Friday, December 5, 2008
இது உண்மையா?
Monday, November 17, 2008
லோஷனின் கைது
Wednesday, November 12, 2008
தமிழ் சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்த பெருமானின் சிலை
*சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
*இந்தியாவின் பிரபல சிற்பகலாமணி பத்மஸ்ரீ எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் கீழ் அவரது குழுவினர் இச்சிலையை செதுக்கி வருகின்றனர்.
* 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இச்சிலை உருவாக்கும் எண்ணம் இப்பகுதி கிராம மக்களுக்கு எழுந்துள்ளது.
இலங்கையில் பௌத்த மதம் வேரூன்றிய பிறகு பௌத்தத்தை வளர்த்தெடுப்பதற்காக பண்டைய மன்னர்கள் நிர்மாணித்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை நாம் இன்று கண்குளிர கண்டு வருகிறோம். பண்டைய காலத்திலிருந்து அதாவது கி.பி 1235 ஆம் ஆண்டுக்குப்பிறகு அனுராத புரம் ,பொலனறுவை யுகங்கள் என அழைக்கப்பட்ட காலங்களே பௌத்தம் தலை தூக்கிய பொற்காலம் என குறிப்புகள் சொல்கின்றன. 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலும் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட அவுகன புத்தர் சிலை, வெல்லவாயபுதுருவாகல சிலை, புத்தலமாளிகாவில சிலை, என்பவற்றை உதாரணங்களாகக்கூறலாம்.பண்டைய கால பௌத்த பாரம்பரியங்களை எமக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ள புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் என்பன இலங்கையின் பௌத்த வரலாற்றையும் பண்டையகால கட்டிடகலை நுணுக்கங்களையும் எமக்கு பாறை சாற்றுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிக உயர்ந்து கருங்கல் சமாதி புத்தர் சிலை பற்றிய தகவல்களை இங்கு குறிப்பிடுதல் அவசியம். குருணாகல் பகுதியில் அமைந்துள்ள ரம்படகல,ரிதிகமமொனராகலை விகாரையில் அமைந்துள்ள கருங்கற்பாறையில் ஒரு சமாதி நிலை புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக மேற்படி விகாரையின் பிரதம குருவான வணக்கத்துக்குரிய அமரமௌலி தேரோ எமக்குத்தெரிவித்தார்.
சிலை செதுக்கப்பட முன்னர் கருங்கற் பாறையின் உருவம்
இதில் குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் இச்சிலையை இந்தியாவின் பிரபல சிற்பக்கலைஞரான பத்மஸ்ரீ சிற்ப கலாமணி எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் பேரில் அவரது குழுவினரே நிர்மாணித்து வருகின்றனர். சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இச்சிலையை நிர்மாணிப்பதற்கு இரண்டரை கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும் இவ்விடத்தை சீர்படுத்தி தனியான தியான மண்டபங்கள் அமைப்பதற்கு மேலும் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவரை செலவாகும் என பிரதம குரு அமரமௌலி தேரோ தெரிவிக்கிறார். இது குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில் செலவீனத்தை பார்க்காமல் இந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்குறிய வேலைகளை சிற்பக்குழுவினர் 2002 ஆம் ஆண்டு மனத்திடத்துடன் ஆரம்பித்து விட்டனர்.
வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் இச்சிலை நிர்மாணப்பணிகளுக்காக அப்போதைய இந்தியத்தூதுவர் நிருபமா ராவ் ரூபா 25 இலட்சத்தை மனமுவந்து கொடுத்துதவினார். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஒரு இலட்சததையும்,மலீக் சமரவிக்ரம ரூபா 5 இலட்சத்தையும், மற்றும் தாராள சிந்தையுடையோர் பலர் இந்நிர்மாணப்பணிகளுக்காக மனமுவந்த நிதியுதவி செய்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 25 இலட்சம் ரூபா கொடுத்துதவியதையும் எம்மால் மறக்க முடியாது.
இச்சிலை பற்றி குறிப்பிட்டுக்கூறவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் பண்டை காலத்திலிருந்து அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட சமூக ,பொருளாதார மாற்றங்களினால் எமது பண்பாடு கலாசாரத்துடன் இணைந்து கலைகளும் படிப்படியாக வீழ்ச்சியுறத்தொடங்கின. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டுக்கூறப்படவேண்டிய கலைப்படைப்பு என்றால் 1950 களில் நிர்மாணிக்கப்பட்ட விகேரஹேன புத்தர் சிலையைக்குறிப்பிடலாம். இச்சிலையானது கருங்கல்லில் நிர்மாணிக்கப்படாதபோதும் சுதந்திரத்தின் பின்னர் உருவாகிய எமது கலைப்பண்பாட்டை எடுத்துக்கூறும் குறிப்பிடத்தக்க ஒரு வராற்று சின்னமாக விளங்குகிறது. இதற்குப்பின்னர் எமது இலங்கை தீவில் பரவலாக இச்சிலையை ஒத்த சிலைகள் ,கருங்கல்லில் செதுக்கப்படாத சிலைகள் என்பன எழுந்தள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
தற்போது எமது வித்தியா சாகர பிரிவென விகாரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சமாதி நிலை புத்தர் சிலை அமைக்கப்படுவதற்கு பின்புலமாய் இருந்த காரணங்களை இவ்விடத்தில் கூறுவது சாலச்சிறந்தது என்றே நான் கருதுகிறேன்.2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள பாமியன் புத்தர் சிலைகள் தலிபான்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் எமது கிராமத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதித்தது.இக்கசப்பான நிகழ்வினால் ஏற்பட்ட மனத்தாக்கத்தின் வெளிப்பாடே இம்மக்கள் திடசங்கற்பத்துடன் இக்கருங்கல் புத்தர் சிலை செதுக்கும் பணிக்கு ஆதரவளிக்க ஏதுவாயிற்று. இச்சிலையை நிர்மாணிக்கும் வேலைப்பணிகளுக்கு இக்கிராம மக்கள் அடிக்கடி தமது உடல் உழைப்பை வழங்கி அருஞ்சேவையாற்றி வருகின்றனர்.மேலும் சிலர் பண உதவிக்கு அப்பாற்பட்டு இப்பணிக்குத்தேவையான இயந்திர உபகரணங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர் என்று கூறினார்.
எதிர்கால செயற்பாடுகள்இக்கருங்கல் சமாதி புத்தர் சிலை தொடர்பான எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து அமரமௌலி தேரர் கூறுகையில் ‘இச்சிலை செதுக்குவதற்கு ஒதுக்கப்பட் பகுதியைச்சூழவுள்ள பாறையின் ஏனைய பகுதிகள் அகற்றப்பட்டுவிட்டன.குறிப்பிட்ட பாறையில் சிலையின் மேற்பகுதி அதாவது சிரசு பாகம் முழுமையாக செதுக்கப்பட்டு விட்டது. இச்சிலையை 2009ஆம் ஆண்டளவில் முழுமையாக செதுக்கி முடித்து விட முடியும் என பிரதான சிற்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இச்சிலை நிர்மாணம் தொடர்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களும் கூட மிக உற்சாகத்துடன் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்.
இங்கு இன்னுமோர் விடயத்தை கூற வேண்டும். எமது பண்டைய மன்னர்கள் கற்பாறைகளில் செதுக்கி வைத்ததும்,இன்று சிதைவடைந்த நிலையில் உள்ளதுமான அனுராதபுரம் பொலன்னறுவை கால சிலைகள் உங்கள் பார்வையில் படும் போது ஏற்படும் மகிழ்சி உணர்வை உங்களால் மதிப்பிட முடியுமா? அதன் பெறுமதியை வெறும் பண அடிப்படையில் எடை போட முடியுமா? மொனராகலை பிரிவெனா விகாரையில் உள்ள இளம்பிக்குமாரும்,கிராமத்தவர்களும் அனுபவம் மிக்க இந்திய சிற்ப கலைஞர்களின் உதவியுடன் மொனராகலை இரம்பொடகலையில் அமைந்துள்ள ஓர் உயிரற்ற பாறைக்கு உயிரூட்டி மிகப்பிரமாண்டமான தனிக்கருங்கற் புத்தர் சிலை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். ஆகவே உயிரற்ற ஒரு பாறை புத்த பெருமானின் மேன்மையான இயல்புகள் வெளிப்படும் விதமாக படிப்படியாக உயிரூட்டப்படுவதை பார்த்து ஆனந்தமடைய உங்கள் அனைவரையும் குடும்பம் சகிதம் அன்போஐ அழைக்கின்றோம். தேசிய பொக்கிசமாகவும் எம் எதிர்காலச் சந்ததியினரின் சொத்தாகவும் விளங்கப்போகும் இப்பிரமாண்டமான சிலையை வெற்றிகரமாகக்செதுக்கி முடிக்க தங்கள் அனைவரதும் தாராளமான பங்களிப்பையும் பெறுமதி மிக்க ஒத்துழைப்பையும் இக்கருங்கற்சிலை நிர்மாண குழு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றது’ என்கிறார் தேரர்.இலங்கையின் வரலாற்றில் இடம்பெறப்போகின்ற இக்கருங்கற் சமாதி புத்தர் சிலைநிர்மாணப்பணிகள் சிறப்பாக இடம்பெற நாமும் பிரார்த்திப்போம்.இச்சிலையின் நிர்மாணப்பணிகள் மற்றும் விகாரையின் வரலாறு குறித்து அறிந்து கொள்ள http://www.samadhibuddhastatue.org/ எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து தகவல்கள் படங்களை பெறமுடியும்.
Friday, November 7, 2008
காட்டு யானைகள், ஆதிவாசிகளை விட கேவலமாகப்போய் விட்ட மலையக மக்கள்
அது தான் கோதுமை மா மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.
ஆனால் உலகில் தமது இனத்தை தாமே ஆண்டு அவர்களை அடிமைப்படுத்தி அவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க விடமுடியாது முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலை இலங்கையில் மலையகத்தில் மட்டும் தான் உள்ளது.
Thursday, October 30, 2008
இலங்கை தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா?
செய்திகளுக்கு என்ன பலன் என்று ஆராய்வதோ அது தொடர்பான விமர்சனமோ அல்ல இவ்வாக்கம். நேரடியாக விடயத்திற்கு வந்து விடுகிறேன்.
இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்று அறிவித்தபோது இலங்கை அரசிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்தன? அவற்றின் நிலைப்பாடு தான் என்ன?தற்போதுள்ள அரசாங்கமே கொடிய யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டு தமிழினத்தை அழிக்கும் கைங்காரியத்தை செய்து கொண்டிருக்கின்றது என்றால் அந்த அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்துக்கொண்டு அமைச்சுப்பதவிகள் மூலம் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மாதம் மாதம் தமது இன மக்களுக்கு எதிரான அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கையை உயர்த்திக்கொண்டிருக்கும் இவர்கள் பதவி விலகத்தயாரா?
இலங்கையின் மத்திய பிரதேசமான மலையகத்தில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் 21 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்து?இன்றைய தினத்தில் யுத்தம் மற்றும் 1983 வன்செயல்களால் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களின் தொகை 28,500 என்று சொன்னால் சந்தேகமேயில்லை நீங்கள் நம்பமாட்டீர்கள். இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சி இப்படியிருக்க நீங்கள் உள்ளூரில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒன்றுமே சொல்ல மாட்டீர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என பெரும்பான்மை இனத்தவரால் ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் துவேஷம் அள்ளி வீசப்படும் போது கூட புன்சிரிப்போது அதை ஏற்றுக்கொண்டவர்கள் தானே நீங்கள். பாவம் உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர்கள். இருந்தாலும் ஒன்றை மற்றும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வரலாற்றில் நீங்கள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படப்போகின்றீர்கள் என்று அறிந்து நான் உண்மையில் மனவேதனை அடைகின்றேன்,காரணம் நான் ஒரு தமிழன்!
Wednesday, October 29, 2008
தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள் (3)
Thursday, October 23, 2008
குருவியை கொன்ற கிரிக்கெட் வீரர்
இந்தியாவின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணி குறித்து நான் புதிதாக எதுவும் கூறப்போவதில்லை.1932 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது முதல் டெஸ்ட் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு சி.கே.நாயுடு தலைமை தாங்கினார். அந்த முதல் டெஸ்ட் அணியில் பங்கு கொண்ட பந்து வீச்சாளர் தான் மொகமட் ஜஹாங்கீர் கான். 1910 ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஜுலாந்துர் (இப்போது ஜலாந்தர்) எனும் இடத்தில் பிறந்தவர்.
தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள்(2)
அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் உலகில் அதிக டெஸ்ட் ஓட்டங்களைப்பெற்ற வீரர் என்ற பெருமையைப்பெற்றது அனைவரும் அறிந்த விடயமே.
தென்னாபிரிக்காவில் பிறந்து வளர்ந்த பீட்டர்சன் அங்கு தனக்கு சரியான சந்தர்ப்பம் இல்லாத காரணத்தினாலேயே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் பீட்டர்சன் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பரிணமித்து வருகிறார். மூவாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை பெற இவர் எடுத்துக்கொண்ட காலம் 884 நாட்கள் மட்டுமே.
இது சுப்ரமணியபுரம் அல்ல
சிம்சோனும் தெலீலாவும்
சாம்சன் அல்லது சிம்சோன் என வர்ணிக்கப்படும் இக்கதையின் நாயகன் யூத வமிசத்தை சேர்ந்தவன். இவனது தந்தை பெயர் மனோஹா. இவர் இஸ்ரேலின் அப்போதைய பழங்குடி இனங்களில் ஒன்றான டான் (Dan) எனும் இனத்தைச்சேர்ந்தவர். இப்பழங்குடியினரை Tribe of Dan என்று அழைக்கின்றனர்.
குறிப்பிட்ட பெலிஸ்தீன பெண்ணை அவள் இருக்கும் இடத்திற்கே சென்று மணம் புரிந்து வருகிறேன் என்று வீராவேசத்தோடு புறப்பட்ட சிம்சோனை இடையில் ஒரு இராட்சத சிங்கம் எதிர்கொண்டது.மிக இலகுவாக அதை வீழத்திய சிம்சோன் அதன் தாடையை கிழித்துப்போட்டு அப்பால் சென்றான். இச்சம்பவத்தை சிம்சோன் யாரிடமும் கூறவில்லை.
அந்தப்புதிர் அவன் சிங்கத்தை வீழத்தியதையும் பின்னர் தேன் கூட்டை கண்டதையும் தொடர்புகொண்டதாக இருந்தது.
இந்தப்புதிரை பெலஸ்தினியர்களால் கண்டறிய முடியவில்லை.மெதுவாக அவர்கள் சிம்ஸோனின் மனைவியை அணுகினர். எமது குலப்பெருமை உன்னிடத்தில் தான் தங்கியுள்ளது எப்படியாவது அந்தப்புதிருக்கான விடையை தெரிந்து வா இல்லையேல் உன்னையும் உனது தந்தையையும் எரித்து சாம்பராக்கி விடுவோம் என்று மிரட்டினர். அவளும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கண்ணீருடன் சிம்சோனை நெருங்கினாள்.
இருந்தாலும் தெலீலா அதை நினைத்துப்பார்த்தாளா என்பது தான் கேள்வி.பெலிஸ்தினியர்கள் ஆசை காட்டி இவளுக்குக்கொடுத்த பணம் மற்றும் நிலபுலன்களுக்காக ஒரு வீரதீரனை காட்டிக்கொடுக்கும் வேலையைச்செய்து வரலாற்றில் காதல் துரோகி என்ற பட்டத்தைப் பெற்று விட்டாள்.
Wednesday, October 22, 2008
சுப்ரமணியபுரமும் காதல் துரோகமும்
அதன்படி அந்த இரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு தன்னையே சிம்ஸோனிடம் கொடுத்தாள் அந்த அழகி (இவளது கதாபாத்திரப்பெயர் மறந்து விட்டது)ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவள் சிம்ஸோனிடம் அவனது அசுர பலம் பற்றி கேட்ட அவன் புன்னகைத்து விட்டு ஒரு பொய்யை சொல்லுவான். இதை ஒவ்வொரு முறையும் அதை எதிரிகளிடம் கூறி அதன் படி செயற்படகூற இறுதியில் தோல்வியையே தழுவுவார்கள் எதிரிகள். ஒரு கட்டத்தில் இவள் கண்ணீருடன் சிம்ஸோனிடம் என் மேல் உங்களுக்கு அன்பே கிடையாதா உங்களுக்கா என்னையே கொடுத்தேனே உங்கள் வலிமையின் இரகசியத்தை கூறமாட்டீர்களா என கண்ணீர் வடிப்பாள்.
இச்சந்தர்ப்பத்தில் சிம்ஸோன் அவளிடம் உண்மையை மிகவும் வருத்தத்தின் மத்தியிலேயே கூறுவான்.காரணம் அவன் அவளை உண்மையாக நேசித்தான்.தனது உயிருக்கு வலை பின்னப்படுவதை அவர் அறிந்திருக்கவில்லை.மேலும் தனது காதலி தனக்கு என்றுமே காதலியாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கைஅவனுக்கு இருந்தது.இருப்பினும் தனது தாய்க்கும் தன்னை படைத்த கடவுளுக்கும் மட்டும் தெரிந்த இரகசியத்தை காதலிக்கு கூறிய அன்றைய இரவு அதிக மது அருந்தி நித்திரைக்கு சென்றான்.
குறிப்பு: காதலியால் துரோகத்துக்குள்ளாக்கப்படும் காதல் படங்கள் மட்டும்.
Saturday, October 11, 2008
நீ+ நான்= நினைவுகள்
உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்
நாமும் அப்படித்தான் நினைத்தோம்
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்
ஆனால் இரவுகள் நரகம்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்
ஆனால் உன்னை நான்…
காதலித்துப்பார்; கல்யாணம் முடித்து
மனிதா காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!முன்னொரு போதும் பார்க்காத முகம் பார்த்து மணநாளன்று பார்த்த முகம் பார்த்து பின் எந்நாளும் அவளுடன் சேர்ந்திருக்கும் சுகம் எண்ணி காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதல்கள் எல்லாம் கரை சேர்வதில்லை;சேர்ந்தவைகளெல்லாம் தேர்ந்தவைகளில்லை
காதலின் அர்த்தம் புரிந்துணர்வேபுரிந்து கொள்!உன் புது வாழ்க்கையில் ஆரம்பிக்கும் புரிந்துணர்வு புத்துணர்ச்சியானதுஆகையால் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
அனுபவமில்லாத ஆரம்பம் அடிசறுக்கும்என்று தயங்காதே தளராதே அடிக்கடி நீ காணும் புளித்துப்போன புன்னகையை விட உன் புதுத்துணையின் புன்னகை புதுமையானதாகவிருக்கும் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
இங்கு காத்திருத்தல் இல்லை ;தவிப்பில்லை தண்டனையில்லைஇறுதி வரை அவள் எனக்குத்தானா என்ற ஏக்கமுமில்லை!
படகு மறைவிலும் குடையை கவசமாக்கியும்மனதையும் மகிழ்சியையும் பகிர்ந்துகொள்ளத்தேவையில்லை! காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதில் தானே சுகம்?
எவரின் தலையீடும் இல்லாமல் நீ காதலிக்கப்படுவதை விரும்புகிறாயா?இன்றே தொடங்கு காதலிப்பதைஆனால் கல்யாணம் முடித்து விட்டு காதலி உன் புதுத்துணையை! இறுதி மூச்சு வரை காதலிக்கப்படுவாய் காதலின் களிப்பை கண்டுணர்வாய்!
2002
Friday, October 10, 2008
எழுத வாசிக்க திறனற்றவர்கள் 781 மில்லியன் மக்கள்
ஆனாலும் வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற காரணங்களினால் இன்று உலகில் வயது வந்த சுமார் 781 மில்லியன் மக்கள் அடிப்படை எழுத்தறிவு இன்றி உள்ளனர் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது. அதாவது சனத்தொகையில் ஐந்தில் ஒருவருக்கு எழுத்தறிவு இல்லை,இதில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள்.மேலும் 103 மில்லியன் சிறார்கள் இன்று பாடசாலை கல்வியைப்பெறமுடியாது வெளியே புறந்தள்ளப்பட்டுள்ளனர் என்பது இன்னொரு சோகமான விடயம்.கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற கேள்விகளுக்கு நாம் பதில் காணவேண்டியவர்களாக உள்ளோம்.
எழுத்தறிவு ஏன் முக்கியம்?
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்பு பட்ட ஒரு விடயம்.தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோவானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ‘எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியமல் இருத்தலே எழுத்தறிவின்மையாகும்’ என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.அடிப்படை கல்வியின் இதயம் என எழுத்தறிவை கூறலாம்.இதில் வறுமையை அழித்தல்,சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,ஜனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,பால் சமத்தவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல்,சமாதானம் மற்றும் ஜனநாயகம் என பல விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம்.ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றது. எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்,மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.
1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று யுனெஸ்கோவினால் செப்டெம்பர் 8 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும் சமூகத்திற்கும்,அமைப்புக்களுகும் அறிய வைப்பது இதன் நோக்கமாகும்.யுனெஸ்கோவின் ‘அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கையின் படி(2006) தென் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே மிகக்குறைந்த (58.9%)வீதமானோர் (வயது வந்தோரில்)படிப்பறிவில்லாமல் உள்ளனர்.இதற்கடுத்தப்படியாக ஆபிரிக்காவில் 59.7 வீதமும் அரபு நாடுகளில் 62.7 வீதமுமாக உள்ளது.இதில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் என்னவெனில் இந்த அறிக்கைக்கும் நாடுகளில் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளாகும். ஒரு நாட்டின் கல்வியறிவு வீதத்தை தீர்மானிக்கும் காரணியாக இன்று வறுமை பூதகரமாக எழுந்து நிற்கின்றது. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தலிபான் போன்ற அமைப்புக்களின் கடுமையான சட்டதிட்டங்களால் அங்குள்ள பெண்கள் பாடசõலை கல்வியை பல வருட காலமாக இழந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்திற்கான கருப்பொருள்ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினம் ஒரு பிரகடனத்தை தாங்கி வரும்.இம்முறை யுனெஸ்கோவினால் ‘எழுத்தறிவே சிறந்த பரிகாரம்’ ("Literacy is the best remedy")என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரம் மற்றும் கல்விக்கிடையில் உள்ள தொடர்புகளை விளக்குவதாகவும் இக்கருப்பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.இன்று உலகை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ்,காசம்,மலேரியா மற்றும் ஏனைய நோய்கள் தொடர்பில் மக்களும் வளர்ந்து வரும் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை இம்முறை கருப்பொருள் உணர்த்தி நிற்கின்றது. கொடிய உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்தான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் மக்களிடையே சென்று சேராததற்குப்பிரதான காரணங்களில் ஒன்றாக எழுத்தறிவின்மை சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்காக யுனெஸ்கோவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் EDUCAIDS என்று அழைக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான அறிவூட்டல்களை உலகெங்கும் எடுத்துச்செல்வது இதன் பிரதான நோக்கம். இத்திட்டத்தின் இரண்டு பிரதான இலக்குகள் உள்ளன.1) கல்வியறிவின் ஊடாக எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் செயற்பாடு2) மோசமாக பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் கல்வியறிவை கொண்டு செல்வதன் மூலம் கட்டுப்படுத்தல்.
உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்
1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள்.எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின்(சீ.ஐ.ஏ) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும். நாடுகள் ரீதியாக பார்க்கும் பொழுது 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே கியூபா ,எஸ்தோனியா,நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.எமது இலங்கை தாய்நாடு இப்பட்டியலில் 87 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம்90.7ஆகும்.இப்பட்டியலில் இந்தியாவானது 147ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.எழுத்தறிவு விகிதம் 61 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக்காரணம் என கூறப்படுகிறது.
எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித்திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949ஆம் ஆண்டு நவம்பர்14ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது. இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.சுதந்திரம் கிடைத்து 50வருடங்களுக்குப்பிறகும் கூடபெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.இவ்வருடத்திவ் முதல் காலாண்டில் குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.யுனெஸ்கோவின் அவிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது.ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம்.இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.
சர்வதேச எழுத்தறிவு விருதுகள்
வேலையில்லா திண்டாட்டமும் இளைய சமுதாயத்தின் மன்றாட்டமும்
*பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
* இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது?
‘காலநிலை மாற்றமானது இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த பூமி பந்தை பாதுகாப்பான எவ்வித சூழல் பாதிப்புகளும் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுத்துச்செல்ல இளைஞர்கள் தமது சக்தியை முதலீடு செய்ய முன் வரவேண்டும், காலநிலை மாற்றங்குறித்து விழிப்புணர்வை பெறவேண்டும்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள இளையோர்,குறிப்பாக இளம்யுவதிகளும் பெண்களும் விவசாயம், உணவு, நீர்,விறகு சேகரித்தல் என்பவற்றில் கூடுதல் பங்காற்றுகின்றனர். ஆனால் எதிர் காலத்தில் இதற்கு பற்றாக்குறை நிலவும் அபாயம் அதிகமாகவே உண்டு.ஆகவே புதிய தொழில்நுட்பம் மற்றும் பழக்கவழக்கங்களை (கல்வியறிவு) கொண்டு இளையோர் எதிர்கால அபாயமான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் இப்போதிருந்தே தமது பங்களிப்பை நல்க வேண்டும்’
பான் கீன் மூன் (செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை)
சர்வதேச இளையோர் தினமான ஓகஸ்ட் 12 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தனது விசேட அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்களின் சாரமே இது.அவர் ஏன் காலநிலை மாற்றம் குறித்து உலக வாழ் இளையோருக்குக்கூறியுள்ளார்? காரணம் இல்லாமலில்லை. இவ்வாண்டு அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச இளையோர் தினத்தின் பிரதான கருப்பொருள் என்ன தெரியுமா? ‘ இளையோரும் காலநிலை மாற்றமும் ; செயற்படுத்துவதற்கன தருணம் (YOUTH AND CLIMATE CHANGE: TIME FOR ACTION) என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் வருடாவருடம் குறிப்பிட்ட ஒரு கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அவ்வருடம் செயற்றிட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும். சரி இதை ஏன் இச்சந்தர்ப்பத்தில் கூற வந்தேன் என்கிறீர்களா? ஐக்கிய நாடுகள் சபையானது தனது மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளுக்கேற்பவே திட்டங்களை முன்னெடுத்துச்செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அங்குள்ள நாடுகளுக்கும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே நோக்கு. ஆனால் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சினை வேலையின்மையாகும். இது ஒரு பூகோள பிரச்சினை என ஐ.நாவும் ஏற்றுக்கொள்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை இல்லை என்று கூறமுடியாது ஆனால் அங்குள்ளவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினர் போல் பொருளாதார ரீதியிலும் அடக்குமுறையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் ஐ.நா கூட தனது இலக்குகளை முன்னெடுத்துச்செல்ல இளையோரை எவ்வாறு அதில் பங்குகொள்ளச்செய்கிறது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச இளையோர் தினத்தின் இவ்வருட கருப்பொருளும் ஐ.நாவின் பிரகடனமும்.ஆனால் எமது இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினருக்கு இது பொருந்துமா என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதுள்ளது. நமது நாட்டின் பொருளாதார சூழல், யுத்த நிலைமை,அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றால் ஏற்பட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் அது தொடர்பில் இளைஞர் யுவதிகளின் ஏக்கம், போராட்டம் என்பன குறித்து புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்படி ஒரு நிலையில் இருக்கும் இளைஞர் கூட்டத்திடம் சென்று காலநிலை மாற்றத்திற்கு உதவுங்கள் என்றால் என்ன நடக்கும் ? இச்சந்தர்ப்பத்தில் நாம் ஐ.நாவை குற்றம் கூறவில்லை. மாறாக பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையும் இளையோரும்இலங்கையின் மொத்த சனத்தோகையில் கால் பங்கினர் இளையோராவர்.இளையோரை எந்த வயதுக்குள் அடக்கலாம் என்பது பல நாடுகளுக்கும் உள்ள ஒரு தடுமாற்றம்.எனினும் 1529 வயதுக்குட்பட்டோரே இளையோர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கணக்கு. இளைஞர் யுவதிகள் இலங்கையின் அபிவிருத்தியில் எந்தளவிற்கு பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கல்வி கற்று பட்டதாரிகளாகியும் வேலையில்லாதவர்களின் நிலையும் கணக்கிலெடுக்கப்படவேண்டியதொன்று. இவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை நாம் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அவதானித்துக்கொண்டு தான் வருகிறோம் ஆனால் என்ன பயன்? இறுதியில் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு நல்காது இருக்கும் ஒரு கூட்டம் என்ற பெயர் தான் இவர்களுக்கு கிட்டப்போகின்றதா என்று கவலையுடன் நினைக்கத்தோன்றுகின்றது. இதற்கு அரசாங்கங்களின் உரிய கொள்கை வகுப்பின்மையே என காரணங்காட்டப்படுகிறது. தொடர்ச்சியாக இவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டுக்கொண்டே வந்தால் இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்க காத்திருக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்வது? இவர்கள் கற்க கல்வி ஒரு சதவீதத்திற்கும் பயன்படாமல் போகப்போகின்றதா? 2006ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் படி இளைஞர் வேலை வாய்ப்பிற்கான தேசிய செயற்பாட்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன் பிரதான திட்டங்களில் ஒன்று 2010 ஆம் ஆண்டில் வேலையில்லாத இளையோர் தொகையை 15 வீதமாக குறைத்தல்,இதுவே 2015ஆம் ஆண்டில் 8 வீதமாக்கப்படவேண்டும் என்பதாகும்.இந்த திட்டமானது ஐ.நாவின் YEN எனப்படும் பூகோள இளையோர் வேலைவாய்ப்பு வலைப்பின்னல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அமுல் படுத்தப்பட்டதொன்றாகும். இதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் உலக வங்கியும் ஆதரவு வழங்குகின்றன. 2007ஆம் ஆண்டின் படி இலங்கையில் வேலையில்லா இளையோரின் சதவிகிதம் 20 ஆகும். ஆக இன்னுமொரு சர்வதேச இளையோர் தினமும் வந்து போய்விட்டது,நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?இத்திட்டத்தை ஒரேடியாக நாடு முழுவதிலும் செயற்படுத்த முடியாது எனக்கூறப்படுகிறது. சர்வதேச தொழில் ஸ்தாபனம் நாடு முழுவதிலும் முதலில் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது? 2008 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி இலங்கையில் வேலையற்றிருப்போரில் அரைவாசி பேர் இளையோர் தானாம்.இது சதவிகிதத்தில் 41 ஆகும். இவர்கள் 1524 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்பது இன்னுமொரு சோகம்.
வேலையில்லாதோரின் கல்வித்தராதரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் வேலை வாய்பொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்கல்வி முறை இல்லாதது ஒரு பிரதான குறைபாடாகத்தெரிகிறது. வேலையில்லாதிருப்பவர்களில் க.பொ.த சா/ தரத்திற்கு குறைந்த தகைமை கொண்டோர் 3.2 வீதமாகும். க.பொ.த சா/தரம் கொண்டவர்கள் 6.4 வீதம்ஆனால் வேலையில்லா இளையோரில் உயர் தரம் மற்றும் அதற்கு மேலான தகைமைகளை கொண்டோர் 11 வீதமென் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அப்படி பார்க்கும் போது வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் நியாயமாகவே படுகின்றது.
கல்வி கற்று வீட்டில் இருக்கும் யுவதிகள்இலங்கையில் வேலையில்லாதோர் தொகையில் இளைஞர்களின் தொகையை விட (14.9%) இருமடங்கு இளம் யுவதிகளின் தொகையாகும் (28.4%வயது 1524) இது ஒரு பாரதூரமான விடயம்.இதில் குறிப்பிட்டுக்கூறவேண்டிய மற்றுமோர் விடயம் ஒரே பணியே இருபாலருக்கும் கொடுக்கப்பட்டாலும் பெண்ணிற்கு வழங்கப்படும் ஊதியத்தொகை குறைவாகும்.இதனால் இவர்களில் பலர் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். நிர்மாணம் மற்றும் விவசாயத்தோட தொடர்புபட்ட பல தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கென்று இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்று இளையோர் அரசாங்க வேலைகளை மட்டும் எதிர்ப்பார்த்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.ஆனால் அதை விட ஊதியம் கிடைக்கும் தனியார் துறை வேலைக்கு ஏற்றவாறு தங்களை உருவாக்கிக்கொள்ள பல தடைகள் உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்ததாக முன்னெடுத்துச்செல்லப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் இவர்களின் கனவை நனவாக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசாங்க தொழில் வாய்ப்புகள் மூலம் ஏனைய சலுகைகளையும் பெறலாம் ஆனால் தற்போதுள்ள இளையோர் ஊதியம் மற்றும் தொழில் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்கள் அல்ல என்கின்றது ஒரு ஆய்வு. எனினும் அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தைக்கு உள் நுழைய காத்திருக்கும் இளையோரின் எண்ணிக்கையைப்பார்த்து சரி அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதில் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம். இல்லாவிடின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் போராட்டத்தில் தான் காலத்தை கடத்த வேண்டியேற்படும்.
Thursday, October 9, 2008
தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள்(1)
தொடர்ந்து வரும்
Wednesday, October 8, 2008
கொட்டிக்கிடக்கும் அழகு
வேதனை குறிப்பு: இங்கு காணப்படும் சென்கிளயர் (St.Clair) நீர் வீழச்சி இன்னமும் சிறிது காலத்தில் முற்றாக மறைந்து விடும் காரணம் இங்கு அமைக்கப்பட்டு வரும் கொத்மலை நீர் மின் திட்டம்.
எங்களூர் மாரியம்மன் ( ஒரு வேதனை குறிப்பு)
Tuesday, October 7, 2008
எதிர் கேள்வி(சிறுகதை)
‘லஷ்மன் அதிரன்’ பெயர் கூப்பிடப்பட்டது.சரி வருவது வரட்டும் என்று எழுந்து சென்று கதவை இலேசாக திறந்தான் அதிரன்.‘மே ஐ கம் இன் சேர்?
‘யெஸ்’
ஒற்றை வார்த்தை பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.உள்ளே மூவர். மைதான தலையோடு நடுநாயகமாக வீற்றிருப்பவர்தான் பெரியவரோ? மூவருக்கும் வணக்கம் செலுத்தினான்.
‘ப்ளீஸ் சிட்’
பைலை வாங்கி புரட்டினார் நடுநாயகம்.பின்பு சற்று உதட்டை பிதுக்கினார் அதிரனை நோக்கினார்.
ம்ம்ம்…மிஸ்டர் அதிரன் நீங்க தான் இந்த நேர்முகத்தேர்வில் கடைசி நபர் அப்படித்தானே?
முதலாவதாக வந்தவனிடம் இதே கேள்வியை மாற்றிகேட்டிருப்பார்களோ என்று நினைத்த அதிரன் ஆமாம் சார் என்றான்.
‘ஓ.கே இப்போ கேள்வி நேரம்’
படபட வானான் அதிரன்.
முடிந்தது அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறியாயிற்று ஆனால் என்ன பிரயோசனம் தனது முன்னோர்கள் (அது தாங்க அவனுக்கு முன் உள்ளே வந்து போனவங்க) கூறியது போல் தான் இருந்தது. விண்ணப்பித்திருக்கும் வேலை தொடர்பில் ஒரு கேள்வி கூட இல்லையே. அட மைதான தலை உதட்டை வேறு பிதுக்குகின்றதே?
‘என்ன அநியாயம் சார் இது முதலிலேயே சொல்லியிருந்தால் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லையே எங்களையெல்லாம் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா? உங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவு செய்து விட்டு காலங்கடத்துவதற்காகத்தான் இந்த இண்டர்வியூவா’
வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டான் அதிரன்.
‘நாங்கள் அறிவிக்கிறோம்’ ரெண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியது தான்
‘எக்ஸ்கியூஸ்மி சார் மே ஐ ஆஸ்க் எ கொய்சன்?’
சற்று புருவம் உயர்த்திய நடுநாயகம் ‘யெஸ்’ என்றது.
‘சார் தப்பா நினைக்காதிங்க எனக்கு ஒரு சந்தேகம் இந்த வேலைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் சம்பந்தமே இல்லையே சார்? இருந்தும் நான் அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறினேன் ஆனால் அது முக்கியம் இல்லை, நீங்கள் ஏன் இப்படி சம்பந்தமில்லாம கேள்வி கேட்டீங்க அது தான் எனக்கு தேவை?
‘மிஸ்டர் அதிரன் இங்கு வந்த 15 பேரில் 9 பேர் நாங்க கேட்ட சம்பந்தமில்லாத எல்லா கேள்விக்கும் பதில் சொன்னாங்க அதில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்களைப்போல யாரும் இப்படி எங்களை கேள்வி கேட்கவில்லை’
புன்முறுவலோடு கூறிய அவர் அருகிலிருந்த இரண்டு பேரையும் பார்த்து கண் சிமிட்டினார்.
என்ன நடக்கின்றது இங்கே?
‘மிஸ்டர் அதிரன் வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணங்கள் உரிய விதத்தில் பொது மக்களிடம் போய் சேருகின்றதா என்பதை கண்காணிக்கும் வேலை இது .பல ஊழல்கள் நடக்க இடமுண்டு. பலரிடம் பல கேள்விகளை கேட்டு விசாரணைகளை நடத்த வேண்டும் ஆகையால் சொன்னதை மட்டும் செய்து கொண்டிராமல் விழிப்பாக இருக்கவேண்டும் எதிர் கேள்விகள் கேட்க தைரியம் வேண்டும் அப்படியான ஒருவரை தெரிவு செய்யத்தான் இப்படி ஒரு வித்தியாச இண்டர்வியூ.நாங்க எதிர்ப்பார்த்த யாரும் எங்களை ஏன் சம்பந்தமில்லாம கேள்வி கேட்கிறிங்க என்று கேட்க திரணியற்று முணுமுணுத்து விட்டு போய்விட்டனர்.
பட் யூ?
அதே புன்முறுவல்
‘யெஸ்’ எங்க முயற்சி வீணாகவில்லை கடைசி ஆளா வந்தாலும் நாங்க எதிர்ப்பார்த்த தகுதி உங்ககிட்ட தான் இருக்கு யூ ஆர் அப்பாய்ண்ட்டட்’