Friday, December 5, 2008

இது உண்மையா?



நீண்ட நாட்களுக்குப்பிறகு பதிவொன்றை இட சந்தர்ப்பம் கிடைத்தாலும் இப்படியும் நடக்கின்றதா என்று அதிர்ச்சியிலும் பயத்திலும் எம்மை உறைய வைக்கும் விடயமொன்று தான் கிடைத்தது. எனது தோழி டயனா ஜோர்ஜ் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலின் உபயம் தான் இந்த விடயம். ரஷ்யாவின் ஒரு இடத்தில் மனித உறுப்புகளை தரம்பிரித்து அதை தேவைக்கேற்றாற்போல் விற்பனை செய்யும் ஒரு மனித பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறதாம்.சரி இந்த மனித பாகங்களைப்பெற உடம்புகளை எங்கு இவர்கள் பெறுகிறார்கள்? மது அருந்தி விட்டு வீதி விபத்துக்களில் மரணமாவோர், தனியாக வசித்து வருவோரில் குளிர்காலங்களில் மரணிப்போர், காரணம் குறிப்பிட முடியாத மரணங்களில் சிக்குவோர், உரிமை கோரப்படாத அனாதை சடலங்கள், இவ்வாறு இந்த தொழிற்சாலைக்கு கிடைக்கும் உடல்களின் பாகங்களில் சில பல்கலைகழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றதாம்.கால் எலும்புகள் விசேடமாக அயர்லாந்து மற்றும் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.காரணம்? இவ்வெலும்புகளின் மூலம் தயாரிக்கப்டும் ஒரு வகை பசை தான் பற்குழிகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றனவாம். இந்த பசை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானதாகும்.ஆகவே நண்பர்களே நீங்கள் உங்கள் குடும்பம் சகிதம் வெளிநாடுகளுக்குச்செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறது இந்தத்தகவல். இலங்கையில் கூட அண்மையில் குளியாபிட்டிய பகுதியில் இறந்து போன ஒரு குழந்தையின் உடம்பிலிருந்து பல உள்ளுறுப்புகள் மாயமாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனக்கு வந்த இந்தப்படங்களை பார்த்தபோது ஏதோ கிராபிக்ஸ் வேலை போன்றும் தெரியவில்லை.எவ்வளவு ஆறுதலாக வேலைப்பார்க்கின்றார்கள் பாருங்கள். இன்னொரு சந்தேகமும் தோன்றுகிறது.முக்கியமான உறுப்பொன்று தேவையென பெருந்தொகை பணம் தருவதாக எவரும் இந்த தொழிற்சாலைக்கு ஓடர் கொடுத்தால் இங்கு பணியாற்றுபவர்களை கொலை செய்து விட்டு அதை எடுத்தாலும் யாருக்குத்தெரியப்போகிறது?