Friday, October 14, 2011

கல்வித்துறையில் அதிகரித்துள்ள இலஞ்ச ஊழல் செயற்பாடுகள்







இலங்கையில் பதிவாகும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் 70 வீதத்திற்கும் மேலானவை கல்வித்துறையோடு சம்பந்தப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளமையானது இலங்கை கல்வித்துறையில் எந்தளவிற்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.கூடுதலாக பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதிலேயே அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமாகவோ அல்லது பொருளாகவோ அதிபர்கள் இலஞ்சம் பெறுகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த கால முறைப்பாடுகளை பார்த்தால் இலங்கையைப்பொறுத்தவரை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் பொலிஸ் அதிகாரிகளாவும் , அரசாங்க திணைக்களங்களைச்சேர்ந்தவர்களாகவுமே இருந்துள்ளனர்.எனினும் அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ஊழல்களில் முதலாவது இடத்தை கல்வித்துறை பிடித்துள்ளது. சமுதாய மாற்றத்திற்கான ஒரே ஆயுதமாக கூறப்படும் கல்வித்துறையில் எட்ட வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க இப்போது எட்டியிருக்கும் இலக்கை பார்க்கும் போது வெட்கித்தலை குனிய வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவானது (Commission to Investigate Allegations of Bribery or Corruption) நாளாந்தம் 15 இற்கும் குறையாத கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தமக்கு கிடைப்பதாகத் தெரிவிக்கின்றது. இதில் கூடுதலாக முதலாமாண்டுக்கு மாணவர்களை சேர்க்கும் போது பாடசாலை அதிபர்கள் பெற்றோர்களிடம் இருந்து பணம் பெறுவது தொடர்பாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.பாலபட்டபெந்தி விளங்குகிறார். அண்மையில் இவர் கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட ஊழல் செயற்பாடுகள் பற்றி தனது விசனத்தையும் வெளிப்படுத்த தவறவில்லை.
இலஞ்சம் என்றால் என்ன?





இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி காலத்திலேயே இலஞ்சம் பெறல் வாங்குதல் குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில் கீழ் தண்டனை வழங்கப்படும் குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. (1883ஆம் ஆண்டிலிருந்து ) 1958 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் திணைக்களமாக நீதி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது.இலஞ்ச சட்டத்தை மீரும் வகையில் சட்ட விரோதமாக அவா நிறைவொன்றை கொடுத்தல், கேட்டல், பெற்றுக் கொள்ளுதல் அல்லது அவ்வாறு ,இலஞ்ச சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் செய்யப்படும் செயற்பாடுகள் ,இலஞ்சமாக கருதப்படும். இதே சந்தர்ப்பத்தில் ஊழல் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளதுஊழல் சம்பந்தமாக ,இலஞ்ச சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்பட்டுள்ளது. அதாவது அரச ஊழியர் ஒருவர் தனது பதவியின் பிரகாரம் தனக்கு பணிக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றும் பொது அரசுக்கு நடத்தை ஏற்படுத்துவதற்கு தனக்கு நன்மையை அல்லது வேறு ஒருவருக்கு நன்மையை அல்லது தீமையை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிந்து செயற்படுதல் ஊழலாகக் கருதப்படும்.
பாடசாலைகளில் இலஞ்சம்மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கும் போது ஒரு சில அதிபர்கள் தேசிய கல்விக்கொள்கைகளை மீறும் வகையில் ஒரு வகுப்பிற்கு அதிக மாணவர்களை அனுமதிக்கின்றனர். அச்சந்தர்ப்பத்தில் வெளி பிரதேச மாணவர்களை பிரபலமான நகர்ப்புற பாடசாலைகளுக்கு இந்த அதிபர்கள் உள்வாங்கும் போது அவர்களின் பெற்றோரிடமிருந்து இலஞ்சமாக பெருந்தொகை பணத்தை பெறுகின்றனர். மேலும் முதலமாண்டு மட்டுமின்றி உயர்தர அனுமதியிலும் அதிகமாக பணம் பெறுகின்றனர். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பணமாகப்பெற்றால் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் பொருளாகவும் இலஞ்சம் பெறும் முறை பல மலையக பாடசாலைகளில் நடைமுறையில் இருக்கின்றது. பாடசாலைக்கு புதிய அலுமாரி தேவை என மாணவர் அனுமதிக்கு வரும் பெற்றோரிடம் அதிபர் கூறுவார்.பின்னர் நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட தளபாட வர்த்தக ஸ்தாபனத்தை கூறி அங்கு பணம் செலுத்தும் படியும் தாம் அதை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறி பின்னர் குறிப்பிட்ட வர்த்தக ஸ்தாபனத்திற்குச் சென்று ஒரு தொகையை ஸ்தாபனத்திற்கு செலுத்தி விட்டு மீதியை வாங்கிக்கொண்டு வந்து விடுவார் அதிபர். ஒரு சில பாடசாலைகளில் அபிவிருத்திச்சங்க செயலாளர்களே இந்த பண வசூலிப்பு விடயத்தில் முன்னிற்கின்றனர்.இதன் காரணமாக பல வருடங்களாக ஒரே சங்க செயலாளர்களே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார்கள். பல அதிபர்கள் அபிருத்திச்சபை கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் இருப்பதும் இந்த பின்னணயிலே தான். பல பெற்றோர்களிடம் தளபாடங்கள் அலுமாரிகள் வாங்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு அதிபர்கள் வாங்குவதோ ஒரே அலுமாரியைத்தான்இதே வேளை பல பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்ட மாணவர்களை பணம் கொடுத்து சேர்ப்பதில் ஒரு சில அதிபர்களுக்கு உதவி ஆசிரியர்களாக செயற்படுகின்றனர். மேலும் தவணை முடியும் சந்தர்ப்பத்திலும் இடையில் பல வகுப்புகளுக்கு மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு சேர்க்கும் விடயம் பல பாடசாலைகளில் இடம்பெறுகிறது.

பெற்றோர்களின் அக்கறையின்மைதமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் தாம் இலஞ்சம் கொடுப்பதையும் அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதையும் வெளியில் கூறுவதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. இந்த காரணங்களினாலேயே பல அதிபர்கள் எவ்வித இடையூறும் இன்றி இலஞ்சம் பெற்று வருகின்றனர். இச்செயற்பாடுகளே இவர்களை ஊக்குவிப்பதாக இருக்கின்றது. இதே வேளை பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டிய வலயக்கல்வி காரியாலயங்களிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் ,ஊழல்கள் இடம்பெறுவதால் பாடசாலைகளைப்பற்றி கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மையாகும். தமக்கு தேவையானவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு சில வலயக்கல்வி பணிப்பாளர்களும் ,அதிகாரிகளும் கூட இலஞ்சம் பெறுவதை மறுப்பதற்கில்லை. இவர்களின் சிபாரிசுகளுடன் வரும் மாணவர்களை சேர்க்கும் அழுத்தத்திற்கும் சில நேர்மையான அதிபர்கள் உட்படுகின்றனர். ஆகவே கல்வித்துறை இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது பாடசாலைகளில் மட்டும் தங்கியிருக்கும் விடயமல்ல என்பதை பலரும் உணர்ந்து கொள்ளல் அவசியம்.
யார் குற்றச்சாட்டுக்கு உட்படுவர்? இலஞ்ச குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சரவை அமைச்சர்கள் , சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதித் தலைவர் , பிரதி அமைச்சர்கள் , மாகாண ஆளுனர்கள் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் , மாகாண, உள்ளுõராட்சி நிலையங்களின் அல்லது ,லஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டநிறுவனங்களில் நூற்றுக்கு 50 விதத்திற்கு மேற்பட்ட பங்குகள் அரசுடமையாகவுள்ள 1982ஆம் ஆண்டின் 17 ஆம் ,இலக்க கம்பனிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், ஆளுனர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், ஜூரி சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியும். இலஞ்ச சட்டத்தின் கீழ் ,இலஞ்சம் வாங்குவதைப் போல் ,இலஞ்சம் கொடுப்பதும் சமமான தண்டனைக்குரிய குற்றங்களாகும். என்ற போதிலும் ,இலஞ்சம் கொடுத்த நபர் முறைப்பாட்டாளராகும் சந்தர்ப்பங்களில் சட்டம் குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாக அல்லது ,இலஞ்சம் கேட்ட நபரின் சூழ்ச்சியால் சிக்கிய அப்பாவியாகவே கருதும்.இருந்த போதிலும் ஒருவர் ,இலஞ்சம் கேட்கும் போது அதைக் கொடுப்பதற்கு முன்பாக ,இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தல் காலச் சிறந்த செயற்பாடாகும்.
தண்டனைகள்இலஞ்சம் கேட்டல், ஏற்றுக் கொள்தல், கொடுத்தல் அல்லது ,இதில் ஏதும் ஒன்றைச் செய்ய எத்தனித்தல், சூழ்ச்சி செய்தல் போன்ற குற்றங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையுடன் ரூபா 5000 இற்கும் மேற்படாத தண்டப் பணம் அபராதமாக விதிக்கப்படும். ஏதும் ஆதனமொன்று ,இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொன்டதாக நிரூபிக்கப்படும் போது மேற் குறிப்பிட்ட தண்டனைக்கு மேலதிகமாக ,இலஞ்சத்தால் பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்யப்பட்ட ஆதனத்தின் பெருமதிக்கு குறையாத அல்லது மும்மடங்கிற்கு குறையாத தொகையைத் தணடப் பணமாக நியமித்தல் அல்லது குறிப்பிட்ட ஆதனத்தை அரசுடமையாக்குதல்.
ஊழல் குற்றச்சாட்டுக்கான தண்டனைகள்ஊழல் குற்றமொன்றில் குற்றவாளியாக்கப்படின் 10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்குச் சிறைத் தண்டனையும் ஒரு ,இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அல்லது மேற் கூறிய ,இரண்டும் வழங்கப்படும்.தனது தொழிலை அல்லது பதவியை இழப்பதோடு ஓய்வூதியம் பணிக் கொடைக்கான உரித்தும் ,ரத்துச் செய்யப் படும்.பாராளுமன்றத் தேர்தல் எனின் 7 ஆண்டுகளுக்கும், உள்ளுõராட்சி மன்றத் தேர்தல் உனில் 5 ஆண்டுகளுக்கும் வாக்காளராக பதிவு செய்வதற்கு, வாக்களிப்பதற்கு, தெரிவு செய்யப்படுவதற்கும் தகைமையை இல்லாதாக்கலாம்.அரசின் அல்லது ,இலஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல் படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொழில் ஒன்றை அல்லது பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை முற்று முழுதாக ,இழத்தல் என்பன அடங்கும். கல்வித்துறைக்கு அப்பாற்பட்டு பல அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுவதை அனைவரும் அறிவர். மேலும் தனியார் நிறுவனங்கள் மீதான இலஞ்ச செயற்பாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் இடமில்லை. அண்டைய நாடான இந்தியாவில் தலை விரித்தாடும் ஊழல்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்று விட்டன. எனினும் சமூக அக்கறை என்ற விடயத்தில் கல்வி சமுகத்திற்கு பாரிய கடப்பாடு உள்ளது.எதிர்கால இலங்கையை கருத்திற்கொண்டு தமது இலக்குகளை இவர்கள் உணர்ந்து கொள்வார்களாக.

வெளிநாட்டு பறவைகளின் மோகத்தால் உள்ளூர் சிட்டுகுருவிகளை மறந்து விடுகிறோம்






காய்கறிகளில் இரசாயனம் கலந்த விஷங்களே இன்று உள்ளன.ஆகவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று பல மனிதர்கள் விஷமிகளாகி விட்டனர்.






தர்மம் குன்றி வரும் இக்காலகட்டதில் மக்கள் தங்களுக்கு முடிந்த வரை தான தருமங்கள் செய்ய வேண்டும். முக்கியமாக அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படுவோருக்கு அன்னம் வழங்க வேண்டும். தவங்களில் காலத்தை ட்டாமல் தரும நெறி சிந்தனையில் கவனத்தை திருப்ப வேண்டும். எவர் ஒருவர் தருமத்தை கடமையாக நினைத்து செய்கிறாரோ அந்த தருமம் அவரை காப்பாற்றும் இதுவே கீதையின் தத்துவம் என்கிறார் பிரம்மரிஷி காகபுஜண்டரின் சீடராகிய பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் இராஜ்குமார் குருஜி அவர்கள். மக்கள் நலன் கருதி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சித்தர்கள் மகா யாகத்தின் போது பக்தர்களுக்கு அருளுரை வழங்கிய போது அவர் தரும நெறி சிந்தனைகளை பக்தர்கள் மனதில் விதைத்தார். மிகவும் எளிமையாகவும் அதே நேரம் மனதில் பதியும் வண்ணமும் அற்புதமான பல கருத்துக்களை அன்றைய தினம் அன்னை சித்தர் அவர்கள் வெளிப்படுத்தினார். அவரின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.
சக்தி பிறக்கும் நகரிலிருந்து ஒரு யாகம்அட்டன் மாநகரில் இந்த யாகத்தை நடத்துவது என்பது எமது கைகளிலோ அல்லது இந்த யாகத்தை ஒழுங்கு செய்தவர்களின் கைகளிலோ இல்லை. இது சித்தர்களின் எண்ணம் போல நடக்கிறது என்பதே உண்மை. காரணம் இந்த அட்டன் மாநகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மஸ்கெலியா நகருக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது .இங்கு அமைந்திருக்கும் நீர் மின் நிலையங்களை அறிந்தேன். ஆஹா, இங்கிருந்து தான் இலங்கையின் பல பாகங்களுக்கு மின்சாரம் எனும் சக்தி செல்கிறது,மின்சாரத்தின் மூலம் பல இடங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஆகவே இது சக்தி உருவாகும் பிரதேசம். இங்கிருந்து யாம் செய்யும் இந்த யாகத்தின் பயன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றடையும் .இது உண்மை. உள்ளன்போடு 210 சித்தர்களை இங்கு வரவழைத்து செய்யப்படும் இந்த யாகத்தில் எவரும் இலகுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது. ஆகவே இங்கு வந்திருக்கும் அனைவரும் அனுக்கிரகம் பெற்றவர்கள்.
தானத்தின் பயன்
எத்தனை கோடி செல்வங்களை அள்ளிக்கொடுத்தாலும் எந்த வகையில் உதவிகளை வழங்கினாலும் அன்னதானத்திற்கு ஈடான தானம் எதுவும் கிடையாது இது சித்தர்களின் வாக்கு. ஆகவே அன்பர்களே உங்களுக்கு முடிந்த வரை அடுத்தவருக்கு அன்னதானம் செய்யுங்கள். இது கலியுகமாகும். படித்தவர்கள் படிக்காதவர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் அனைவருக்கும் வழிகாட்டுபவர்களாக சித்தர்கள் விளங்குகிறார்கள். சித்தர்கள் எந்த உருவிலும் நடமாடுவார்கள். பிச்சைகாரர்களாக ,பைத்தியம் பிடித்தவர்களாகக்கூட இருக்கலாம். எவரையும் அலட்சியம் செய்யாதீர்கள். எந்த சித்தராவது உங்களிடம் யாசகம் பெற்று விட்டால் நீங்கள் இந்த பிறவிப்பயனை அடைவீர்கள்.
உங்களிடம் வருபவர்கள் யார்?இது கலியுகம் என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன்.இக்காலத்தில் செல்வந்தர்கள்,அரசியல்வாதிகள்,அதிகாரம் மிக்கவர்கள் எவரும் சாதாரண மக்களை தேடி வருவதில்லை மாறாக மக்களே அவர்களை தேடிப்போக வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. ஆனால் சித்தர்கள் அப்படியல்ல அவர்கள் சாதாரண மக்களிடத்தே வருவார்கள் அனுக்கிரகம் செய்வார்கள். ஆரம்பத்தில் 18 ஆக இருந்த சித்தர்களின் எண்ணிக்கை மீண்டும் மீண்டும் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்து 210 அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள். சித்தர்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். உயிரினங்களிடம் அன்பு செலுத்துபவர்கள். ஆகவே எந்த உயிரையும் வதைப்பதோ அதை உணவாக உண்ணுவதோ சித்தர் வழிபாட்டுக்கு ஏற்பாகாது.
மோகம்யாருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்பது சிலருக்கு விளங்குவதில்லை. பல நாடுகளைச்சேர்ந்த பல அழகிய பறவைகளைப்பற்றி பேசுகிறோம்,ஆனால் எமக்கு அருகாமையில் இருந்து அடிக்கடி கீச்சிடும் அந்த சிட்டுகுருவிகளை மறந்து விடுகின்றோம். அருகில் உள்ள அந்த சிட்டுகுருவிகளுக்கு உணவிடுங்கள்,அருகிலுள்ள உயிர்களை ,மனிதர்களை நேசியுங்கள். தானம் செய்யும் போது உள்ளன்போடு செய்யுங்கள். பலனை எதிர்ப்பார்த்து செய்யாதீர்கள்.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர் சிவபாக்கியர் கூறியிருக்கிறார். ஆக நாதன் எங்கிருக்கிருக்கிறார் என்ற சூட்சுமம் உங்களுக்கு விளங்க வேண்டும். நீங்கள் நாதனாக இருக்கிறீர்கள் ஆக உங்கள் மனதிலிருக்கும் தெய்வாம்சம் விழிப்புற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் ? சித்தர்களை நாடுங்கள்.
ஓம் ஜெய் குருவே துணை என்ற மந்திரத்தை கூறுங்கள்
அப்போது உங்களுக்குரிய குரு தென்படுவார் அவரை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்
விஷமும் விஷமிகளும்இன்றைய உலகம் மிகவும் உஷ்ணம் நிறைந்தது. விஞ்ஞானிகள் கூட மெய்ஞானத்தின் தெளிவை பெறாது அதை அறிய விரும்பாது உலக மாறுதல்களுக்கு பல காரணங்களை கூறி வருகின்றனர். உஷ்ணம் காரணமாகவே இன்று மனிதனுக்கு பல நோய்கள் உருவாகின்றன. நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவும் ஒரு மூலிகை தான் .எல்லா காய்கறிகளும் மூலிகைகளே. ஆனால் இன்று எல்லா காய்கறிகளிலும் விஷம் நிரம்பியே உள்ளது. வேதியல் இரசாயனங்கள் கலந்த காய்கறிகளையே நாம் இன்று உண்கிறோம். எனவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று மனிதர்களில் பலர் விஷமிகளாகி விட்டனர். ஆனால் உலகத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சித்தர்கள் கூறி விட்டனர். 2010 இற்குப்பிறகு இந்த உலகத்தில் இயற்கை சீரழிகள் எப்படியெல்லாம் இடம்பெறும் என்பதை பிரும்மரிஷி காகபுஜன்டர் கூறி விட்டார்.