIwo/s72-c/b4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-847491414153026704</id><published>2011-09-20T04:45:00.000-07:00</published><updated>2011-09-20T05:01:17.850-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>தேயிலை ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி எப்படி மீளப்போகிறது இலங்கை ?</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேயிலை ஏற்றுமதி 2010 ஆம் ஆண்டு (கி.கி மில்லியன்களில்)&lt;br /&gt;&lt;/strong&gt;கென்யா 441,021&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கை 314,500&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சீனா 302,419&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்தியா 191,490&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆர்ஜன்டீனா 98,025&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;உகண்டா 50,834&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மாலவி 48,579&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பங்களாதேஷ் 913&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாகவும் அந்நிய செலாவணியைப்பெற்றுத்தருவதில் கணிசமான பங்கையும் வகிக்கும் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் &lt;img id="BLOGGER_PHOTO_ID_5654410333295374818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-2bETc_7NwXU/TniAPWJeceI/AAAAAAAAAMk/7mrKQ4Kpa_o/s320/DSCF0859.jpg" border="0" /&gt;எழுந்துள்ளன. உண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மை,எனினும் இதை காரணமாக முன்வைத்து தொழிலாளர்களின் வேதனம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது அவர்களின் வேலை நேரத்தை அதிகரித்து அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை வர்த்தக சங்கம் இந்த ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி விடயத்தை பி.பி.சி செய்தி சேவை வரை கொண்டு சென்று தொழிலாளர்களின் வேதனத்தை நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என்று கூறியதால் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒரு வித குழப்ப நிலை தோன்றியது என்னவோ உண்மை .எனினும் தொழிலாளர் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேதனம் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்ததையடுத்தே தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதி பிறந்தது. எனினும் ஒரு சில தோட்டக்கம்பனிகள் தொழிலாளர் வேதனம் குறைக்கப்படாவிட்டாலும் உற்பத்தி அளவை கூட்ட வேண்டும் என்றும் அதற்காக அவர்களின் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பணி நேரமானது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருவதாக சில தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நெருக்கடி ஏன், எப்படி?&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;உலகளாவிய ரீதியில் தற்போதைய நிலையில் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் மூன்றாமிடம் பிடிக்கின்றது இலங்கை.&lt;/span&gt; இலங்கையிடமிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா,லிவியா ,ஈரான் ,ஈராக் ஆகிய நாடுகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆண்டு தோறும் இலங்கை சுமார் 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. இதில் 78 வீதமானவை மேற்குறிப்பிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதியாகின்றது. அதைவது கிட்டத்தட்ட 235 மில்லியன் கிலோ கிராம்களாகும். எனினும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து 6 மாதம் வரை இலங்கை மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு 55 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையே ஏற்றுமதி செய்துள்ளது. லிபியா ,சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலை காரணமாக அங்குள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல முடியாத சூழநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேயிலை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து மீள வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொழிலாளர் வேதனமும் கூட்டு&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒப்பந்தமும்இந்நிலையில் நஷ்டத்தை ஈடு கட்ட தொழிலாளர் வேதனத்திலிருந்து நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என தேயிலையை ஏற்றுமதி செய்யும் ஒரு சில வர்த்தக சங்கங்கள் இலங்கை தேயிலைச் சபையிடமும் தோட்டக்கம்பனிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடம் செய்து கொள்ளப்பட்ட புதி ய கூட்டு ஒப்பந்தத்தின் படி தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு எல்லாம் அடங்களாக 515 ரூபா வழங்கப்பட வேண்டும்.இதில் நூறு ரூபாவை குறைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை,எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் முதலாளிமார் சம்மேளனமும் இ.தொ.கா,இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அமைப்புகளாகும். இச்சந்தர்ப்பத்தில் கூட்டு ஒப்பந்தம் என்பது இரண்டு வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அந்த இரண்டு வருடங்களுக்கு இதில் எவ்வித மாற்றங்களும் செய்ய முடியாது. ஆகவே தொழிலாளர் வேதனம் என்பது எவ்விதத்திலும் குறைக்கப்பட சந்தர்ப்பங்களில்லை என தெரிவித்திருக்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இது குறித்து முதலாளிமார் சம்மேளனம் மாத்திரமே தம்முடன் பேச்சு நடத்துவதற்குரிய உரிமையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேயிலை வர்த்தக நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் மூலமாக முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இதன் தலைவரும் சிரேஷ்ட தொழிற்சங்க வாதியுமான ஓ.ஏ.இராமையா கருதுத்தெரிவிக்கையில் தொழிலாளர் வேதனத்தை குறைக்க பலர் பிரசாரம் செய்து வந்தனர்.ஆனால் அதற்கு சந்தர்ப்பமில்லை என்று தெரிந்தவுடன் தற்போது வேறு விதமான கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். அதாவது&lt;br /&gt;1) தோட்டங்களில் உற்பத்தி திறன் மிகவும் குறைந்துள்ளது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;2) தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏனைய தனியார் துறையினரை விட வேதனம் மற்றும் இதர சலுகைகள் அதிகம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;3) ஆண் தொழிலாளர்கள் குறைவான நேரமே பணியில் ஈடுபடுகின்றனர்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு சில தோட்டங்களில் பெண்களை அதிகளவு எடைக்கு கொழுந்து பறிக்கச்கூறி நிர்பந்திக்கப்பட்டது. இதன் பின்னணியிலுள்ள காரணமும் தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான். மறு பக்கம் ஆண் தொழிலாளர்கள் மேல் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பார்க்க வேண்டும். ஒரு தொழிலாமி பகல் உணவு நேரம் தவிர்த்து 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் .எனினும் பெருந்தோட்டப்பகுதிகளில் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தமக்கு வழங்கப்படும் வேலை அளவுக்கு ஏற்ப (கூஅகுஓ) குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுவர்.இதற்குக்காரணம் வேறு வருமானத்தை தேடிக்கொள்ளல் பகுதி நேர வேலைகளில் இணைந்து கொள்ளல் போன்றவை தான். இது அக்காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வரும் ஒரு விடயமே தவிர இதில் இரகசியங்கள் இல்லை என்றார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சகல வேலைத்தளங்களிலும் உற்பத்தித்திறனை கூட்டுவதற்கு அரசாங்கத்தினால் புதிய செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உற்பத்திறன் மற்றும் தொழிற்றிறனை அதிகரித்தல் எனும் தலைப்பில் இது குறித்த கலந்துரையாடல்களை சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர முன்னின்று நடத்தி வருவதாக சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஒருவர் தெரிவிக்கிறார்.&lt;br /&gt;இதே வேளை இந்த விவகாரம் பிரதான தொழிற்சங்கங்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. தொழிலாளர் நலன் பேணும் விடயங்களில் அக்கறை செலுத்தாது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுவதா என சில தொழிற்சங்க பிரமுகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயங்களை தொழில் அமைச்சே கையாள வேண்டும் என்றும் இதை ஒரு சிரேஷ்ட அமைச்சர் மூலம் கொண்டு நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சகல வேலைத்தளங்களிலும் இது அமுல்படுத்தப்பட்டாலும் தொழிலாளர் வர்க்கமே இதன் மூலம் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூட்டு ஒப்பந்தத்தில் வேலை நேரத்தை கூட்ட முடியுமா?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தொழிலாளர்களின் பணி நேரம் என்பது தனித்து நோக்கப்பட வேண்டிய விடயமல்ல. தோட்டத்தொழிலாளர்களைப்பொறுத்த வரை தொழிற்சட்டம் ,கைத்தொழில் பிணக்குச்சட்டம் மற்றும் கூட்டும் ஒப்பந்தம் இந்த மூன்றையும் பார்க்க வேண்டும். பணி நேரத்தை அதிகரிப்பது அல்லது கட்டாயமாக்குவது என்பது நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தும். கூட்டு ஒப்பந்தத்திற்குள் இதை கொண்டு வர முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு முறையில் இது கொண்டு வரப்படலாம் என்பதே பலரினதும் எதிர்ப்பார்ப்பு . &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தற்போதைய நிலை என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;கடந்த ஆறு மாத காலங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலையில் எங்ஙனம் இந்த சரிவிலிருந்து இலங்கை மீளப்போகிறது என்பது கேள்விக்குறியே. இந்த நிலைமை தொடர்ந்தும் இருப்பதாகவே பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் மாலனி பீரிஸ் தெரிவிக்கிறார். இதன் காரணமாக நாம் வேறு நாடுகளுக்கு அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.இலங்கை தேயிலை சபையும் பெருந்தோட்ட அமைச்சும் இது குறித்து கலந்துரையாடி சீனா ,அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் உள்ளூர் தேவையை அறிந்து அங்கு தேயிலையை சந்தைப்படுத்தலாமா என யோசித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார். முக்கியமாக சீனாவில் இலங்கை பிளக் டீயிற்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;strong&gt;உலக சந்தையை இழக்கிறதா இலங்கை?&lt;/strong&gt;&lt;br /&gt;தேயிலை ஏற்றுமதியில் உலகில் முன்னணியில் இருந்த இலங்கையை தற்போது ஆபிரிக்க நாடான கென்யா பின் தள்ளியுள்ளது. இருப்பினும் சிறந்த இரகம் மற்றும் விலை உயர்ந்த தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் இலங்கை முன்னணியிலுள்ளது. தேயிலை தொழிற்றுரையை நம்பி நேரிடையாகவும் மறைமுகமாவும் இலட்சக்கணக்கானோர் உள்ளனர்.எனினும் சில கம்பனிகள் மீள் நடுகையில் அதிக அக்கறை காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பழைய தேயிலை மலைகள் இன்று பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு வெளியாருக்கு விற்கும் நிலை தோன்றியுள்ளதை மறுக்க முடியாது. அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் முக்கிய பயிர் இது என்பதிலும் பார்க்க தொழிலாளர் வர்க்கத்தின் பெருமை கூறும் ஒரு வர்த்தக பொருளாக இன்று தேயிலை விளங்குகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நலன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்றால் மட்டுமே இத்தொழிற்றுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-847491414153026704?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/847491414153026704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=847491414153026704' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/847491414153026704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/847491414153026704'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/09/blog-post.html' title='தேயிலை ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி எப்படி மீளப்போகிறது இலங்கை ?'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-2bETc_7NwXU/TniAPWJeceI/AAAAAAAAAMk/7mrKQ4Kpa_o/s72-c/DSCF0859.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-8034086267798063391</id><published>2011-05-03T04:25:00.000-07:00</published><updated>2011-05-03T04:39:50.126-07:00</updated><title type='text'>ராஜபக்ச -பிரபாகரன்  , ஒபாமா - பின்லேடன்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7ppYKIkf6MQ/Tb_nI7JLlsI/AAAAAAAAAMI/hV0q2WGkN_s/s1600/obama-osama.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5602450601973356226" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/-7ppYKIkf6MQ/Tb_nI7JLlsI/AAAAAAAAAMI/hV0q2WGkN_s/s320/obama-osama.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அல்கைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க துருப்புக்களால் கொல்லப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக ஒளிஒலிபரப்பாகி கொண்டிருந்த போது ஒரு தொழிற்சங்க முக்கியஸ்த்தர் திடீரென எனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். ஒசாமா கொல்லப்பட்ட விடயத்தை சர்வசாதாரணமாகவே இன்று உலக மக்கள் எடுத்துக்கொள்வர் என்று தெரிவித்த அவர் அமெரிக்காவிற்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கலாம் காரணம் ஒசாமாவால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். மற்றையோருக்கு இது சாதாரண விடயம் தான் என்றார்.ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் இது. ஒசாமா ஒரு சர்வதேச தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டவன். ஆகவே அவனுக்குள் பல திறமைகள் இருக்க வேண்டும் முக்கியமாக அமெரிக்க துருப்புகளின் கண்களில் படாமல் உலகெங்கும் அவர் சுற்றி வந்திருக்கிறான்.அப்படி இருக்கும் போது பாகிஸ்தானில் &lt;span class=""&gt;ஒரு&lt;a href="http://2.bp.blogspot.com/-K6RHEBGBtE0/Tb_oKNc0n2I/AAAAAAAAAMY/GFHjqL6zUAY/s1600/Mahinda-Rajapaksa_2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5602451723579072354" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 229px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/-K6RHEBGBtE0/Tb_oKNc0n2I/AAAAAAAAAMY/GFHjqL6zUAY/s320/Mahinda-Rajapaksa_2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt; வீட்டில் இருக்கும் போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான் என்றால் சந்தேகமேயில்லை அவனை யாரோ காட்டிக்கொடுத்துள்ளனர். இது காட்டிக்கொடுக்கும் மக்கள் அதிகரித்துள்ள உலகம். ஆகையால் இதை சாதாரணமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது ? என்று &lt;span class=""&gt;திருப்பிக்கே&lt;a href="http://4.bp.blogspot.com/-XL4Jmxwj5zo/Tb_npyVDHpI/AAAAAAAAAMQ/7KkEAoU63WQ/s1600/M_Id_82245_Prabhakaran.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5602451166542896786" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 250px" alt="" src="http://4.bp.blogspot.com/-XL4Jmxwj5zo/Tb_npyVDHpI/AAAAAAAAAMQ/7KkEAoU63WQ/s320/M_Id_82245_Prabhakaran.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ட்டார்&lt;/span&gt;.&lt;br /&gt;அது அவரது சொந்த கருத்து. இருப்பினும் மேற்குல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த ஒசாமா கொல்லப்பட்டு விட்டான். ஆனால் அவனது அமைப்பு பூரணமாக அழிக்கப்படவில்லை. அல்கைதா அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல்சௌகாரி ஒசாமாவின் இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்.மேலும் தமது புனித யுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க உட்பட பல மேற்குலக நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை தான். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கசாப்பு கடைக்காரன் என்று சொன்னவர் தான் இந்த அல் சௌகாரி. தனது ஆட்சி காலத்தில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பால் உலகம் முழுக்க விமர்சிக்கப்பட்டவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ். சதாம் உசேனை தூக்கிலிட்ட பிறகும் கூட ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. மறுபுரம் இவரது ஆட்சி காலத்திலேயே அமெரிக்கா இரட்டை கோபுரத்தையும் அல்கைதாவின் தாக்குதலில் பறி கொடுத்தது. இரண்டு தடவைகள் பதவியிலிருந்தும் உருப்படியான எந்த வேலையும் செய்யாமல் போன புஷ்ஷின் இடத்திற்கு வந்த பராக் ஒபாமாவின் நுணுக்கமான வியூகத்திற்குக் கிடைத்த வெற்றியே ஒசாமாவின் மரணம்.&lt;br /&gt;இனி ஒபாமா தான் சில காலங்களுக்கு ஹீரோவாக ஜோலிக்கப்போகிறார். சரி அதிருக்கட்டும் தலைப்பிற்கு இன்னமும் வரவில்லையே? இலங்கையிலும் சுமார் 20 ஆண்டு கால யுத்தத்தை தனது இரும்புப்பிடியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பலரை அழித்து புலிகள் இயக்கம் ஒன்றே இன்று இலங்கைக்குள் இல்லை என்று கூறப்படுகிறது. புலிகள் இராணுவ ரீதியாக தோல்வியை தழுவியதும் ஜனாதிபதி ராஜபக்ச நாயகனாக வலம் வந்தார்.இரண்டாவது தடவை அவர் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி பதவியை கைப்பற்றவும் அவரது கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுமளவிற்கு முன்னேறவும் அவருக்கு வலிமையை கொடுத்தது இந்த வெற்றி தான்.மறுபுரம் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உட்படாமலில்லை. ஐ.நாவின் போர்க்குற்றச்சாட்டு அறிக்கைக்கு பதில் கொடுக்கும் கடப்பாட்டில் இலங்கை உள்ளது.&lt;br /&gt;இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின் இறுதி கட்டத்தில் பல பொது மக்கள் கொல்லப்பட்டதாகத் தான் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இது ஒபாமாக்களின் விடயத்தில் எல்லாம் எடுபடாது.காரணம் வியட்நாம்,ஈரான் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு காலத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேசப்படைகள் செய்த அட்டூழியங்கள் பற்றி யார் தான் வாய் திறப்பார்கள்?&lt;br /&gt;வாய் திறப்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாராவது காட்டிக்கொடுக்க வேண்டுமே ? என்ன புரியவில்லையா? ஆரம்ப பந்தியை முதலிலிருந்து வாசிக்கவும்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-8034086267798063391?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/8034086267798063391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=8034086267798063391' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/8034086267798063391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/8034086267798063391'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2011/05/blog-post_03.html' title='ராஜபக்ச -பிரபாகரன்  , ஒபாமா - பின்லேடன்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7ppYKIkf6MQ/Tb_nI7JLlsI/AAAAAAAAAMI/hV0q2WGkN_s/s72-c/obama-osama.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-5773788200976489067</id><published>2010-09-13T04:41:00.000-07:00</published><updated>2010-09-13T05:12:08.485-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>மலையக மக்களை நாம் மறக்க வில்லை…!</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/TI4T52HMYbI/AAAAAAAAALs/uoWHFMtOAJM/s1600/DSCF0168.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5516368478074593714" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/TI4T52HMYbI/AAAAAAAAALs/uoWHFMtOAJM/s320/DSCF0168.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த மத்திய மலை பிரதேசத்தில் செறிந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை நாம் மறக்க வில்லை. மறக்கவும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து அவர்கள் உழைக்கும் மக்களாக இங்கு வந்த காலம் முதல் இப்போதுள்ள சூழல் வரை எல்லாம் &lt;span class=""&gt;அறி&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/TI4UrNkjnTI/AAAAAAAAAL0/ppiE6RLf9bs/s1600/DSCF0179.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5516369326185356594" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/TI4UrNkjnTI/AAAAAAAAAL0/ppiE6RLf9bs/s320/DSCF0179.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ந்து&lt;/span&gt; வைத்துள்ளோம். இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அறியாமலில்லை என்று கூறுகிறார் பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம்.வீரகேசரி பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் கொழும்பு ,யாழ்ப்பாணம் ,மற்றும் மலையகத்தில் கொட்டகலை ஆகிய இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தி இசை ஆர்வலர்களை மட்டுமன்றி தனது அமைதியான அன்பான குணத்தின் மூலம் பலரினதும் மனதில் இடம்பிடித்து விட்டார் டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம். சரீரத்தில் மட்டுமன்றி சாரீரத்திலும் தனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனை எமது கண் முன் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்திய அவரை சூரியகாந்தி பத்திரிகைக்காக அட்டனில் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.&lt;br /&gt;மலையகம் என்ற சொற்பதம் எமக்கு புதியதல்ல அதன் தரைத்தோற்றம் மக்கள் ,அவர்களின் பண்புகள் எல்லாம் அறிந்து தான் வைத்துள்ளோம். எனது தந்தைக்கு எந்தளவிற்கு இங்கு இரசிகர்கள் உள்ளனரோ அதே போல் எனக்கும் எனது குழுவினருக்கும் இங்கு கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியைத் தருகிறது. 80 வருடம் தொடர்ச்சியாக ஒரு தமிழ் பத்திரிகை இலங்கையில் வந்து கொண்டிருப்பது ஆச்சரியம் அந்த பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பின் பேரில் என்னையும் எனது குழுவினரையும் அழைத்து இன்னிசை கச்சேரி நடத்தி எமக்கு மாபெரும் கௌரவத்தை அளித்து விட்டனர். என்று தான் கூற வேண்டும்.&lt;br /&gt;மேலும் இவ்வாறான இசை நிகழ்வுகள் எமது உறவை மேலும் வலுப்படுத்துகின்றன. கலைகளுக்கு மொழியோ மதமோ ஒரு தடையாக இருப்பதில்லை. அதை பலமுறை பல சந்தர்ப்பங்களில் நாம் அவதானித்துள்ளோம் அனுபவித்துள்ளோம். இவ்வாறான நிகழ்வுகள் எம்மை மட்டுமல்லாது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் உள அமைதியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்னிசை கச்சேரிக்காக இலங்கை மண்ணில் கால் பதித்த நாள் முதல் எமக்குக்கிடைத்த வரவேற்பும் அன்பும் மறக்க முடியாதவை. எனது தந்தையின் குரல் எனக்கு இருப்பதாக பலரும் கூறி ஆச்சரியப்படுகின்றனர்.இது எனக்குக்கிடைத்த வரம் என்றே கூற வேண்டும். குரலை வளப்படுத்த நான் விசேடமாக எதுவும் செய்வது கிடையாது. அதை அப்படியே விட்டு விட வேண்டும் என்று தான் கூறுவேன்.குரலை கடினப்படுத்தி பாடல்கள் என்ற பெயரில் சத்தமிடுவதை தவிர்த்தாலே போதும்.&lt;br /&gt;மலையகத்தில் கொட்டகலை நகரில் நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது.அனைவரும் அமைதியாக அமர்ந்து மெய்மறந்து இரசித்து பார்த்தது மட்டுமன்றி தமக்கு விருப்பமான பாடல்களை எழுதி தந்தனர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினோம். எம்மேல் அவர்கள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாட்டை மனமகிழந்து ஏற்றோம் என்றார்.&lt;br /&gt;உங்களது தந்தை பக்தி பாடல்களால் புகழ் பெற்றவர் நீங்கள் விரும்பி வணங்கும் தெய்வம் யார் என்று கேட்டதற்கு சட்டென தாய் தான் என்று பதில் வந்தது. அதற்கு காரணமும் கூறினார். தந்தை தாயை விட வேறு தெய்வங்கள் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அதிலும் சிறுவயதில் சோறுட்டி ,பாலூட்டி ,தாலாட்டி ,சீராட்டி வளர்ப்பதில் தாயின் பங்கை எவரும் நிரப்பி விட முடியாது. பிள்ளையின் முதல் சொந்தம் தாய் தானே? நான் இன்றும் எனது தாயுடன் தான் வசித்து வருகிறேன் என்கிறார் சீர்காழி .ஜி.சிவசிதம்பரம். வித்தியாசமான அதே நேரம் மலையக மக்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு இன்முகக் கலைஞரை சந்தித்ததில் மனம் நிரம்பியிருந்தது.&lt;br /&gt;சிவலிங்கம் சிவகுமாரன் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-5773788200976489067?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/5773788200976489067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=5773788200976489067' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5773788200976489067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5773788200976489067'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2010/09/blog-post.html' title='மலையக மக்களை நாம் மறக்க வில்லை…!'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/TI4T52HMYbI/AAAAAAAAALs/uoWHFMtOAJM/s72-c/DSCF0168.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-5320066042464099740</id><published>2010-07-19T23:37:00.000-07:00</published><updated>2010-08-09T02:17:22.970-07:00</updated><title type='text'>இந்திய வம்சாவளியினரா மலையகத்தமிழர்களா  நாங்கள்?</title><content type='html'>இத்தனை காலமும் இல்லாத சந்தேகம் இப்போது ஏன் திடீரென ஏற்பட வேண்டும் என்று பலர் நினைக்கக்கூடும் ஆனால் தமிழர்கள் என்ற பொதுவான அடையாளப்படுத்துதலின் கீழ் மலையக மக்கள் என்று கூறப்படுவோர் இன்று இல்லை அல்லது அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இப்படி ஒரு கேள்வியை கேட்கத்தோன்றியது. அண்மையில் கோவையில் இடம்பெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கூட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட குழுவினருக்கும் இதே அனுபவம் தான் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் மலையகத்தமிழர்கள் என்று ரீதியில் &lt;img id="BLOGGER_PHOTO_ID_5495874828669043042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/TEVFCczUQWI/AAAAAAAAALU/qeWw4LPgFQY/s320/HENFOLD+STREET+DRAMA+14.05.2009+(5).jpg" border="0" /&gt;ஒரு சமுக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழுவுக்கு தலைமை தாங்கிய கவிஞர் சு.முரளிரதன் இச்சம்பவத்தை ஒரு நிகழ்வில் வேதனையோடு கூறியதை எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால் இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்பெயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.&lt;br /&gt;இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயம் பற்றி அலசி ஆராய்வதற்குப் பல காரணங்கள் முன்னிற்கின்றன.&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;1)தென்னிந்தியாவிலிருந்து உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த ஒரு மக்கள் கூட்டம் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி இந்தியாவில் உள்ள பெரும்பாலனவர்களுக்கு ஏன் தமிழ் நாட்டினருக்கே தெரியாமலிருப்பது.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;2) இலங்கை தமிழர்கள் அல்லது இலங்கை தமிழ், இலக்கியம்,கலாசாரம்,பாரம்பரியம் என்றால் அது ஒன்று தான் இருக்கின்றது இருக்க வேண்டும் என்ற ரீதியில் இன்று உலகம் முழுக்க பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;3)இப்படி ஒரு தமிழ் பேசும் சமுகம் இருக்கும் பட்சத்தில் அவர்களின் எங்கிருந்து வந்தார்கள் அவர்களின் அடையாளப்படுத்தல் என்ன ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற அக்கறை எவருக்கும் இல்லாது போனமை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;4) இந்நிலையில் மலையகம் என்ற பதம் பலருக்கு விளங்காத ஒரு சொல்லாகவும் கேலிக்குரிய விடயமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றமை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அண்மையில் புதிதாக வெளிவந்திருக்கும் ஒரு தமிழ் வாரமலரின் ஆசிரியத்தலையங்கத்திலேயே மலையக மக்கள் &lt;strong&gt;மலைபிரதேச மக்கள்&lt;/strong&gt; என்று விளிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினரை அப்பிரதேச புவியியல் அம்சங்களை வைத்து பெயர் சூட்டி அழைக்கும் பண்பு என்பது வேறு அதை இதோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். சங்க காலத்தில் மலையும் மலை சார்ந்த மக்களை குறிஞ்சி நில மக்கள் என்று அழைத்ததுண்டு. இப்போது அப்படியல்லவே? ஆபிரிக்காவின் சகாரா பகுதி வாழ் மக்களை பாலைவனக்கூட்டம் என்றா அழைக்கிறோம் அல்லது இமயமலை நேபாளம் பகுதி வாழ் மக்களை பனி மலை பகுதி வாழ் மக்கள் என்றா அழைக்கிறோம்? தமிழ் நாட்டைப்பொறுத்த வரை மலைசாதியினர் அல்லது மலைப்பகுதி மக்கள் என்று குறிப்பிடப்படுவோர் பூர்வீகக்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என்றே பொருள்படும். இந்தியாவில் 416 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். சரி விடயத்திற்கு வருவோம். மலையக மக்கள் என்ற பதம் எவ்வாறு உருவானது?&lt;br /&gt;1844 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை கோப்பி தோட்டங்களில் பணி செய்வதற்காக லுதினன் கேர்னல் ஹென்றி சி.போர்ட் என்பவர் 14 பேரை அழைத்து வந்ததோடு வரலாறு ஆரம்பிக்கின்றது. ( ஆனால் 1818 ஆம் ஆண்டே இந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்திற்கு மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது)&lt;br /&gt;இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களுக்கே முதன் முதலில் வந்தனர் என்று வரலாறு கூறுகிறது.மலைகள் சூழந்த பிரதேசமாகையால் இப்பகுதி வாழ் மக்கள் மலைய மக்கள் என்று அழைக்கப்பட்டனர் என குறிப்பிடப்பட்டாலும் 1950 களுக்குப்பிறகே மலையகம் என்ற பதம் தோற்றம் பெற்றது. புவியியல் ரீதியில் சப்ரகமுவ குன்றுகளை தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகம் சார்ந்து பார்க்கும் போது மாத்தளை,கண்டி,பதுளை,இரத்தினபுரி,கேகாலை, ஏன் தென் பகுதியின் காலி மாவட்டத்திலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்கின்றார்கள். அப்படியானால் அவர்களை மலையகத்தவர்கள் என்று அழைப்பது சரியாகுமா?&lt;br /&gt;மலையகம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன ஆனால் எமது அடையாளம் என்பது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் அதை எப்படி மாற்ற முடியும் என்ற பதில் குரல்களும் எழாமலில்லை.இந்தியாவின் அடைமொழியோடு நாம் வாழ விரும்பவில்லை இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அவர்கள் அறியாமலிருக்கும் போது ஏன் அந்தப்பெயரை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற இளந்தலைமுறையினரின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான ஓ.ஏ.இராமையாவுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் சில விளக்கங்களை கூறினார்.&lt;br /&gt;‘ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு ,வரலாற்றை திரிபுபடுத்த எவராலும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து பணி செய்வதற்காக வந்த மக்கள் இலங்கைக்கு மட்டுமா வந்தார்கள்? மலேஷியா ,மொரிஷியஸ் நாடுகளுக்கும் சென்றார்கள்.அவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திற்கு ஏற்ப சமுகப்பெயர்களை சூட்டிக்கொள்ள வில்லை.இன்றும் மலேஷியாவில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்தை தான் பாவிக்கின்றனர். ஆகவே எமது வேர் இந்தியா தான் என்பதில் சந்தேகமில்லை. தொழில் ரீதியாக பார்க்கும் போது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் என்று கூறுவதில் தப்பில்லை. ஆனால் மலையகத்தவர் என்ற பதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் எம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் என்றே வரலாறு கூறும் காரணம் அது தான் உண்மை. ஏன் எமது பிறப்பத்தாட்சி சான்றிதழ்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? மலையகத்தமிழர் என்றா உள்ளது? அப்படி மலையக சமுகம் என்று நாம் கூறிக்கொண்டாலும் அதை அரசாங்கத்திடம் கூறி சான்றிதழலில் மாற்றிக்கொள்ளத்தான் முடியுமா? இந்திய வம்சாவளி மக்களை ஓரங்கட்டுவதற்கும் அவர்களை கேலிப்பொருளாக சித்திரிப்பதற்கும் பலர் இன்று முனைப்பாக உள்ளனர்.ஒரு பேராசிரியர் சி.வி.வேலுப்பிள்ளையை தோட்டக்கவிஞர் என்று வர்ணிக்கிறார் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? எமக்கென்று ஒரு வரலாறு உள்ள போது இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பெயரை வைத்துக்கொண்டு வாழ்தல் சரியா என்பதை சிந்திக்க வேண்டும்” என்றார்&lt;br /&gt;எங்கள் சமுகத்தை நாம் எப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என்பது வாத பிரதிவாதங்களுக்கு உட்டபட்ட விடயம் எனினும் காலத்தின் தேவை அறிந்து இது குறித்து நாம் உடனடியாக செயற்பட வேண்டிய விடயமாகி விட்டது. கல்விமான்கள் ,புத்தி ஜீவிகள் , அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகள் இது குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;சிவலிங்கம் சிவகுமாரன்&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-5320066042464099740?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/5320066042464099740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=5320066042464099740' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5320066042464099740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5320066042464099740'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2010/07/blog-post.html' title='இந்திய வம்சாவளியினரா மலையகத்தமிழர்களா  நாங்கள்?'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/TEVFCczUQWI/AAAAAAAAALU/qeWw4LPgFQY/s72-c/HENFOLD+STREET+DRAMA+14.05.2009+(5).jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-7225071141032309810</id><published>2010-03-08T23:14:00.000-08:00</published><updated>2010-03-08T23:40:43.584-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கை அரசியலும் பெண்களின் பங்களிப்பும்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/S5X3F7tNDCI/AAAAAAAAALM/S7llzeLNDQI/s1600-h/090526150406-830-522.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5446531005673180194" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 299px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/S5X3F7tNDCI/AAAAAAAAALM/S7llzeLNDQI/s320/090526150406-830-522.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாவர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;* 1931 ஆம் ஆண்டே வாக்களிக்கும் உரிமையை இலங்கை வாழ் பெண்கள் பெற்றனர் எனினும் இது வரையில் அவர்களின் அரசியல் பங்களிப்பு மோசமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலங்கை பாராளுமன்றத்தில் பெண்கள்&lt;/span&gt;&lt;br /&gt;ஆண்கள் 212&lt;br /&gt;பெண்கள் 13&lt;br /&gt;மொத்தம் 225 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;*1931 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச்சேர்ந்த நாடுகள் வரிசையில் இலங்கை இவ்விடயத்தில் முதல் நாடு என்ற பெருமையைப்பெற்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;*1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையோடு பதவியேற்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;*1994 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா குமாரதுங்க பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு காலகட்டங்களில் பல தேர்தல்களை சந்தித்த நாடு என்ற வகையில் இலங்கையைப்பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஒரு பெண்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியதோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும்படியும் கோரிக்கைகளை முன்வைத்தனர். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் இப்பெண்கள் எழுத்து மூலமான தமது கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர் என்பதும் முக்கிய அம்சம்.எனினும் எதிர்காலத்தில் இது எந்த விதத்தில் சாத்தியப்படப்போகிறது என்பது கேள்விக்குறியே. இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரையறையோடு அது நின்று விட்டதை காணக்கூடியதாக உள்ளது.&lt;br /&gt;1931 ஆம் ஆண்டு இலங்கையில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப்பெற்றனர். இதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் வரிசையில் பெண்களுக்கு இவ்வரிமையை அளித்த முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றது. 1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப்பெற்றார். 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றார். வெவ்வேறு காலகட்டத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் ஒரு சில தேர்தல் தொகுதிகளைப்பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் சிலர் பாராளுமன்ற பிரவேசம் செய்தாலும் இலங்கை அரசியலில் முத்திரைப்பதித்த பெண் அரசியல்வாதிகள் என்ற வரையறைக்குள் எவரையும் அடக்க முடியாத நிலைமையே உள்ளது.இதற்கு என்ன காரணம் என்பது முக்கிய விடயம்.&lt;br /&gt;இலங்கையை விட பெண்கள் விடயத்தில் இறுக்கமான கலாசார பின்புலத்தைக்கொண்ட ஏனைய நாடுகளில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது அதிகமாக உள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 18.6 வீதமானோர் பெண்களாவர். தென்கிழக்காசிய நாடுகளை வரிசைப்படுத்தினால் இலங்கை பாராளுமன்றமே மிகக்குறைவான வீதத்தில் பெண்களைக்கொண்டிருக்கின்றது 225 உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள்.&lt;br /&gt;முதலில் உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பை ஈடு செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். ஆனாலும் இலங்கையைப்பொறுத்தவரை உள்ளூராட்சி அமைப்புகளில் (பிரதேச,நகர ,மாநகர சபைகள்) பெண்களின் உறுப்புரிமை 1.8 வீதமாகவே உள்ளது. மாகாணசபைகளில் 4.1 ஆகவும் பாராளுமன்றத்தில் 5.8 ஆக உள்ளது.&lt;br /&gt;இதன் காரணமாகவே காலாகாலமாக பெண்களின் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இங்கு ஏற்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்பது ஒரு சில பெண்கள் சார் அமைப்புகளின் கோரிக்கை. இருப்பினும் இந்த முறையில் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோ தொழிற்சங்கங்களோ தமக்குரிய பெரும்பான்மை இல்லாது போய்விடும் என்ற மறைமுக அச்சத்தை கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே தொழிற்சங்கமோ அரசியல் கட்சியோ பெண்கள் தலைமைத்துவத்தைப்பொறுத்தவரை வெறும் மாவட்ட தலைவி,மகளிர் அணித்தலைவி என்ற வரையறைக்குள் மட்டும் அவர்களை வைத்துக்கொள்வதில் திருப்தி காண்கின்றன. இது மலையக அரசியலில் மட்டும் காணப்படும் ஒரு சாபக்கேடாகும். பெரும்பான்மை இனத்தைப்பொறுத்தவரை பெண்கள் தலைமைத்துவம் என்ற விடயத்தை அவர்கள் கையாளும் முறை பற்றி தமிழ் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. இன்று கிராமப்புறங்களில் கூட பல அரசியல் கட்சிகளுக்கு உந்துசக்தியாக பெண்கள் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.&lt;br /&gt;அரசியலில் பெண்கள் அங்கத்துவத்தை அதிகரிக்க தொகுதி வாரியாக பெண்களின் இருப்பை உறுதி செய்யும் முறையிலான அம்சங்களை அறிமுகப்படுத்தினோலே போதுமானது.உதாரணமாக இந்தியாவில் மாநிலங்களில் இடம்பெறும் உள்ளூராட்சி தேர்தல்களைக்கூறலாம். இங்குள்ள தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் பெண்களுக்காக பதிவு செய்யப்பட்டிருக்கும்.கட்டாயமாக பெண்களே இத்தொகுதியில் போட்டியிட வேண்டும். இந்த முறை காரணமாக கிராமப்புறங்களிலிருந்து இலட்சக்கணக்கான பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்குத்தெரிவு செய்யப்படுவதோடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆரம்பகட்ட வாய்ப்பினை உறுதி செய்கின்றனர். இதனூடாக தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.&lt;br /&gt;இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள்,அதே வேளை வாக்களிக்கும் உரிமையைப்பெற்றிருப்பவர்களிலும் 56 வீதமானோர் பெண்களே. இதை வைத்துப்பார்க்கும் போது எமது நாடு அரசியலில் எந்தளவிற்கு பெண்களை உள்ளீர்த்திருக்க வேண்டும் என்பதை சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லை.&lt;br /&gt;மேலும் தற்போதுள்ள அரசியல் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பல படித்த பெண்கள் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிப்போகின்றனர் எனலாம். வன்முறை அரசியல் தலைதூக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் பெண்கள் எங்ஙனம் அரசியலில் ஈடுபட அக்கறை காட்டுவர்?&lt;br /&gt;எனினும் பாராளுமன்ற அரசியல் வரை உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.முதலில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வழிவகைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்பதே பலரினதும் அவா.இது குறித்த அழுத்தங்களை மேற்கொள்ள பெண்கள் தான் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் முன்வருவீர்களா சகோதரிகளே? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-7225071141032309810?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/7225071141032309810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=7225071141032309810' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/7225071141032309810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/7225071141032309810'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2010/03/blog-post.html' title='இலங்கை அரசியலும் பெண்களின் பங்களிப்பும்.'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/S5X3F7tNDCI/AAAAAAAAALM/S7llzeLNDQI/s72-c/090526150406-830-522.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-4452635040824821659</id><published>2009-09-25T04:13:00.000-07:00</published><updated>2009-09-25T04:24:21.304-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>சர்வதேச முதியோர் தினம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrynVTEY6dI/AAAAAAAAAK4/0TSQLY-5KY0/s1600-h/Untitled-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5385363238766045650" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 233px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrynVTEY6dI/AAAAAAAAAK4/0TSQLY-5KY0/s320/Untitled-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;அரசாங்க உத்தியோகத்தர்கள் போல் பெருந்தோட்டப்பகுதி மூத்த பிரஜைகளுக்கு மாதாந்த ஓய்வூதியம் இல்லை. ஓய்வூதிய பணத்தை கூட முறையõக பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் இங்கு இல்லை,அப்படி இருந்தாலும் தரகர்களுக்கு தாரை வார்த்தது போக மிகுதியை பிள்ளைகள் பிடிங்கிக்கொள்வார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஓக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் கௌரமிக்க பார்வையில் நோக்கப்படவேண்டியவர்கள் என்ற அர்த்த புஷ்டியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை மூலம் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி கொண்ட வரப்பட்ட தீர்மானத்திற்கமைய (பிரிவு 45/106)ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினம் அனுஷ்டிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இதன் படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கினும் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் நோக்கம். ஐக்கிய அமெரிக்காமற்றும் கனடா ஆகிய நாடுகளில் இத்தினம் தேசிய விடுமுறை நாளாகவும் ஜப்பானில் மூத்ததோருக்கு கௌரவம் செலுத்தும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. தற்போது உலகெங்கும் வாழ்ந்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை (2009 ஆம் ஆண்டில் நடுக்கூற்றில்) 516 மில்லியன்களாகும்,இதுவே 2050 ஆம் ஆண்டு 1.53 பில்லியன்களாக அதிகரிக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.இது 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கையாகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;இலங்கையும் முதியோர்களும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கையைப்பொறுத்தவரை உலக அளவில் அதிக முதியோர்களைக்கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே 2031 ஆம் ஆண்டில் 50 இலட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது அந்த கணக்கெடுப்பு. 2011 ஆம் ஆண்டளவில் இலங்கையி“ல 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 இலட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும். இலங்கையைப்பொறுத்தவரையில் முதியோர்கள் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் மிகையாகாது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 6070 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.7080 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 8090 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பெருந்தோட்டப்பகுதி முதியோர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன,எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந்தோட்டப்பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு வியாக்கியானங்கள் தேவையில்லை. அரசாங்க உத்தியோகத்தர்கள் போல் இவர்களுக்கு மாதாந்த ஓய்வூதியம் இல்லை.தமது ஓய்வூதிய பணத்தை கூட முறையõக பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் இங்கு இல்லை,அப்படி இருந்தாலும் தரகர்களுக்கு தாரை வார்த்தது போக மிகுதியை பிள்ளைகள் பிடிங்கிக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு இவர்கள் யாசகம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதே உண்மை.எனவே பெருந்தோட்டப்பகுதி முதியோர்கள் தொடர்பில் பலரும் அக்கறை கொள்ளல் அவசியம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-4452635040824821659?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/4452635040824821659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=4452635040824821659' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4452635040824821659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4452635040824821659'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/09/blog-post_25.html' title='சர்வதேச முதியோர் தினம்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrynVTEY6dI/AAAAAAAAAK4/0TSQLY-5KY0/s72-c/Untitled-2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-6456501041497808655</id><published>2009-09-16T21:25:00.000-07:00</published><updated>2009-09-16T21:41:05.651-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>சி.வியை மறந்த மலையகம்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG9osSiNCI/AAAAAAAAAKw/lLip8aQk37U/s1600-h/c2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382291536465769506" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG9osSiNCI/AAAAAAAAAKw/lLip8aQk37U/s320/c2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG7QdFdUOI/AAAAAAAAAKg/3pXpH-KQ6z8/s1600-h/c3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382288921044275426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 247px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG7QdFdUOI/AAAAAAAAAKg/3pXpH-KQ6z8/s320/c3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறை&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மலையகத்தின் விடிவுக்காய் குரல் கொடுத்தவர்கள் பலர் இன்று மறக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. எனினும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களின் இன்னல்கள் சோகங்களை இலங்கையைத்தாண்டி வெளிஉலகுக்கு தனது அற்புதமான படைப்புக்கள் மூலம் கொண்டு வந்தவர் மூத்த இலக்கியவாதி மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆவார். செப்டெம்பர் 14 ஆம் திகதி அவரின் 95 ஆவது பிறந்த நாள் நினைவு தினமாகும். படைப்பிலக்கியம்,அரசியல், தொழிற்சங்கம் என பன்முக ஆளுமை நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் வாழ்ந்து மறைந்த சுவடே தெரியாமல் அமைதியாக இருக்கிறது அவர் பிறந்து வாழ்ந்த வட்டகொடை மடக்கும்பரை &lt;a href="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG8_WDiRlI/AAAAAAAAAKo/YLORirgoa3M/s1600-h/c1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382290826122643026" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG8_WDiRlI/AAAAAAAAAKo/YLORirgoa3M/s320/c1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தோட்டம். மலையகமும் அதே நிலையில் தான் இருக்கின்றது என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை இறுதியில் அவர் வாழ்ந்து மறைந்த வீட்டிலிருந்தே அவரின் குடும்பத்தினரை வெளியேற்றியது தோட்ட நிர்வாகம்.இன்று அவர் வாழ்ந்து மறைந்த வீட்டின் நிலைமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.&lt;br /&gt;எந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தாரோ அவர்கள் மத்தியில் அவர் பேசப்படாது இருப்பதை ஜீரணிக்கமுடியவில்லை. அவர் மண்ணில் பிறந்தவன் என்ற அடையாளப்படுத்தல்களுக்கும் அப்பாற்பட்டு ஒரு உயர்ந்த இலட்சிய நோக்கத்தில் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த அந்த உன்னத மனிதரின் இல்லம் நோக்கிச்சென்றேன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பங்களாவாக காட்சியளித்த அந்த குடியிருப்பு இன்று பல தனித்தனி குடும்பங்களின் வாழ்விடமாக விளங்கியது. இங்கு குடியிருந்த மனிதரைப்பற்றி உங்களுக்குத்தெரியுமா என்றால் உதட்டை பிதுக்குகின்றனர். வீட்டினுள்ளே நுழைந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. சி.வி வாழ்ந்த வீடா இது ? அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது. பெருந்தோட்டப்பகுதிகளில் விறகு மற்றும் பழைய பொருட்கள் வைக்கும் இடமான அட்டாலில் விறகுகள் நிறைந்து கிடக்கின்றன.&lt;br /&gt;அதைத்தாண்டி அவரின் உறங்கும் அறைக்குச்சென்று பார்த்தால் சுவரில் வெடிப்புகள் விழுந்து இருட்டறையாக காட்சியளிக்கின்றது. மலையக சமூகத்திற்கு வெளிச்சம் கிடைக்க போராடிய பேனா போராளியின் சிந்தனைகள் இந்த அறையில் தான் தோற்றம் பெற்றதோ? சரி அவர் பாவித்த பொருட்கள் தளபாடங்கள் எல்லாம் எங்கே என்று விசாரித்தால் அவரின் குடும்பத்தை இவ்வீட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையின் போது அவை தூக்கி எறியப்பட்டன என்றும் அச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அதை தமது வீட்டிற்கு எடுத்துச்சென்றனர் என்றும் கூறினர். ஒரு சிலரோ அவரது ஆவணங்களை உறவினர்கள் தலைநகருக்கு எடுத்துச்சென்றனர் என்று கூறினர். மற்றுமொருவர் இன்னுமொரு தகவலை சொன்னார். சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் அருகில் ஒரு வீட்டில் இருப்பதாகக்கூறினார். ஓடோடிச்சென்றேன் அவ்வீட்டிற்கு , ஒரு அறையில் சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் காணக்கிடைத்தன.மேசையை வாஞ்சையுடன் வருடிப்பார்க்கும் போது புல்லரித்தது. தனது படைப்புப்பொக்கிஷங்களை சிருஷ்டிப்படுத்த உதவிய மேசை அல்லவா இது ? அருகில் உடைந்து விழும் நிலையில் அவரது அலுமாரி. பெரும் துயரத்துடன் அங்கிருந்து வெளியேறினேன். அடுத்ததாக நான் சென்ற இடம் மக்கள் கவிஞன் மண்ணுள் உறைகின்ற இடமாகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;புழுதிப் படுக்கையில் புதைந்த &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என் மக்களைப்போற்றும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இரங்கற் புகழ் மொழி இல்லை&lt;br /&gt;ஊணையும் உடலையும் ஊட்டி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இம் மண்ணை உயிர்த்த வர்க்கு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இங்கே உளங்கசிந்த அன்பும்&lt;br /&gt;பூணுவாரில்லைஅவர்புதைமேட்டிலோர் கானகப்பூவைப்பறித்துப்போடுவாரில்லை&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;என்ற வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தன. தேயிலைச்செடிகள் மத்தியில் தனது வாழ்க்கையை தொலைத்த எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறை.&lt;br /&gt;தன்னை மறைக்கத்தானோ அவ்விறைவனும்தளிர் பசும் புல்லால் தரை மறைத்தனனோ என்ற அவரது வரிகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இங்கு வந்து பார்த்தால் புரிகிறது.&lt;br /&gt;சி.வி.வேலுப்பிள்ளை காலமாகி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியோடு 25 வருடங்கள் நிறைவுறுகின்றன. அவரது இல்லத்தை நினைவாலயமாக்கி அவர் பாவித்த பொருட்களை சேகரித்து அங்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று ஆங்காங்கே சிலர் அவ்வப்போது புலம்புவதோடு சரி அவர் வாழ்ந்த வீட்டையும் அவரது கல்லறையையும் எட்டிக்கூட பார்க்க எவரும் வருவதில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;வாடிய ரோசா மலரிதழ் போல வாடியே &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அன்னார்வாழ்க்கை கழிந்தது&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்ற அவரது கவி வரிகளை அவருக்கே சமர்ப்பணம் செய்து விட்டு அவரது கல்லறைக்கு அஞ்சலி செய்து அவ்விடம் விட்டு நகர்ந்தேன். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-6456501041497808655?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/6456501041497808655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=6456501041497808655' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/6456501041497808655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/6456501041497808655'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/09/blog-post_16.html' title='சி.வியை மறந்த மலையகம்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG9osSiNCI/AAAAAAAAAKw/lLip8aQk37U/s72-c/c2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-3082694084149381324</id><published>2009-09-16T21:13:00.000-07:00</published><updated>2009-09-16T21:25:19.589-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>தேசிய வருமானம் பாதிக்கப்படும் என்ற கரிசனை பெருந்தோட்டப்பகுதி வறுமை குறித்து இருக்கின்றதா?</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG4yp2O5tI/AAAAAAAAAKQ/GOSnLxF0NX4/s1600-h/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382286210050746066" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG4yp2O5tI/AAAAAAAAAKQ/GOSnLxF0NX4/s320/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;* இலங்கையில் தேசிய வறுமை வீதம் 14 ஆக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அது 34 ஆக உள்ளது. வாழ்க்கைச்செலவு என்பது இலங்கையில் எல்லா பாகங்களில் உள்ள மக்களுக்கும் ஒன்று தான். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;* ஒத்துழையாமை போராட்டத்தினால் தேசிய வருமானத்தில் மாதம் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்பட வாய்ப்புண்டு என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உயர்நில பிரதேசங்களில் வாரத்திற்கு 15 இலட்சம் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிலாளர் போராட்டத்தில் ஒரு நாளைக்கு 642857 அமெரிக்க டொலர்வருமானம் இழக்கப்படுகிறது எனு“கின்றன புள்ளி விபரங்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;யாரோ உழைக்கிறார்கள் யாரோ ஊதியத்தை தீர்மானிக்கிறார்கள் இடையில் நமக்கென்ன என்ற நழுவல் போக்கு ஒரு சிலருக்கு, இப்படி போய் கொண்டிருக்கிறது பெருந்தோட்ட தொழிற்றுறை. மற்றுமொரு சாராரோ தொழிலாளர் போராட்டத்தால் தேசிய வருமானம் பாதிக்கப்படுகிறது என புள்ளி விபரங்களை முன்வைக்கின்றனர். சரி எவராவது பெருந்தோட்டப்பகுதி வறுமை நிலை பற்றிய புள்ளி விபரங்கள் குறித்து கரிசனை காட்டுகிறார்களா ? மார்ச் மாதம் 31 ஆம் திகதியோடு முடிவடைந்த கூட்டு ஒப்பந்தம் தற்போது 500 ரூபா என்ற கோரிக்கையோடு இழுபறி நிலையில் உள்ளது. தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தால் தேயிலைத்தொழிற்றுறை பாதிப்பு குறித்தும் இதனால் ஒரு மாதத்திற்கு ஏற்படும் நட்டம் மற்றும் அந்நிய செலாவணியில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் தேயிலை தொழிற்றுறையை மட்டும் நம்பியிருக்கும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களுக்கு ஏன் சம்பள அதிகரிப்பு வழங்கப்ப&lt;a href="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG5Vc9yxsI/AAAAAAAAAKY/hjWwppUZ3Lw/s1600-h/t5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382286807888217794" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG5Vc9yxsI/AAAAAAAAAKY/hjWwppUZ3Lw/s320/t5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ட வேண்டும் என்ற நியாயப்படுத்தல்கள் குறைவாகவே உள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை திருத்தி எழுதப்படும் தீர்ப்பாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு மாற்றம் இருக்க வேண்டிய அவசியத்தையே அதில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனவே ஒழிய தொழிலாளர்களின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு கோரிக்கையை முன்வைக்க தயங்குகின்றன. தற்போது தொழிலாளர்கள் ஆரம்பித்திருக்கும் மெதுவாக பணி செய்தல் அல்லது ஒத்துழையாமை போராட்டத்தினால் தேசிய வருமானத்தில் மாதம் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்பட வாய்ப்புண்டு என பொருளாதார நிபுணர்களின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதே வேளை இலங்கை தேயிலைச்சபை தலைவர் லலித் ஹெட்டியாராய்ச்சி கூறுகையில் உயர்நில பிரதேசங்களில் வாரத்திற்கு 15 இலட்சம் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி யசெய்யப்படுகிறது. ஒரு கிலோ கிராம் தேயிலையின் விலை 3 அமெரிக்க டொலர்கள் என்று வைத்தாலும் ஒரு நாளைக்கு 642857 அமெரிக்க டொலர்வருமானத்தை இழக்கிறோம் என்று தெரிவிக்கிறார் அவர்.&lt;br /&gt;இலங்கையில் தேசிய வறுமை வீதம் 14 ஆக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அது 32 ஆக உள்ளது. வாழ்க்கைச்செலவு என்பது இலங்கையில் எல்லா பாகங்களில் உள்ள மக்களுக்கும் ஒன்று தான். அரசாங்க உத்தியோகத்தரோ , தனியார் தொழிற்றுறை ஊழியரோ , தோட்டத்தொழிலாளியோ அனைவருக்கும் அரிசியின் விலை ஒன்று தான். ஆனால் வறுமை வீதம் அதிகரித்து காணப்படும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் என்ன? இவர்களுக்கு மானிய முறையில் பொருட்கள் கிடைக்கின்றனவா? தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 500 ரூபா என்ற சம்பள கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது இவர்களின் வறுமையை தீர்த்து விடுமா என்று கேட்டால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;முதலாளிமார் சம்மேளனமோ தண்ணீர் வசதி,பாதை ,குடியிருப்பு,விறகு , மரணாதார செலவு ,போக்குவரத்து ஆகிய சலுகைகளை முன்வைத்து மின்சாரத்திற்கு மட்டும் தானே தொழிலாளர்கள் பணம் செலுத்துகிறார்கள் மற்றதெல்லாம் இலவசமாகத்தானே கிடைக்கின்றன என்ற அர்த்தப்பட கருத்துகளை முன்வைக்கின்றனர். இவையெல்லாம் இலவசமாகக்கிடைத்தாலும் உணவை அவர்களுக்கு இலவசமாக எவரும் கொடுக்கிறார்களா என்ன?&lt;br /&gt;ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் மனிதாபிமான தார்மீக கடப்பாடுகள் பல உள்ளன. அதில் பிரதானமானது வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுத்தல். இதில் பெருந்தோட்டப்பகுதி மக்கள் எந்நதளவிற்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றனர் என்பது கேள்விக்குறியே ! எனினும் தற்போதைய சூழலில் வறுமையில் தள்ளப்பட்டிருக்கும் விடயத்தை முன்னிலைப்படுத்திச்சரி இந்த சம்பள விவகாரம் தொடர்பில் அவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-3082694084149381324?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/3082694084149381324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=3082694084149381324' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3082694084149381324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3082694084149381324'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/09/blog-post.html' title='தேசிய வருமானம் பாதிக்கப்படும் என்ற கரிசனை பெருந்தோட்டப்பகுதி வறுமை குறித்து இருக்கின்றதா?'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SrG4yp2O5tI/AAAAAAAAAKQ/GOSnLxF0NX4/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-3472274439123561557</id><published>2009-07-05T20:59:00.000-07:00</published><updated>2009-07-05T21:43:56.180-07:00</updated><title type='text'>ஆஷஸ் கிண்ணப்போட்டிகளும் ஆரம்ப கால சாதனைகளும்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlF71TBykUI/AAAAAAAAAJw/739GZvu0PIs/s1600-h/the-ashes-urn.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355197587491295554" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 206px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlF71TBykUI/AAAAAAAAAJw/739GZvu0PIs/s320/the-ashes-urn.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlF_cCWdOhI/AAAAAAAAAJ4/7_uIbvYKhDw/s1600-h/DonaldBradman.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355201551564356114" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 245px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlF_cCWdOhI/AAAAAAAAAJ4/7_uIbvYKhDw/s320/DonaldBradman.jpg" border="0" /&gt;&lt;/a&gt; கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க ஆஷஸ் (சாம்பர்) கிண்ணப்போட்டிகள் ஜுன் மாதம் 8 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றன. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இடம்பெறும் கிரிக்கெட் போர் என இது வர்ணிக்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்குமிடையே இடம்பெறும் ஒரு கௌரவ போட்டித்தொடராகவும் இது விளங்குகிறது. கிரிக்கெட்டின் தாயக நாடாக போற்றப்படுவது இங்கிலாந்தாகும். ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்&lt;a href="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlF_pfM5AqI/AAAAAAAAAKA/mjDi5eDY0eY/s1600-h/jack-hobbs_796351c.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355201782647161506" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlF_pfM5AqI/AAAAAAAAAKA/mjDi5eDY0eY/s320/jack-hobbs_796351c.jpg" border="0" /&gt;&lt;/a&gt;திரேலிய அணிகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வந்தன. கிரிக்கெட் எனும் விளையாட்டை ஆரம்பித்து வைத்தவ&lt;a href="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlGAGhMVZoI/AAAAAAAAAKI/HHAXEhP9594/s1600-h/gragary.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355202281397905026" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 160px; CURSOR: hand; HEIGHT: 158px" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlGAGhMVZoI/AAAAAAAAAKI/HHAXEhP9594/s320/gragary.bmp" border="0" /&gt;&lt;/a&gt;ர்கள் என்ற பெருமிதத்திலும் இறுமாப்பிலும் இருந்த இங்கிலாந்தை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடித்த அவுஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் கிண்ண வரலாற்றை ஆரம்பித்தனர். வரலாறு1882 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்தது அவுஸ்திரேலிய அணி. இதை தாங்க முடியாத இங்கிலாந்து ஊடகங்கள் மிகவும் கடுமையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை விமர்சித்தன. ஒரு படி மேலே சென்ற Sporting Times என்ற சஞ்சிகையின் இளம் பத்திரிகையாளர் ரெஜினோல்ட் ஷெர்லி புரூக்ஸ் &lt;span style="color:#ff0000;"&gt;(Reginald Shirley brooks)&lt;/span&gt; மரண அறிவித்தல் என்ற தலைப்பில் இப்படி செய்தியை எழுதினார்; &lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Obituary“ in affectionate remembrance of English cricket which died at the oval, 29th August,1882.deeply lamented by a large circle of sorrowing friends and acquaintances, Rip.NB the body will be cremated and the Ashes taken to Australia.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் கிரிக்கெட்டானது, ஓவல் மைதானத்தில் 1882 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் மரணித்து விட்டது.இதன் உடம்பு தகனஞ்செய்யப்பட்டதன் பின்னர் சாம்பர் அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துச்செல்லப்படும் .&lt;br /&gt;இப்படி அமைந்தது அந்தச்செய்தி.அப்போட்டியில் உபயோகப்படுத்தப்பட்ட பேல்ஸ்கள் எரிக்கப்பட்டு அந்த சாம்பர் இடப்பட்டு உருவாக்கப்பட்டதே ஆஷஸ் கிண்ணம் என்றும் அவுஸ்திரேலிய மூதாதையர்களான அபோர்ஜினல் இன பழங்குடியினரின் பாரம்பரியமிக்க கிண்ணமே இது என்றும் பல்வேறு கதைகள் உலா வந்தாலும் நாளடைவில் கிண்ணம் பற்றிய கதை மறைந்து இரு நாடுகளுக்குமிடையே இடம்பெறும் போட்டிகள் தான் கதைக்கப்பட்டன. இது வரை இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் பற்றிய தகவல்களை மட்டும் நாம் சுருக்கமாகப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;போட்டி விபரங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதல் டெஸ்ட் ஜுலை 8 புதன் சோபியா கார்டன் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;2 ஆவது டெஸ்ட் ஜுலை 16 வியாழன்லோர்ட்ஸ்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;3ஆவது டெஸ்ட்ஜுலை 30 வியாழன்எஜ்பஸ்டன் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;4ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 7 வெள்ளிஹெடிங்லே &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;5ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 20 வியாழன்ஓவல்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இது வரை இரண்டு அணிகளும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதுவரை 316 போட்டிகள் இரண்டு அணிகளுக்கிடையிலும் இடம்பெற்றுள்ளன.இதில் 131 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது அவுஸ்திரேலிய அணி.இங்கிலாந்து 97 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 88 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;729/6 (டிக்ளேர்) 1930 அவுஸ்திரேலியா&lt;/div&gt;&lt;div&gt;903/7 (டிக்ளேர்) 1938 இங்கிலாந்து &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சேர் டொன் பிரட்மன்(அவுஸ்) (1928-1948) 5028 ஓட்டங்கள்&lt;/div&gt;&lt;div&gt;ஜெக் ஹொப்ஸ்(இங்கி) (1908-1930) 3636 ஓட்டங்கள் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;அதிக சதங்கள் பெற்ற வீரர்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சேர் டொன் பிரட்மன் (அவுஸ்) 37 போட்டிகளில் 19 சதங்கள்&lt;/div&gt;&lt;div&gt;ஜெக் ஹொப்ஸ்(இங்கி) 41 போட்டிகளில் 12 சதங்கள் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஷேன் வோர்ன் (அவுஸ்) 36 போட்டிகளில் 195 விக்கெட்டுகள்&lt;/div&gt;&lt;div&gt;இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகளில் 148 விக்கெட்டுகள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;சிறந்த பந்து வீச்சு பெறுதி (ஒரு இன்னிங்ஸில்)&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜிம் லேக்கர் (அவுஸ்) 10/53 &lt;/div&gt;&lt;div&gt;மெய்லி (இங்கி) 9/121 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அதிக பிடியெடுப்புகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கிரேக் செப்பல் (அவுஸ்) 35 போட்டிகள் 61 பிடிகள்&lt;/div&gt;&lt;div&gt;இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகள் 57 பிடிகள் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அதிக ஆஷஸ் போட்டிகளில் விளையாடியோர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எஸ்.ஈ.கிரகரி(அவுஸ்) 1890-1912 52 போட்டிகள், 2193 ஓட்டங்கள், 24 பிடிகள்&lt;/div&gt;&lt;div&gt;கொலின் கௌட்ரி (இங்கி) 1954197543 போட்டிகள்,2433 ஓட்டங்கள்,40 பிடிகள் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-3472274439123561557?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/3472274439123561557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=3472274439123561557' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3472274439123561557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3472274439123561557'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/07/blog-post_05.html' title='ஆஷஸ் கிண்ணப்போட்டிகளும் ஆரம்ப கால சாதனைகளும்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SlF71TBykUI/AAAAAAAAAJw/739GZvu0PIs/s72-c/the-ashes-urn.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-3690735018729545538</id><published>2009-07-02T02:13:00.000-07:00</published><updated>2009-07-02T02:28:22.072-07:00</updated><title type='text'>இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவர்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/Skx9Pg2L78I/AAAAAAAAAJg/OAqMz1DB72Q/s1600-h/jamestaylor.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353791762505396162" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 231px; CURSOR: hand; HEIGHT: 250px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/Skx9Pg2L78I/AAAAAAAAAJg/OAqMz1DB72Q/s320/jamestaylor.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜேம்ஸ் டெய்லர் என்றதும் எமக்கு ஞாபகம் வருவது இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தியவர் என்பது தான். இவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த தலைமுறையினருக்கு மிக அவசியமானதொன்று. பிரித்தானியரான ஜேம்ஸ் டெய்லர் 1835 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். 1852 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்த போது கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர தோட்டத்தில் நிரந்தரமாகத்தங்கி விட்டார். தேயிலை தொழிற்றுறை மற்றும் தேயிலைச்செய்கை பற்றியும் அறிந்து கொள்வதற்காக இவர் 1866 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்து அங்கு பல விடயங்களைக்கற்றார். பின்பு 1867 ஆம் ஆண்டு நாடு திரும்பிய இவர் தான் கற்ற விடயங்களையே மூலதனமாக்கொண்டு தான் வசித்த லூல்கந்துர தோட்டத்தில் 19 ஏக்கரில் தேயிலைப்பயிர்ச்செய்கையை ஆரம்பித்தார். அத்தோடு சிங்கோனாவையும் பயிரிட்டனர். இலங்கையில் முதன் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட இடமாக லூல்கந்துர தோட்டமே விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1872 ஆம் ஆண்டு இங்கு அவர் ஒரு தேயிலை தொழிற்சாலையையும் ஆரம்பித்தார். தேயிலை தொழிற்றுறையை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான தோமஸ் லிப்டனிடம் இணைந்து தேயிலையை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார் டெய்லர். ஐக்கிய இராச்சியத்தின் கோடீஸ்வரராக விளங்கிய தோமஸ் லிப்டன் 1890 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை இடை நிறுத்தி இலங்கை வந்தார்.அதற்குக்காரணம் அப்போது இலங்கையின் தேயிலை உற்பத்தி பற்றி எழுந்த கதைகள் தான். டெய்லரை சந்தித்த தோமஸ் லிப்டன் அவரிடம் இலங்கைக்தேயிலையை&lt;a href="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/Skx9eHBIq8I/AAAAAAAAAJo/OLBzkEtlG3M/s1600-h/untitled.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353792013270035394" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 113px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/Skx9eHBIq8I/AAAAAAAAAJo/OLBzkEtlG3M/s320/untitled.bmp" border="0" /&gt;&lt;/a&gt; வாங்கி பிரித்தானியாவில் விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தார்.இதன் பிறகு டெய்லர் இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இத்துறையை முன்னேற்றினார். 23 பவுண்ட்களில் ஆரம்பித்த இவரது தேயிலை ஏற்றுமதி 81 தொன்களாக அதிகரித்து 1890 ஆம் ஆண்டின் இறுதியில் 22,900 தொன்களாக உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் டெய்லர் ஹேவாஹெட்ட பிரதேசத்தின் காட்டுப்பகுதியை சுத்தப்படுத்தி 19 ஏக்கரில் தேயிலை விதைகள் மூலம் தேயிலை பயிரிட்டார். தனது அயராத முயற்சி காரணமாக 1875 ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெற்ற தேயிலை ஏல விற்பனையில் இலங்கைத்தேயிலையை இடம்பெறச்செய்தார்.இலங்கையின் தேயிலைத்தொழிற்றுறை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. பல தேயிலை கம்பனிகள் இதன் இலாபத்தை அனுபவிக்க தயாராகின.சிறிய தேயிலை தோட்டங்கள் பலதை இந்த கம்பனிகள் விலை கொடுத்து வாங்கின. டெய்லர் இருந்த லூல்கந்துர தோட்டமும் இதற்கு இரையானது. இலங்கையில்முதன் முதலாக தேயிலையை பயிரிட்டவர் என்ற பெருமைக்குரிய டெய்லர் மிகுந்த மனவேதவையுடன் லூல்கந்துர தோட்டத்தை விட்டு வெளியேறினார்.தனது வாழ்நாளில் அரைவாசியை இலங்கையிலேயே கழித்தார்.அதாவது 57 வருடங்கள். 1892 ஆம் ஆண்டு உயிர் நீக்கும் வரை அவர் இலங்கை மண்ணை விட்டு நீங்கவில்லை. லூல்கந்துர தோட்டத்தை விட்டு நீங்கிய ஜேம்ஸ் டெய்லர் வயிற்று உபாதை நோயால் பாதிக்கப்பட்டு அவ்வாண்டே காலமானார். அவரது உடல் கண்டி மகியாவ மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் இவை;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;"In pious memory of James Taylor of Loolecondera Estate Ceylon, the pioneer of the cinchona and tea enterprise in this island, who died May 2, 1892, aged 57 years"..&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜேம்ஸ் டெய்லர் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது 1893 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுமார் பத்து இலட்சம் தேயிலை பைக்கற்றுகள் இலண்டனுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவின் சிக்காக்கோவில் இடம்பெற்ற உலக சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 1867 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் 80 வீதமானவை பிரித்தானிய கம்பனிகள் வசம் இருந்தன. 1971 ஆம் ஆண்டே இலங்கை அரசாங்கம் நிலவுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தி பல தேயிலை தோட்டங்களை தன்வசமாக்கியது. 1992 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் இறந்து நூறாண்டுகள் நினைவு கூறப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக இருந்த ஜோன் பீல்ட் (ஒணிடண ஊடிஞுடூஞீ) கூறிய வார்த்தைகள் உண்மையில் அர்த்தம் வாய்ந்ததாகத்தான் அமைந்தது.இலங்கையின் மத்திய மலை நாட்டை செதுக்கியவர்களுள் பல தனிப்பட்ட நபர்களும் தொழிலாளர்களும் அடங்கலாம், ஆனால் மத்திய மலை நாட்டை அழகு படுத்தியதில் ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரின் பங்கு அளவு கடந்தது. தேயிலையைப் பயிரிட்டதன் மூலம் அவர் இதை செய்தார், இவ்வாறு அவர் கூறினார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;"It can be said of very few individuals that their labors have helped to shape the landscape of a country. But the beauty of the hill country as it now appears owes much to the inspiration of James Taylor, the man who introduced tea cultivation to Sri Lanka".&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜேம்ஸ் டெய்லர் வாழ்ந்த இடத்தில் அவ்வாண்டு நூதன சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்று தேயிலைத்தொழிற்றுறையில் உலகில் தனித்துவமிக்க நாடாக விளங்குகிறது இலங்கை. மேலும் தேசிய வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது. இத்தனைக்கும் காரணமான ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரை நாமும் ஞாபகப்படுத்திக்கொள்வது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-3690735018729545538?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/3690735018729545538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=3690735018729545538' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3690735018729545538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/3690735018729545538'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/07/blog-post_02.html' title='இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவர்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/Skx9Pg2L78I/AAAAAAAAAJg/OAqMz1DB72Q/s72-c/jamestaylor.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-976033217257725641</id><published>2009-07-01T02:35:00.000-07:00</published><updated>2009-07-01T02:47:06.605-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>உங்களுக்குத்தெரியாத கிரிக்கெட்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SksvcaNBUVI/AAAAAAAAAJA/I7o5Ft5xll4/s1600-h/n.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353424747176743250" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 160px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SksvcaNBUVI/AAAAAAAAAJA/I7o5Ft5xll4/s320/n.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;டெஸ்ட் போட்டியொன்றில் சதம் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போட்டியின் தன்மைக்கேற்ப வேகமாகவும் மிக தாமதமாகவும் டெஸ்ட் சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் டெஸ்ட் வரலாற்றில் அதிக நேரம் எடுத்துப்பெறப்பட்ட சதம் எது தெரியுமா? 1978 ஆம் ஆண்டு இது பெறப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக இவ்வாண்டு லாகூரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதாசர் நஸார் 557 நிமிடங்கள் களத்திலிருந்து சதம் பெற்றார். அதே போல் பவுண்டரிகளே பெறாது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்ட எண்ணிக்கைப்பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 1979 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பொய்கொட் 77 ஓட்டங்களைப்பெற்றார். இவ்வோட்ட எண்ணிக்கையில் ஒரு நான்கு ஓட்டங்கள் பதிவாகியிருக்கின்ற போதிலும் அது ஓடிப்பெறப்பட்டதாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அபூர்வ நிகழ்வுகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கிரிக்கெட்டில் அவ்வப்போது ஒரு சில அபூர்வ நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. இது ஒரு சில சந்தர்ப்பங்களில் பந்து வீச்சாளருக்கு பாதகமாகவும் துடுப்பாட்&lt;a href="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkswbELpsuI/AAAAAAAAAJI/YyIO1QVo6Yg/s1600-h/untitled.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353425823597179618" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 170px; CURSOR: hand; HEIGHT: 246px" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkswbELpsuI/AAAAAAAAAJI/YyIO1QVo6Yg/s320/untitled.bmp" border="0" /&gt;&lt;/a&gt;ட வீரரருக்கு சாதகமாகவும் அமைந்து விடுவதுண்டு. பந்து ஸ்டம்புகளுக்கிடையில் சென்றும் பேல்ஸ்கள் கீழே விழாத சந்தர்ப்பம் ஒன்று கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி. பைசலாபாத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது. 98 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாபிரிக்கா.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கேரி கேர்ஸ்டனுடன் 8 ஆவது விக்கெட்டுக்காக இணைந்தார் சுழற்பந்து வீச்சாளர் பெட் சிம்கொக்ஸ். மிக வேகமாக துடுப்பெடுத்தாடினார். 56 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமட் வீசிய பந்து ஓப் திசை மற்றும் மத்திய ஸ்டம்பின் இடையே வேளியேறியது,என்ன அதிசயம் பேல்ஸ்கள் அசையவே இல்லை. நடுவர் ஸ்டீவ் டன்னுக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அதன் பிறகு தனது வழமையான துடுப்பாட்டத்தை தொடர்ந்த சிம்கொக்ஸ் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 81 ஓட்டங்களைப்பெற்றார். இப்போட்டியில் தென்னாபிரிக்கா 53 ஓட்டங்களள்ல வெற்றி பெற இவரின் இந்த இன்னிங்ஸ் பெரிதும் உதவியது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவு செய்யப்பட்டார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;முறியடிக்கப்படாத சாதனைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் புரூஸ் டெய்லரின் ஒரு சாதனை இது வரை எவராலம் முறியடிக்கப்படவில்லை. 1965 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியே அவரது முதல் டெஸ்ட் போட்டி.இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய டெய்லர் தனது முதல் போட்டியிலேயே சதம் பெற்றார் (105).பின்னர் பந்து வீச்சில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழத்தினார். டெஸ்ட் போட்டி ஒன்றில் சதம் பெற்ற வீரர் ஒருவர் பந்த வீச்சில் 5 விக்கெட்டுகளைப்பெற்ற சந்தர்ப்பங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 26 தடவைகள் இடம்பிடித்துள்ளன. ஆனால் புரூஸ் டெய்லருக்குப்பிறகு எவரும் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் இதை நிகழ்த்தவில்லை. ஆக டெய்லரின் சாதனை 44 வருடங்களாக முறியடிக்கப்படாம்ல உள்ளது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-976033217257725641?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/976033217257725641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=976033217257725641' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/976033217257725641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/976033217257725641'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/07/blog-post.html' title='உங்களுக்குத்தெரியாத கிரிக்கெட்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SksvcaNBUVI/AAAAAAAAAJA/I7o5Ft5xll4/s72-c/n.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-5079288535981605381</id><published>2009-06-29T21:17:00.000-07:00</published><updated>2009-06-29T22:20:14.548-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>ஐரோப்பியரால்  உருவாக்கப்பட்ட  அம்மன் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmbQDlal_I/AAAAAAAAAIw/-H_ruoIUD50/s1600-h/DSCF0134.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352980332248995826" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmbQDlal_I/AAAAAAAAAIw/-H_ruoIUD50/s320/DSCF0134.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;சுமார் 200 வருடங்கள் பழமையான ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கையில் காலனித்துவ ஆட்சி காலத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைந்த ஆலயங்கள் பல இன்று உரு தெரியாமல் போய்விட்டன. அவை குறித்த ஆராய்ச்சிகளும் கிடப்பில் போடப்பட்டு விட்டன. எனினும் ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் அவர்களாலேயே பெருந்தோட்டப்பகுதிகளில் உருவான ஒரு சில ஆலயங்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி உருவான ஒரு ஆலயம் தான் ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்.&lt;br /&gt;அவிசாவளையிலிருந்து கொழும்புக்குச்செல்லும் புதிய பாதையில் ஹங்வெல எனும் இடத்தில் அமைதியாக இருந்து அருள் பாலிக்கும் இந்த ஆலயத்தின் வரலாறு தொன்மை வாய்ந்ததாகும். &lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmYzdLzNCI/AAAAAAAAAIg/1w9_a-gFgJ4/s1600-h/DSCF0141.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352977641881416738" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmYzdLzNCI/AAAAAAAAAIg/1w9_a-gFgJ4/s320/DSCF0141.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயம் இறப்பர் மரங்கள் சூழவுள்ள இயற்கை அன்னை ஆட்சி செய்யும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் விசேடம் என்னவெனில் இங்கு சுமார் 300 வருடங்கள் பழமையான ஆலமரம் ஒன்று வீற்றிருக்கின்றது. இதுவே இவ்வாலயத்தின் சரித்திரம் கூறுவதாக அமைந்துள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருந்ததாகவும் மேற்படி விருட்சத்தின் அடியில் இருந்த சக்தி வாய்ந்த கல்லையே அம்மனாக நினைத்து இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் கேரளா மாவட்டத்தில் இருந்து இங்கு வந்த மக்களின் வழிபாட்டுத்தலமாக இவ்விடம் இருந்திருக்கலாம் என்றும் எனினும் அதற்கு முன்னதாக இவ்&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmaaOYso1I/AAAAAAAAAIo/L7ljJaSEanA/s1600-h/DSCF0139.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352979407435506514" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmaaOYso1I/AAAAAAAAAIo/L7ljJaSEanA/s320/DSCF0139.jpg" border="0" /&gt;&lt;/a&gt;விடத்தில் ஆலயம் இருந்திருக்கக்கூடிய ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அக்காலத்தில் இப்பகுதியில் சுமார் மூவாயிரம் குடும்பங்களுக்கு மேல் இருந்ததாகவும் கூடுதலாக பிராமணர்கள் பூஜை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக பிராமண ஜாதி என்று குறிப்பிடப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;ஹங்வெல என்ற பெயரில் இருந்து அங்காளப்பரமேஸ்வரி உருவானதா அல்லது அங்காளப்பரமேஸ்வரி எனும் பதத்திலிருந்த ஹங்வெல எனும் இடம் உருவானதா என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. ஆரம்&lt;a href="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmdMbq8uEI/AAAAAAAAAI4/kycAeXb322g/s1600-h/DSCF0135.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352982469018433602" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 239px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmdMbq8uEI/AAAAAAAAAI4/kycAeXb322g/s320/DSCF0135.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பத்தில் தேயிலை தோட்டங்கள் இருந்த இடத்தில் பின்னர் இறப்பர் தோட்டங்கள் உருவாகின. இங்கு வேலை செய்வதற்காக இந்தியாவின் திருச்சி மாவட்டத்தின் கரூர் எனும் இடத்தில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர் என்கிறார் இலங்கையின் பாரம்பரிய இந்து கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அற்புதமான பல உண்மைகளை வெளிப்படுத்தி வரும் என்.கே.எஸ்.திருச்செல்வம்.&lt;br /&gt;&lt;strong&gt;தோட்டத்துரைக்கு காட்சி கொடுத்த அம்மன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்கமைந்த இறப்பர் தோட்டத்தின் உரிமையாளராக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஹோடன் புரூக் என்பவராவார். ஒருமுறை இவர் இத்தோட்டத்தின் வழியே நடந்து வரும் போது ஒரு பெண்ணை இவர் அவதானித்திருக்கிறார். இப்பகுதிக்கு புதிய முகமாக இருக்கின்றதே என அவர் இப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆலமரத்தடிக்கு வந்த பெண் மாயமாய் மறைந்துள்ளார். இக்காட்சியை கண்டு அதிசயித்த ஹோடன் புரூக் இதை தோட்டக்கங்காணிமார் மற்றும் வேலையாட்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இங்கு குடியிருக்கும் அம்மன் தான் பெண்ணுருவில் வந்திருப்பார் என பயபக்தியோடு தோட்ட மக்கள் கூற உடனடியாக அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்ப அந்த வெள்ளைக்கார தோட்டத்துரை முடிவெடுத்தார்.&lt;br /&gt;அதன் படி தோட்டத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து இது குறித்து அவர் கலந்துரையாடி இந்தியாவில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு குழுவினரை அனுப்பி அவ்வாலய தோற்றம் குறித்து அறிந்து வரும்படியும் மேலும் அங்கிருந்து சிற்ப கலைஞர்களை அழைத்து வரும்படியும் கூறியுள்ளார். இதன்படி ஆலயம் அமைப்பதற்குரிய பொருட்கள் இந்தியாவிலிருந்து கொண்ட வரப்பட்டன.சிற்பாசாரியார்களும் அங்கிருந்து வந்தனர். மிகப்பழமையான ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் 1875 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் இடம்பெற்றது.&lt;br /&gt;இதற்குப்பிறகு சில வருடங்களில் ஹோடன் புரூக் இந்த தோட்டத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு இங்கிலாந்து சென்று விட்டார். தோட்டத்தொழிலாளர்களும் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர்.சுமார் நூறு வருடங்கள் வரை இவ்வாலயம் கைவிடப்பட்டு கவனிப்பாரறின்றி கிடந்தது.காலப்போக்கில் சிதைவடைந்து விட்டது. பின்னர் இத்தோட்டத்தைச்சேர்ந்த டி.செல்வநாயகம் என்பவர் கடந்த 15 வருடங்களாக இத்தோட்ட மக்களின் ஆதரவில் பரிபாலன சபை ஒன்றை உருவாக்கி இக்கோயிலை புனருத்தாரனம் செய்யும் முயற்சியில் இறங்கினார். தலைநகர் வாழ் வர்த்தகப்பெருமக்கள் மற்றும் அவிசாவளை மலையகத்தின் ஏனைய பகுதிகளைச்சேர்ந்த வர்த்தகர்கள்,தனவந்தர்கள் ஆகியோரின் பண மற்றும் பொருள் உதவியினால் படிப்படியாக இக்கோயில் புது மெருகுப்பெற்றது. அங்காளப்பரமேஸ்வரியின் அருள் கடாட்சத்தினால் கடந்த வருடம் 06-06-2009 அன்று இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.&lt;br /&gt;சுமார் 130 வருடங்களுக்குப்பிறகு இவ்வாலயத்தில் இரண்டாவது தடவையாக கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இன பேதம் பாராது அனைவரும் வந்து போகின்றமை மற்றுமோர் முக்கிய அம்சம். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பக்கவாட்டின் இருபுறமும் அமைந்துள்ள சிலைகள் புதுமையான ஆலய அமைப்பினை எமக்குக்கூறுகின்றன. ஆரம்பத்தில் இங்கு சர்ப்பங்கள் உலாவித்திரிந்ததாகவும் இங்குள்ளோர் கூறுகின்றனர். ஆலயத்தின் பாரம்பரியம் கூறும் பழமை வாய்ந்த ஆல மர விருட்சத்தின் கீழ் தற்போது பிள்ளையார் வீற்றிருக்கிறார்.&lt;br /&gt;நெடுநாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் ,குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோயிலை தரிசித்தால் உடன் பலன் கிட்டுவதாக இங்கு வருகை தந்த பக்தர்கள் மூலமாக அறியக்கிடைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர்களால் பங்களாக்கள் தான் கட்டப்பட்டன.ஆனால் ஒரு வெள்ளைக்கார துரை ஆலயம் ஒன்றையே அமைத்துள்ளார் என்று நினைக்கும் போது நெகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நிலவும் ஒரு வித சாந்தம் மனதை இலகுவாக்குகிறது என்பது மட்டும் உண்மை.&lt;br /&gt;&lt;strong&gt;படம்,தகவல்சிவலிங்கம் சிவகுமாரன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-5079288535981605381?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/5079288535981605381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=5079288535981605381' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5079288535981605381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/5079288535981605381'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/06/blog-post.html' title='ஐரோப்பியரால்  உருவாக்கப்பட்ட  அம்மன் ஆலயம்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SkmbQDlal_I/AAAAAAAAAIw/-H_ruoIUD50/s72-c/DSCF0134.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-1112105832223352943</id><published>2009-03-27T04:28:00.000-07:00</published><updated>2009-03-29T04:16:55.487-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>ஸ்லம்டோக் மில்லியனரும் நான் கடவுளும்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SczEQ4GwXpI/AAAAAAAAAIA/R2rSN214nAs/s1600-h/slum-dog-millionaire.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5317841054235385490" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 171px" alt="" src="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SczEQ4GwXpI/AAAAAAAAAIA/R2rSN214nAs/s320/slum-dog-millionaire.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;*ஸ்லம்டோக் மில்லியனர் பிரதிபலிக்கும் கதை கரு இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் (மும்பை) நிஜம் என்ற காரணத்தினால் தான் கூடுதலாக விமர்சிக்கப்படுகிறது. இதே விமர்சனம் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;*படத்தின் கதைக்கரு பிரதிபலிக்கும் சில விடயங்களால் நல்ல சினிமா என்ற விடயத்திலிருந்து விமர்சனங்களுக்குள்ளாயிருக்கின்றன இந்த இரு திரைப்படங்களும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;உலக சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் எதிர்ப்பார்க்கப்படும் ஒஸ்கார் திரைப்பட விருது வழங்கல் நிகழ்வு இம்முறை ஆசிய கண்டத்தில் அதிகளவாக பேசப்பட்டதற்கு காரணம் இந்தியாவில் படமாக்கப்பட்ட ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்கு கிடைத்த எட்டு ஒஸ்கார் விருதுகள் மற்றும் தமிழரான இசையமைப்பாளர் ஏ.&lt;a href="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SczE0xc0AWI/AAAAAAAAAII/B-ANN1LdInM/s1600-h/p14a.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5317841670924140898" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 212px" alt="" src="http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SczE0xc0AWI/AAAAAAAAAII/B-ANN1LdInM/s320/p14a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஆர்.ரகுமானுக்கு அதில் கிடைத்த இரு விருதுகள். இது ஒருபக்கம் இருக்க மேற்படி ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஒஸ்கார் விருது கிடைத்திருப்பது பற்றி இந்தியாவிலேயே பல விமர்சனங்கள் எழுந்தன. இது பிரிட்டிஷ் இயக்குனர் டொனி பொய்ல் இயக்கிய ஆங்கிலத்திரைப்படம் என்பதால் அதற்கு இசையமைத்த ரகுமானுக்கு கிடைத்த விருதே ஒழிய இது இந்தியத்திரைப்படம் ஒன்றுக்கு கிடைத்த விருதாக கொள்ளமுடியாது என்பது ஆரம்பத்தில் எழுந்த விமர்சனம்.&lt;br /&gt;இதை விட தற்போது இத்திரைப்படம் குறித்து முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் பேசப்படவேண்டியவை.மேலும் திரைப்படம் ஒன்றிக்கு அங்கீகரிக்கப்பட்ட விருதொன்று கிடைத்தாலே அதை பார்த்து விட்டு விமர்சிக்கும் கூட்டங்கள் இன்று அதிகமாகிவிட்ட நிலையில் கடந்த வருடம் வெளியான இத்திரைப்படம் குறித்து இவ்வருடமே அதிகமாக பேசப்படுகிறது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் மற்றுமொரு முகம் அங்கு நிலவும் வறுமை. வறுமையைச்சார்ந்து இடம்பெறும் அட்டூழியங்கள்,கட்டாய சிறுவர் விபசாரம், சிறுவர்களை முடமாக்கி பிச்சையெடுக்க வைத்தல், அவர்கள் மூலமாக போதை பொருள் விநியோகம் செய்தல் இப்படி கூறிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;இந்த சமூக அவலங்களைக்கொண்டு இந்தியாவில் பல மொழிகளில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.அவை பேசப்பட்டனவா என்பதை விட அதன் மூலம் பலன் கிடைத்ததா என்பது குறித்து எவரும் கதைப்பதற்கு முன்வருவதில்லை.ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருதை பெற்றவுடன் அதன் மூலம் பெருமை பட முடியாது என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்கு காரணம் இது தான். இத்திரைப்படத்தில் சமூக அவலங்கள் யதார்த்தபூர்வமாக காட்டப்பட்டிருப்பினும் கூட இக்கதை இந்தியாவின் குறிப்பாக மும்பை வாழக்கையின் இன்னுமொரு பகுதியை படம்பிடித்து காட்டுகின்றது என்பது இந்த நாட்டுப்பற்றுள்ள விமர்சகர்களின் வாதம்.&lt;br /&gt;திரைப்பட விருது என்பது எடுக்கப்பட்ட விதத்திற்கும் அதில் கையாளப்பட்டிருக்கும் உத்திகளுக்கும் சொல்ல வந்த விடயத்திற்குமே ஒழிய ஒரு நாட்டில் ஓர் இடத்தில் இடம்பெற்ற பெறுகின்ற அவலங்களை வெளிக்கொணர்ந்ததற்கு அல்ல. சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களில் வரலாற்று சான்றுகளை அப்படியே கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதே யதார்த்தம்.உதாரணமாக டைட்டானிக் திரøப்படத்தை கூறலாம். 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் கடலில் முழ்கியது நிஜம்.ஆனால் 1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் திரைப்படத்தில் ஜெக் ,ரோஸ் என்ற இரு காதலர்களை சுற்றியே இத்திரைப்படம் பின்னப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.டைட்டானிக் முழ்கிய சந்தர்ப்பத்தில் இப்படியான கதாபாத்திரங்கள் வாழ்ந்தார்களா என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை .இது நெறியாள்கையின் கைவண்ணம்.இத்திரைப்படம் 14 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 11 விருதுகளை வென்றமை குறிப்பிடத்தக்கது. இதை ஒரு உதாரணத்திற்காக கூறினேன்.&lt;br /&gt;ஆனால் ஸ்லம்டோக் மில்லியனர் பிரதிபலிக்கும் கதை கரு இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் நிஜம் என்ற காரணத்தினால் தான் கூடுதலாக விமர்சிக்கப்படுகிறது. இதே விமர்சனம் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.&lt;br /&gt;மும்பையின் சுமார் இரண்டு கோடி ஜனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஒதுக்கப்பட்ட இடங்களில் வறுமையின் நிழலில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் என்பதே நிஜம். இந்த மக்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்ப்பதை விட திரைப்படம் வாயிலாக நாம் பார்க்கும் போது எழும் உணர்ச்சி விஸ்வரூபத்தை மனதில் மட்டுமே தேக்கி வைத்துக்கொள்ள முடியும். அந்தளவிற்கு திரைப்படத்தில் அதை வெளிப்படுத்தும் பாங்கும் இருக்க வேண்டும் இது இயக்குனரின் கைகளில் தங்கியுள்ளது என்பது முக்கியம். ஸ்லம்டோக் மில்லியனரில் இயக்குனர் டோனி பெய்ல் கூறியிருப்பதுவும் இதைத்தான். மதக்கலவரம் ,வறுமை ஒரு சமூகத்தின் மீதான அடக்குமுறை என்பவற்றுக்கு முகங்கொடுக்கும் மூன்று சிறுவர்களைப்பற்றிய கதை தான் இது. மதக்கலவரத்தில் அனாதையாகும் சகோதரர்கள் ஜமால் ,சலீம் இவர்களின் பெண் தோழி லத்திகா ஆகியோர் மும்பை சமூகத்தின் என்னென்ன அக்கிரமங்களுக்கெல்லாம் முகங்கொடுத்து பிரிந்து இறுதியில் ஒன்று சேர்வது கதைக்கரு.இதனிடையே மூவரும் கட்டாய பிச்சைக்காரர்களாக்கப்படுவது இதில் லத்திகா சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமாதாவது சலீம் கொலைகாரனாவது என பல விடயங்களை சரியாக நகர்த்துகிறார் இயக்குனர்.&lt;br /&gt;இதன் காட்சியமைப்புகளும் கதைக்களமும் கற்பனையே அல்ல நிஜம் தான் என மும்பையில் வாழ்ந்து வரும் இரண்டு கோடி பேரும் கூறுவர். இருந்தாலும் சினிமா என்ற ஜனரஞ்சக ஊடகம் வாயிலாக ஒரு சமூகத்தின் உண்மை நிலை உலகெங்கும் பரவும் போது அதை எதிர்வினை கண்ணோட்டத்தில் பார்க்கும் கூட்டம் தான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கௌரவ விளக்கம் கூறும். இயக்குனர் டோனி மும்பை சமூகத்தினதோ அதன் இன்னொரு பக்கத்தையோ தோலுரித்து காட்டுவதற்கும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கும் இத்திரைப்படத்தை உருவாக்க வில்லை என்பதை சொல்லித்தான் நிரூபிக்கவேண்டியதில்லை. இதற்கு முன்பதாக இவர் Shallow Grave (1994) Train Spotting (1996 A Life Less Ordinary (1997) the Beech (2000)28 Days Later (2002) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதே போல் தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஸ்லம்டோக் மில்லியனர் போல் இத்திரைப்படத்திலும் பாலா விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய உண்மை முகத்தை காட்டியிருக்கிறார்.பிச்சைகாரர்களை நாம் தினந்தோறும் காண்கின்ற÷õம்.அவர்களின் வாழக்கை முறை பற்றியும் அவர்கள் ஏன் எப்படி இந்த யாசக வாழ்க்கைக்கு வந்தார்கள் என்றும் நாம் என்றாவது யோசித்தது உண்டா? பிச்சைகாரர்களை உருவாக்கவென்றே ஒரு கூட்டம் இருப்பது எத்தனைப்பேருக்குத்தெரியும்? ஸ்லம்டோக் மில்லியனரில் ஒரு கட்டத்தில் மட்டும் வரும் இந்த விடயம் நான் கடவுளில் முழுக்க வியாபித்துள்ளது.இத்திரைப்படத்தில் வரும் மும்பை தாதாவும் நான் கடளில் வரும் தாண்டவன் பாத்திரமும் ஒரே காரியத்தை செய்பவர்கள். காசியில் உலாவும் அகோரி என்ற இனம் பற்றி நாம் கேள்விப்பட்டது கொஞ்சமே.தம்மை கடவுள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் எரியும் பிணத்தை உண்பவர்கள் என்பதை மட்டுமே கேள்வியுற்றுள்ளோம். நான் கடவுளில் இதற்கான தெளிவான விளக்கங்களை பாலா வைத்துள்ளார்.ஆனால் அதே சமயம் இத்திரைப்படத்தில் பிச்சைகாரர்கள் அங்கவீனர்களை பாலா கேவலப்படுத்தியுள்ளார் என் தற்போது குரல்கள் எழுந்துள்ளன. இயக்குனர் டோனி பொய்ல் மும்பை வாழ்க்கையின் இருட்டுப்பகுதிகளை கூறியிருப்பது போல் பாலா பிச்சைகாரர்களின் உருவாக்கம் இதன் பின்னணி குறித்த முகமுடிகளை கிழித்தெறிந்துள்ளார். இந்த உண்மைகளை யதார்த்தபூர்வமாக அவர்களை வைத்தே நெறிப்படுத்தியிருப்பதால் தான் யதார்த்தம் இரசிகனின் நெஞ்சை பிழிகிறது. இது தான் படத்தின் வெற்றியும் கூட. இதே நேரம் சாதாரண நடிகர்களை வைத்து அவர்களை அங்கவீனர்களாகவும் பிச்சைகாரர்களாகவும் தனது படத்தில் பாலா சித்திரித்திருந்தால் அவர் வேறு விதமான விமர்சனங்களை எதிர்நோக்கியிருக்கக்கூடும். ஒரு நல்ல திரைப்படம் மூலம் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் எந்தவொரு நல்ல கலைஞனும் வர்த்தகமயத்தை நோக்காக கொண்டிருக்க மாட்டான். அவனது எதிர்ப்பார்ப்பு விருதுகளும் அல்ல. டோனி பொய்ல் உண்மையில் இந்திய நாட்டை பற்றி என்ன விடயங்களை தெரிந்து வைத்திருந்தார் என்பது பலரின் கேள்வி, காரணம் இவர் இந்திய நாவலாசிரியர் விகாஸ் ஸ்வரூப்பின் நாவலை தழுவியே ஸ்லம்டோக் மில்லியனரை எடுத்துள்ளார். அதே போல் ஜெயமோகனின் ஏழாவது மனிதன் கதையின் தழுவலே நான் கடவுள். இத்திரைப்படத்தில் பாலா கற்பனையாக எதுவும் கூறவரவில்லை என்பது நல்ல சினிமாவுக்கான வெளிப்பாடாக இருக்கும் அதே வேளை உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் தானே சிக்கல்கள் எழுகின்றன. இத்திரைப்படத்தில் வரும் அவ்வளவும் பொய் என எவரும் கூறவில்லை. எமக்கு மட்டும் தெரியும் உண்மைகள் பலர் அறிய விஸ்வரூபமெடுக்கும் போது நாமே விமர்சன நிலைக்கு தள்ளப்படுவது நிதர்சனம்.&lt;br /&gt;இந்தியாவைப்பற்றியும் இந்தியர்கள் பற்றியும் இந்தியாவில் உள்ளவர்களுக்கே ஒரு சில திரைப்படங்கள் மூலம் தான் தெரிய வருகின்றது. உண்மை தெரிந்த பிறகு அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு சிலருக்கே உண்டு. இது இந்திய நாட்டுக்கும் மட்டும் பொருத்தமானதல்ல இருப்பினும் சினிமாவை இன்னுமொரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் நாடு என்ற வகையில் இந்தியா என்று கூற விழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(சிவலிங்கம் சிவகுமாரன்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நன்றி:வீரகேசரி வாரவெளியீடு (22-03-2009)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-1112105832223352943?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/1112105832223352943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=1112105832223352943' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1112105832223352943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/1112105832223352943'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/03/blog-post_27.html' title='ஸ்லம்டோக் மில்லியனரும் நான் கடவுளும்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SczEQ4GwXpI/AAAAAAAAAIA/R2rSN214nAs/s72-c/slum-dog-millionaire.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-709986002580485737</id><published>2009-03-01T19:57:00.002-08:00</published><updated>2009-03-01T20:30:04.816-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><title type='text'>விளம்பர படத்திலிருந்து ஒஸ்கார் விருது  வரை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatbqzKzzaI/AAAAAAAAAHY/0fMaRsFRBTo/s1600-h/untitled.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5308437376634441122" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 319px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatbqzKzzaI/AAAAAAAAAHY/0fMaRsFRBTo/s320/untitled.jpg" border="0" /&gt;&lt;/a&gt; 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி தமிழ்நாட்டின் சென்னையில் திலீப்குமாராக பிறந்த இந்த பையனா பின்னர் ஏ.ஆர்.ரகுமானாக மாறி தனது இசையின் மூலம் உலகை திரும்ப வைத்திருகிறார் என்றால் நம்பமுடியவில்லை. சர்வதேசத்தின் பார்வையை இந்திய சினிமா பக்கம் திரும்பவைத்தவர் இயக்குனர் சத்தியஜித்ரே என்றால் மிகையாகாது. இவர் இயக்கிய படங்கள் பல விருதுகளை வென்றாலும் ஒஸ்கார் பிரிவில் விருதுகள் கிடைக்கவில்லை.எனினும் அவருக்கு 1992 ஆம் ஆண்டு வாழ் நாள் சாதனையாளருக்காக ஒஸ்கார் விருது சிபாரிசு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.அவர் நோயுற்று வைத்தியசாலையில் இருக்கும் போது பரிசு குழுவினர் அங்கு நேரடியாகச்சென்று இவ்விருதை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பதாக 1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அடன்பெரோ இயக்கி பென் கிங்ஸ்லி நடித்த காந்தி திரைப்படத்தின் ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருதை இந்தியபெண்மனியான பானு ஆதைய்யா பெற்றுக்கொண்டார்.இவை இரண்டு மட்டுமே இந்திய திரைப்படத்துறைக்கு கிடைத்த ஒஸ்கார் விருதுகள்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5308439454734531250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 249px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatdjwseurI/AAAAAAAAAHw/PYABCIN0LhA/s320/p2%5B1%5D.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9900;"&gt;வைத்தியசாலையில் ஒஸ்கார் விருதுடன் இயக்குனர் சத்தியஜித்ரே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு சுமார் இரண்டு தசாப்த காலத்திற்குப்பிறகு அமீர்கான் நடித்து அசுதோஷ் கவ்ரிகர் இயக்கத்தில் வெளியான லகான் ஹிந்தித்திரைப்படம் 2002 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு படப்பிரிவிற்கான ஒஸ்கார் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் விருது கிடைக்கவில்லை.இப்படத்திற்கும் ரகுமானே இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது இசையில் இரண்டு ஒஸ்கார் விருதுகளைப்பெற்று தமிழினத்திற்கும் இந்திய இசை பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்த்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான் . இவர் இசையமைத்த சிலம்டோக் மில்லியனியர் (Slumdog Millionaire) &lt;a href="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatcP2Ss90I/AAAAAAAAAHg/iyBWT6vhsww/s1600-h/p1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்ற பிரித்தானிய தயாரிப்புப்படத்திற்கு கிடைத்திருக்கும் எட்டு விருதுகளில் இரண்டு பிரிவுகளுக்கான (சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் இசைக்கான விருது) விருதுகள் இப்போது ரகுமான் வசம். ரகுமானுக்கு ஒஸ்கார் விருதை பெற்றுத்தந்திருக்கும் ஸ்லம்டோக் மில்லியனியர் என்ற படம் இந்திய எழுத்தாளர் விக்காஸ் சுவரூப் எழுதிய கியூ அண்ட் ஏ (Q and A) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.மேலும் இந்தியாவில் இரட்டை ஒஸ்கார் விருதுகளைப்பெறும் முதல் நபர் என்ற பெருமைக்கு அப்பாற்பட்டு ஒஸ்கார் விருதைப்பெற்றுள்ள முதல் தமிழர் &lt;img id="BLOGGER_PHOTO_ID_5308439063483272754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 254px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatdM_K6TjI/AAAAAAAAAHo/ytHynoqJ-as/s320/p1.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்தியாவில் முதல் ஒஸ்கார் விருது பெற்ற பானு ஆதைய்யா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்ற பெருமை தான் பேசப்படவேண்டியது. அதுவும் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்ற கொடக் அரங்கில் அவர் தனது தாயின் ஆசிர்வாதத்தை சிலாகித்து கூறி, தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி முடித்தார்.இது அவரின் தாய் கரீமா பேகம் மற்றும் தாய்மொழி மேல் வைத்துள்ள பற்றை காட்டி நிற்கின்றது.&lt;br /&gt;திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கு முன்பதாக இதே திரைப்பட இசைக்காக, ரகுமான் குளோடன் குளோப் மற்றும் பப்டா விருதுகளைப்பெற்றார்.குளோடன் குளோப் விருது வெல்லும் திரைப்படத்திற்கு நிச்சியமாக ஒஸ்கார் விருது கிடைக்கும் சாத்தியகூறுகள் அதிகம் என்பதை வரலாறு எமக்கு புலப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மைல்கல்லை அடைய ரகுமான் எடுத்துள்ள முயற்சிகள் கடுமையானவை.ரகுமான் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தை ஆர்.கே.சேகர் தமிழரானாலும் மலையாள படவுலகின் இசையமைப்பாளரா திகழ்ந்தவர்.22 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் 100 படங்களுக்கு மேல் இசைப்பணியாற்றியுள்ளார். ரகுமான் 9 வயதாக இருக்கும் போது அவரது தந்தை மரணத்தை தழுவ ரகுமானின் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவ எவருமே முன்வரவில்லை.இதன் காரணமாக ரகுமானின் குடும்பம் இசை உபகரணங்களை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அந்நேரத்தில் அவரது குடும்பத்திற்கு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்து வந்த இஸ்லாமிய அன்பரின் மனித நேயத்தை மதித்து 1989 ஆம் ஆண்டு தனது சகோதரிகளுடன் இஸ்லாம் மதத்தை தழுவியது குடும்பம்.அதிலிருந்து அவரது பெயரையும் ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார். தனது 11 ஆவது வயதில் தனராஜ் மாஸ்டரிடம் கீபோட் வாசிக்கப்பழகினார் ரகுமான். ஆரம்பத்தில் தனது சிறுவயது நண்பர்களான டரம்ஸ் சிவமணி,சுரேஷ் பீட்டர்ஸ், ஜோன் அந்தனி.ஜோ ஜோ ஆகியோரிடமும் இசை பற்றிய விடயங்களø பகிர்ந்து கொள்ள அவர் தயங்கவில்லை. இவர்கள் அனைவரும் உருவாக்கிய ரூட்ஸ் என்ற இசைக்குழுவில் ரகுமான் கீபோட் வாத்திய கலைஞராக விளங்கினார்.&lt;br /&gt;அதன் பின்னர் இசைஞானி இளையராஜா,எம்.எஸ்.விஸ்வநான் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக்கிடைத்தது.மேலம் தபேலா கலைஞர் ஜாகிர் உசேன்,வயலின் வித்துவான் குன்னக்குடி ஆகியோருடன் இணைந்து பல நாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொண்டுள்ளார். புலமை பரிசில் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இலண்டனில் அமைந்துள்ள டிரினிடி இசை கல்லூரியில் மேலைத்தேய இசையில் பட்டம் பெற்றார்.&lt;br /&gt;தனது 25 ஆவது வயதில் தனியõக இசையமைக்கத்தொடங்கினார் ரகுமான்.தனது வீட்டிலேயே ஒலிப்பதிவு கூடத்தை ஆரம்பித்தார். விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த இவரின் வித்தியாசமான இசைப்பாணி பலரை கவர்ந்தது. இவரது இசையில் கவரப்பட்ட இயக்குனர் மணிரத்னம் தனது ரோஜா திரைப்படத்திற்கு இசையமøக்கும் பொறுப்பை வழங்கினார். தனது முதல் பட வாய்ப்பை பலமாக பற்றிக்கொண்ட ரகுமான் அற்புதமான பாடல்களை தந்ததன் மூலம் முதல் திரைவுலக பிரவேசத்திலேயே சிறந்த இசைக்கான தேசிய விருதை பெற்றார்.அதிலிருந்து இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரா விளங்கினார். ரகுமான் இது வரை ரோஜா உட்பட நான்கு தேசிய விருதுகளை சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் வென்றுள்ளார். ரோஜா (1992) மின்சாரகனவு (1996) லகான் (2001) கன்னத்தில் முத்தமிட்டால் (2001) இதைத்தவிர தமிழ் நாடு அரசு விருதுகள் ஆறை பெற்றுள்ளார்.&lt;br /&gt;இது வரை தமிழ் ,ஹிந்தி, ஆங்கிலம் ஏனைய மொழிகள் உட்பட 103 படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார். 11 படங்கள் கைவசம் உள்ளன.இதில் இயந்திரன், அசோகவனம்,சென்னையில் ஒருமழைகாலம்,விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய தமிழ் படங்களும் அடங்குகின்றன. அமெரிக்காவின் பிரபல வோல்ட் டிஸ்னி தயாரிப்பில் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள ஆங்கில ,தமிழ்,ஜப்பானிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு வரும் The 19th Step என்ற படத்திற்கும் ரகுமானே இசை.இத்திரைப்படமும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;விளம்பர படங்கள் மூலம் தனது இசை பிரவேசத்தை ஆரம்பித்த ரகுமான் இன்று ஒஸ்கார் எனும் சிகரத்தை தொட்டுள்ளார். இவரது இளமை கால வாழ்க்கையும் விடாமுயற்சியும் பலருக்கு ஒரு பாடமாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;சிவலிங்கம் சிவகுமாரன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (01-02-2009)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-709986002580485737?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/709986002580485737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=709986002580485737' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/709986002580485737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/709986002580485737'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/03/blog-post.html' title='விளம்பர படத்திலிருந்து ஒஸ்கார் விருது  வரை'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatbqzKzzaI/AAAAAAAAAHY/0fMaRsFRBTo/s72-c/untitled.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-4096961543183541219</id><published>2009-02-23T00:50:00.002-08:00</published><updated>2009-02-27T20:22:21.388-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>தமிழ் சினிமாவும் ஏமாற்றப்படும் இரசிகர்களும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SaJkQupWbVI/AAAAAAAAAGs/3Z3LpmiiJ4w/s1600-h/dasavatharam-kamalhassan-asin.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305913549558017362" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 286px" alt="" src="http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SaJkQupWbVI/AAAAAAAAAGs/3Z3LpmiiJ4w/s320/dasavatharam-kamalhassan-asin.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழ் சினிமா பற்றிய பல்வேறு அலசல்களில் இந்திய திறனாய்வு மற்றும் விமர்சனங்களில் கையாளப்படும் பல விடயங்கள் குறித்து நாம் பொழுது போக்காகக்கூட கதைப்பதில்லை விவாதிப்பதில்லை. இதற்குக்காரணம் நல்ல சினிமா எது என்ற விடயம் பற்றிய அறிவை நாம் வளர்த்துக்கொள்ளாததுதான். ஒரு சினிமாவை நாம் எதற்குப்பார்க்கவேண்டும் அதிலிருந்து என்னென்ன விடயங்களை கற்றுள்ளோம், அவ்விடயங்களை நம் நண்பர்களுடன் விவாதத்திற்கு உட்படுத்துகின்றோமா குறிப்பிட்ட படத்தில் இயக்குனர் என்ன விடயத்தை முன்னிலைப்படுத்துகிறார் அல்லது எதை மறைமுகமாக குத்திகாட்டுகிறார் இது பற்றிய தேடல்கள் நம்மிடம் குறைவு. ஒரு தமிழ் படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கும் சண்டை காட்சிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு பல நல்ல விடயங்களுக்கு கொடுப்பதில்லை. இப்போது வெளி வரும் தமிழ்த்திரைப்படங்களில் முக்கியமாக பலரும் பேச விரும்பாத விடயம் சினிமா இலக்கணவிதிகள் பற்றிய தவறுகளாகும். இதை ஆங்கிலத்தில் L&lt;span style="font-family:arial;"&gt;ogical Mistakes &lt;/span&gt;என்று கூறுகின்றனர். ஒரு சினிமா இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை சினிமா பாடத்தில் இல்லையென்றாலும் ஒரு சினிமாவை பார்க்க திரையரங்கு செல்லும் இரசிகனை எப்படியெல்லாம் காட்சியமைப்புக்களில் ஏமாற்றலாம் என்பதற்கு இன்று வெளிவரும் திரைப்படங்கள் சான்று பகர்கின்றன. இதில் இந்தியாவிலிருந்து வெளிவரும் சகல மொழி திரைப்படங்களும் அடக்கம் சரி இந்த லொஜிக்கல் தவறுகள் என்றால் என்ன? ஒரு படத்தில் இடம்பெறும் சன்டை,நகைச்சுவை,ஆடல் ,பாடல்,சம்பவங்கள் அனைத்திலும் இந்த தவறுகள் ஆக்கிரசித்துள்ளன. இதை தான் இன்றைய இரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் ஒரு வகையில் இது அவர்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானது. நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் சண்டை ,பாடல் காட்சிகளை கற்பனைக்கு எட்டாத விதத்தில் எடுத்தல் ஒரு நல்ல சினிமாவுக்கான பண்புகள் என்று கூற முடியாது. சண்டை காட்சிகளை எடுத்துக்கொண்டால் ஒரு நாயகன் என்னதான் அசாத்திய உடல் திறன் கொண்டவனாக இருந்தாலும் ஒரே தடவையில் வெறுங்கையில் இருபது அரிவாள் ரவுடிகளை சமாளிப்பது என்பது சினிமாவில் மட்டுமே நிஜம் என்பது அதைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் இக்காட்சியல் யதார்த்தம் என்பது இல்லை.சண்டை காட்சியில் பிண்ணியில் ஒலிக்கும் சத்தங்கள் கூட பொய்யானவை என்பது கண்கூடு. தற்போது வெளி வரும் தமிழ் சினிமாவில் உள்ள சண்டை காட்சிகள் நூற்றுக்கு நூறு வீதம் பொய்யானவை என்பதே உண்மை. ஆனால் இதே காலகட்டத்தில் சண்டை காட்சிகளில் கூட யதார்த்தத்தை காட்ட விரும்பும் இயக்குனர்கள் இல்லாமலில்லை.இதில் பாலா,அமீர்,மிஷ்கின், ஏன் அக்காலத்து பாலு மகேந்திரா,மகேந்திரன் என்போரை குறிப்பிடலாம். இயக்குனர் பாலா தனது படத்தில் வரும் சண்டை காட்சிகல் கூட யதார்த்தத்தை எதிர்ப்பார்ப்பவர்.பிண்ணனியில் பொய்யான சப்தங்களை எழுப்ப விரும்பாத இவர் தனது படங்களில் இருவர் சண்டையிடும் போது அவர்களில் இருந்து எழும் உணர்ச்சிகள் ஆவேசம் சப்தம் என்பன உண்மையானதாகவும் தொழில் நுட்ப கலப்பில்லாததாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர். இவரின் நந்தா,பிதாமகன்,தற்போது வெளிவந்துள்ள நான் கடவுள் என்பவற்றைக்கூறலாம். சண்டை காட்சிகளை விடுத்து ஒரு படத்தில் இடம்பெறும் சம்பவங்களில் எத்தனையோ தவறுகள் இடம்பெறுகின்றன. இதற்கு உதாரணம் காட்டத்தொடங்கினால் இங்கு இடம்போதாது.எனினும் ஒரு சில விடயங்களைப்பார்க்கலாம். மகத்தான வெற்றி பெற்ற பல தமிழ் திரைப்படங்களில் கூட ஆரம்பம் முதல் முடிவு வரை தவறுகள் காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் இடம்பிடித்துள்ளதை அவதானிக்கலாம்.விஜய் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை எடுத்துக்கொண்டால் இறுதி வரை நாயகிக்கு இவன் தான் நாயகன் என்பது தெரியாமல் இருப்பதற்கு இயக்குனர் எழில் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் இறுதி தருணங்கள் பொய்யானவை. நாயகி தனது வாழக்கையில் முக்கியமான இடத்தைப்பிடித்த நாயகன் ஒரு பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க போய் விடுகிறான்.அந்த காலகட்டத்தில் இவனது உயிர் நண்பர்கள் நாயகியிடம் இருக்கின்றார்கள்.அப்போது நாயகனின் ஒரு புகைப்படம் கூட அவர்கள் மத்தியில் இல்லாததை நம்ப முடியாது உள்ளது. இது ஓர் உதாரணம் தான் இப்படி எத்தனையோ. இயக்குனர் சங்கரின் படங்களில் பிரமாண்டம் இருக்கும் ஆனால் காட்சியமைப்புக்களை நம்ப முடியாது. கதையையே நம்ப முடியாதுள்ளது. ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னம் கூட தனது படங்களில் யதார்த்தம் இழையோடுவதை விரும்பினார் எனினும் வர்த்தக நோக்கத்தை கொண்டு படம் தாயாரிக்கும் எண்ணம் இப்போது மேலோங்கியுள்ளதால் அவரிடம் இருந்து இப்படியான படங்களை அண்மைக்காலங்களில் எதிர்ப்பார்க்கமுடியாததாகவுள்ளது. இறுதியாக வெளிவந்த கமலின் தசாவதாரம் திரைப்படத்திலும் ஏகப்பட்ட தவறுகள்.இப்படத்தில் பலரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் இறுதி காட்சியில் சுனாமி ஏற்பட்டு மக்களின் மரண ஓலங்களின் மத்தியில் கமலும் அசினும் கடற்கரையில் காதல் வசனங்களை பேசியபடி வருவது. ஹொலிவுட் திரைப்படங்களை Drama, action, thriller, science fiction, animation என்ற வகைக்குள் உள்ளடக்குவர். கற்பனா அதிசயங்கள் நிறைந்த விஞ்ஞான புனைகதைகள் என்றால் science fiction என்ற முத்திரையுடன் தான் அவை வெளிவரும்.இதில் ஸ்பைடர்மேன்,சூப்பர் மேன்,ஹரி பொட்டர் ஆகிய படங்களை உள்ளடக்கலாம்.இப்படங்களை பார்ககும் ஒரு இரசிகன் ஏமாற்றப்படுவதில்லை என்பதே உண்மையாகும். எனினும் இன்று வெளிவரும் பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்கள் தழுவல்களாக இருப்பதுவும் கூட இரசிகர்களை ஏமாற்றும் வேலைதான். அதற்கு உலக சினிமா குறித்து ஆர்வமும் அக்கறையும் தேவை. இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை குறிப்பிடல் அவசியம். ஹிந்தித்திரை உலகில் நடிப்பு இயக்கம் ஆகியவற்றில் தனிமுத்திரை பதித்த நடிகர் அமீர்கான்.இவர் இயக்கி நடித்த லகான்,ரங் தே பாசந்தி என்பன சர்வதேச விருதுகளை பெற்றன. இவர் ஒரு கட்டத்தில் கூறும் போது ஆங்கில திரைப்படங்களை தழுவி நாம் படம் எடுத்து அதே படத்தை அவர்களுக்குப்போட்டுக்காட்டி விருது கேட்டால் கொடுப்பார்களா என்றார். ஆனால் அவரே ஆங்கிலத்திரைப்படத்தை அப்பட்டமாக அப்படியே தமிழில் எடுத்து வெற்றி பெற்ற கஜினி ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார்.கஜினி 2001 ஆம் ஆண்டு வெளியான மொமென்டோ (Memento) என்ற ஹொலிவுட் திரைப்படத்தின் நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தமிழிலும் ஹிந்தியிலும் முருகதாஸ் இயக்கியிருந்தார். ஒரு திறனாய்வாளனுக்கும் சாதாரண இரசிகனுக்கும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதில் உள்ள வித்தியாசங்கள் முக்கியமானவை. ஒரு திறனாய்வாளன் ஒரு பக்க சார்பாளனாக இருக்க முடியாது.ஆனால் ஒரு இரசிகனால் அப்படியிருக்கமுடியாது, தனது மனதுக்குப்பிடித்த நாயகன் திரைப்படத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலும் கொடூரமானவனாக இருந்தாலும் கூட அவனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையிலேயே அவன் இருப்பான். தமிழ்த்திரைப்படங்களில் வரும் தவறுகள் ஒரு சராசரி இரசிகனுக்கும் விளங்கவேண்டும் என்ற அவாவில் எழுதப்பட்டதே இவ்விடயங்கள்.இது ஆரம்பம் மட்டுமே. இரசிகர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும்.தமிழ்த்திரைப்படங்களில் யதார்த்தம் இருக்கக்கூடாதா இப்படியான படங்களைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா? உங்கள் கண்களுக்குப்பட்ட தவறுகள் எவை?எழுதுங்களேன் இப்பக்கத்துக்கு? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;நன்றி:&lt;/strong&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;வீரகேசரி வாரவெளியீடு&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;( 22-02-2009)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1089910809814766535-4096961543183541219?l=sivathandavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivathandavam.blogspot.com/feeds/4096961543183541219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1089910809814766535&amp;postID=4096961543183541219' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4096961543183541219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1089910809814766535/posts/default/4096961543183541219'/><link rel='alternate' type='text/html' href='http://sivathandavam.blogspot.com/2009/02/blog-post_23.html' title='தமிழ் சினிமாவும் ஏமாற்றப்படும் இரசிகர்களும்'/><author><name>சிவலிங்கம் சிவகுமாரன்</name><uri>http://www.blogger.com/profile/03480164612993743541</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SaJkQupWbVI/AAAAAAAAAGs/3Z3LpmiiJ4w/s72-c/dasavatharam-kamalhassan-asin.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1089910809814766535.post-7950594048427367300</id><published>2009-02-22T23:28:00.001-08:00</published><updated>2009-03-01T20:27:20.050-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையகம்'/><title type='text'>பற்றிக்கொண்டோரும் பறிகொடுத்தோரும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatfdsLkLuI/AAAAAAAAAH4/qB3Go4-PzkE/s1600-h/w3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5308441549466775266" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_k1BwwdIz3Q8/SatfdsLkLuI/AAAAAAAAAH4/qB3Go4-PzkE/s320/w3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;இடம்பெற்று முடிந்த மத்தியமாகாணசபை தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பாரிய அளவிலான விமர்சனங்கள் எழாமலிருப்பதற்குக்காரணம் இந்த முடிவுகள் எதிர்ப்பார்க்கப்பட்டவை என்பதுதான்.ஒரே சமூகத்திற்கு சேவை செய்வதற்கு அச்சமூகத்தை கூறு போட்டு பிரித்து அதே சமூகத்தைச்சேர்ந்தவர்கள் வெவ்வேறு அணிகளில் திரண்டு நின்றால் பெறுபேறுகள் எப்படியிருக்கும் என்பதை சிறுகுழந்தை கூட சொல்லி விடும். இதைத்தான் இம்முறை இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. அதே வேளை எதிர்காலத்தில் மலையகத்தில் இருந்து அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்றை பெறுவதற்கு எந்த வகையில் எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டும் என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கும் அதே வேளை தமிழ் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கியுள்ள அபாயகரமான சூழ்பிலையையும் இத்தேர்தல் முடிவுகள் காட்டி நிற்க தவறவில்லை.&lt;br /&gt;மேலும் மலையகத்தின் பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன தமது ஸ்திர அரசியல் நிலை குறித்து கடுமையாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும்.அரசாங்கத்திற்கு வேண்டுமானால் கடந்த முறையை விட இது பெருவெற்றி என்றுக்கூறலாம் ஆனால் குறிப்பாக பெருந்தோட்ட தமிழ் சமூகத்திற்கு என்ன கிடைத்துள்ளது என்பது குறித்து பார்த்தல் அவசியம். அதை விட இம்முறை மத்திய மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை பிரச்சினை மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை வாக்களிக்க முன்வராதோரின் நிலை என்பன மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;காரணம் இக்குறிப்பிட்ட பிரச்சினைகளை மட்டும் தெரிந்தெடுத்து தீர்த்திருந்தால் எந்த கட்சியாவது மேலதிகமாக 4 ஆசனங்களை சரி பெற்று தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்திருக்கலாம் என்பதே தேர்தல் ஆய்வுகளின் முடிவு.காரணம் மத்திய மாகாணத்தின் கண்டி ,மாத்தளை,நுவரெலியா மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தொட்டுள்ளது.மேலும் மத்திய மாகாணத்தில் 5இலட்சத்து 75 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களுக்காக வாக்களிக்கவே தவறியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டல் அவசியம்.இதில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் தொகையே இரண்டு இலட்சத்துக்கும் மேல்.&lt;br /&gt;பறிகொடுத்தவர்கள்இ.தொ.கா மற்றும் மலையக மக்கள் முன்னணி என்ற இரண்டு பிரதான கட்சிகளும் இம்முறை கனிசமான வாக்குகளை தேர்தலில் இழந்துள்ளன.அதிலும் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் மலையக மக்கள் முன்னணி நிறுத்திய மூன்று வேட்பாளர்களும் படுதோல்வியை தழுவியுள்ளனர்.இம்முறை மத்திய மாகாணசபையில் ஒரு ஆசனத்தையும் இக்கட்சி பெறவில்லை. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையாவது பெறும் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த வேளை அதிர்ச்சியளிக்கும் முகமாக தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. கட்சியில் தலைதூக்கியுள்ள உட்பூசல்கள் தலைமைத்துவ போட்டிகள் என்பன தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது என்றால் மிகையாகாது. இ,தொ.காவிற்கு அடுத்தபடியாக மலையக மக்களின் வாக்கு வங்கியை தன் வசம் வைத்திருந்த மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்குரியது. கட்சியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அரசின் பங்காளியாக இருந்து கொண்டு தனது ஆதரவை குறிப்பிட்ட பகுதியில் இழந்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் கோட்டையாக கருதப்படும் தலவாக்கலை மற்றும் அதனை அண்டியுள்ள தோட்டப்பகுதிகளில் கூட கட்சிக்கு ஆதரவு இல்லை என்பது சிந்திக்க வேண்டிய விடயம். மேலும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பா
