Monday, September 26, 2011

உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயம்



உலகத்தில் மிகப்பெரிய பௌத்த ஆலயம் அமைந்துள்ள நாடானது உலகில் அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியா என்பது பலருக்கு தெரியாத விடயம் தான். ஆனால் அது தான் உண்மை.தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தம் வேரூன்றி இருந்த காலத்திலேயே அதாவது எட்டாம் நூற்றாண்டிலேயே போராபுதூர் என்ற இந்த பிரமாண்டமான பௌத்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.இந்த பௌத்த ஆலயமானது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொன்டது. இவை, 2,672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட




Sir Thomas Stamford Bingley Raffles




, 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமர்ந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. பௌத்தருக்கான ஆலயமாக மட்டுமல்லாது யாத்திரைக்குரிய இடமாகவும் உள்ளது. புனிதப்பயணம் செய்வோர், இதன் அடியில் தொடங்கி, இதைச் சுற்றியபடியே மூன்று தளங்களுõடாக மேலேறுவர். இம் மூன்று தளங்களும்,



கா
மதாது
, ரூபதாது, அரூபதாது எனப்படும் பௌத்த அண்டக் கோட்பாட்டில் கூறியுள்ளவாறு மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. இந்தப் பயணத்தின்போது, புனிதப்பயணிகள், 1,460 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுவர்கள், காப்புச் சுவர்கள் ஆகியவற்றுடன் அமைந்த படிக்கட்டுகள், நடைவழிகள் என்பவற்றினூடாகச் செல்வர் என்பது முக்கிய விடயம்.
வரலாறுபோராபுதூர் பௌத்த ஆலயமானது கிறிஸ்துவுக்குப்பின் 800 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தத்தை பரப்புவதில் முன்னின்ற சைலேந்திர மன்னர் வம்சம் மற்றும் சுமாத்ரா பகுதியில் ஆட்சி செலுத்தி ஸ்ரீ விஜயன் ஆகியோரின் காலப்பகுதிகளே இவை. இம்மன்னர்களின் இருவருமே இவ்வாலயத்தை நிர்மாணிப்பதில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர்.இந்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் சுமார் 75 வருடங்களாக இடம்பெற்றுள்ளன. சைலேந்திர மன்னர் வம்சத்தில் வந்த சமரதுங்காவின் ஆட்சி காலத்தில் இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இக்காலகட்டத்திலேயே சுமாத்ரா ,ஜவா பகுதிகளில் இந்து சமயத்தை பரப்பும் வகையில் இந்து ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன என வரலாற்றாசிரியர்களும் தொல்லியலாளர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் சைலேந்திர வம்சமானது ஆரம்பத்தில் மகாயான பௌத்தத்தில் முனைப்பு காட்டினாலும் பின்னர் இந்து மதத்தில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் இதே காலப்பகுதியில் போராபுதூருக்கு 10 மைல் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிவன் ஆலயம் தான் சிவபிரம்மனன். சைலேந்திர மன்னர்களின் ஆதரவில்லாமல் இவ்வளவு பிரமாண்ட சிவன் ஆலயத்தை அமைத்திருக்க முடியாது என்பது வரலாற்று குறிப்புகளின் தகவல்.
மறைந்து கிடந்த ஆலயம்14 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் பௌத்த மற்றும் இந்து சாம்ராஜ்யங்கள் னீழ்ச்சியுற்றன.இதற்கு காரணம் இஸ்லாம் தலை தூக்கியதாகும். இதன் காரணமாக இந்து ,பௌத்த ஆலயங்களின் பராமரிப்பு கைவிடப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் காரணமாக எரிமலை சாம்பரால் மேற்படி போராபுதூர் ஆலயம் முற்றாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்று. பின்னர் காடுகள் மூடியதால் கிட்டத்தட்ட இப்பிரதேசமே மறைந்து விட்டது. இதை வரலாறுகள் தான் சொல்கின்றன.எனினும் இவ்வளவு பிரமாண்ட ஆலயமும் அதன் சுற்றுபுறமும் மறைந்தமையை வரலாற்று மர்மம் என்கின்றனர் தொல்லியலாளர்கள்.மீண்டும் கண்டி பிடிப்பு 1811 இலிருந்து 1816 வரை ஜவாவானது பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இக்காலகட்டத்தில் ஜவாவின் கவர்னராக இருந்தவர் சேர் தோமஸ் ஸ்டென்போர்ட் பிங்லே ரபல்ஸ்ஸ் என்பவராவார்.( Sir Thomas Stamford Bingley Raffles) இவர் ஜாவாவின் வரலாற்றை அறிய மிகவும் அக்கறை காட்டினார். இதற்காக நெருந்தூர பயணங்களை மேற்கொண்டார். கோர்னலியஸ் என்ற டச்சு பொறியியலாளரை தலைமைத்துவமாக கொண்டு 200 பேர் கொண்ட குழுவினர் போராபுதூர் பகுதியை சுத்தம் செய்து மீண்டும் இந்த ஆலயத்தை கண்டு பிடித்தனர்.பின்பு முழுமையான ஆலயத்தை கண்டு பிடிக்க சுமார் 50 ஆண்டுகள் வரை சென்றன. மரங்களை வெட்டி இவ்விடத்தை சுத்தம் செய்வது இலகுவாக இருக்க வில்லை. இந்தோனேசிய அரசும், யுனஸ்கோவும் இணைந்து செயற்படுத்திய பெரிய அளவிலான மீளமைப்புத் திட்டம் ஒன்று 1975 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்புகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் பலரை திகைக்க வைக்கின்றன. உச்சியில் அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தர் சிலையானது தர்ம சக்கர முத்திரையடன் உள்ளது. வாயிலில் அமைக்கப்பட்டுள்ள காவற்சிங்க சிலைகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் என்பன அதிசயிக்க வைக்கின்றன. கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் புடைப்புச்சிற்பங்களும் இந்த ஆலயத்தை இன்னும் மதிப்பால் உயர்த்துகிறது.உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை பௌத்த யாத்ரீகர்கள் மற்றும் உல்லாசப்பயணிகள் விரும்பி வருகை தரும் இடமாகவும் இது விளங்குகிறது.