
உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்
நாமும் அப்படித்தான் நினைத்தோம்
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்
ஆனால் இரவுகள் நரகம்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்
ஆனால் உன்னை நான்…


இன்று உலகின் பல நாடுகள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்விச்செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.இதற்குக்காரணம் பூகோளமயமாக்கத்தின் விளைவு தான் என்றால் மிகையில்லை. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்தருக்கும் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்படும் என்பதே நிதர்சனம்.
அழித்தல்,சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,ஜனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,பால் சமத்தவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல்,சமாதானம் மற்றும் ஜனநாயகம் என பல விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம்.ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றது. எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்,மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.
* இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது?
‘காலநிலை மாற்றமானது இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த பூமி பந்தை பாதுகாப்பான எவ்வித சூழல் பாதிப்புகளும் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுத்துச்செல்ல இளைஞர்கள் தமது சக்தியை முதலீடு செய்ய முன் வரவேண்டும், காலநிலை மாற்றங்குறித்து விழிப்புணர்வை பெறவேண்டும்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள இளையோர்,குறிப்பாக இளம்யுவதிகளும் பெண்களும் விவசாயம், உணவு, நீர்,விறகு சேகரித்தல் என்பவற்றில் கூடுதல் பங்காற்றுகின்றனர். ஆனால் எதிர் காலத்தில் இதற்கு பற்றாக்குறை நிலவும் அபாயம் அதிகமாகவே உண்டு.ஆகவே புதிய தொழில்நுட்பம் மற்றும் பழக்கவழக்கங்களை (கல்வியறிவு) கொண்டு இளையோர் எதிர்கால அபாயமான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் இப்போதிருந்தே தமது பங்களிப்பை நல்க வேண்டும்’
பான் கீன் மூன் (செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை)
சர்வதேச இளையோர் தினமான ஓகஸ்ட் 12 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தனது விசேட அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்களின் சாரமே இது.அவர் ஏன் காலநிலை மாற்றம் குறித்து உலக வாழ் இளையோருக்குக்கூறியுள்ளார்? காரணம் இல்லாமலில்லை. இவ்வாண்டு அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச இளையோர் தினத்தின் பிரதான கருப்பொருள் என்ன தெரியுமா? ‘ இளையோரும் காலநிலை மாற்றமும் ; செயற்படுத்துவதற்கன தருணம் (YOUTH AND CLIMATE CHANGE: TIME FOR ACTION) என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் வருடாவருடம் குறிப்பிட்ட ஒரு கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அவ்வருடம் செயற்றிட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும். சரி இதை ஏன் இச்சந்தர்ப்பத்தில் கூற வந்தேன் என்கிறீர்களா? ஐக்கிய நாடுகள் சபையானது தனது மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளுக்கேற்பவே திட்டங்களை முன்னெடுத்துச்செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அங்குள்ள நாடுகளுக்கும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே நோக்கு. ஆனால் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சினை வேலையின்மையாகும். இது ஒரு பூகோள பிரச்சினை என ஐ.நாவும் ஏற்றுக்கொள்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை இல்லை என்று கூறமுடியாது ஆனால் அங்குள்ளவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினர் போ
ல் பொருளாதார ரீதியிலும் அடக்குமுறையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் ஐ.நா கூட தனது இலக்குகளை முன்னெடுத்துச்செல்ல இளையோரை எவ்வாறு அதில் பங்குகொள்ளச்செய்கிறது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச இளையோர் தினத்தின் இவ்வருட கருப்பொருளும் ஐ.நாவின் பிரகடனமும்.ஆனால் எமது இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினருக்கு இது பொருந்துமா என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதுள்ளது. நமது நாட்டின் பொருளாதார சூழல், யுத்த நிலைமை,அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றால் ஏற்பட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் அது தொடர்பில் இளைஞர் யுவதிகளின் ஏக்கம், போராட்டம் என்பன குறித்து புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்படி ஒரு நிலையில் இருக்கும் இளைஞர் கூட்டத்திடம் சென்று காலநிலை மாற்றத்திற்கு உதவுங்கள் என்றால் என்ன நடக்கும் ? இச்சந்தர்ப்பத்தில் நாம் ஐ.நாவை குற்றம் கூறவில்லை. மாறாக பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையும் இளையோரும்இலங்கையின் மொத்த சனத்தோகையில் கால் பங்கினர் இளையோராவர்.இளையோரை எந்த வயதுக்குள் அடக்கலாம் என்பது பல நாடுகளுக்கும் உள்ள ஒரு தடுமாற்றம்.எனினும் 1529 வயதுக்குட்பட்டோரே இளையோர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கணக்கு. இளைஞர் யுவதிகள் இலங்கையின் அபிவிருத்தியில் எந்தளவிற்கு பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கல்வி கற்று பட்டதாரிகளாகியும் வேலையில்லாதவர்களின் நிலையும் கணக்கிலெடுக்கப்படவேண்டியதொன்று. இவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை நாம் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அவதானித்துக்கொண்டு தான் வருகிறோம் ஆனால் என்ன பயன்? இறுதியில் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு நல்காது இருக்கும் ஒரு கூட்டம் என்ற பெயர் தான் இவர்களுக்கு கிட்டப்போகின்றதா என்று கவலையுடன் நினைக்கத்தோன்றுகின்றது. இதற்கு அரசாங்கங்களின் உரிய கொள்கை வகுப்பின்மையே என காரணங்காட்டப்படுகிறது. தொடர்ச்சியாக இவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டுக்கொண்டே வந்தால் இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்க காத்திருக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்வது? இவர்கள் கற்க கல்வி ஒரு சதவீதத்திற்கும் பயன்படாமல் போகப்போகின்றதா? 2006ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் படி இளைஞர் வேலை வாய்ப்பிற்கான தேசிய செயற்பாட்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன் பிரதான திட்டங்களில் ஒன்று 2010 ஆம் ஆண்டில் வேலையில்லாத இளையோர் தொகையை 15 வீதமாக குறைத்தல்,இதுவே 2015ஆம் ஆண்டில் 8 வீதமாக்கப்படவேண்டும் என்பதாகும்.இந்த திட்டமானது ஐ.நாவின் YEN எனப்படும் பூகோள இளையோர் வேலைவாய்ப்பு வலைப்பின்னல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அமுல் படுத்தப்பட்டதொன்றாகும். இதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் உலக வங்கியும் ஆதரவு வழங்குகின்றன. 2007ஆம் ஆண்டின் படி இலங்கையில் வேலையில்லா இளையோரின் சதவிகிதம் 20 ஆகும். ஆக இன்னுமொரு சர்வதேச இளையோர் தினமும் வந்து போய்விட்டது,நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?இத்திட்டத்தை ஒரேடியாக நாடு முழுவதிலும் செயற்படுத்த முடியாது எனக்கூறப்படுகிறது. சர்வதேச தொழில் ஸ்தாபனம் நாடு முழுவதிலும் முதலில் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது? 2008 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி இலங்கையில் வேலையற்றிருப்போரில் அரைவாசி பேர் இளையோர் தானாம்.இது சதவிகிதத்தில் 41 ஆகும். இவர்கள் 1524 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்பது இன்னுமொரு சோகம்.
வேலையில்லாதோரின் கல்வித்தராதரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் வேலை வாய்பொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்கல்வி முறை இல்லாதது ஒரு பிரதான குறைபாடாகத்தெரிகிறது. வேலையில்லாதிருப்பவர்களில் க.பொ.த சா/ தரத்திற்கு குறைந்த தகைமை கொண்டோர் 3.2 வீதமாகும். க.பொ.த சா/தரம் கொண்டவர்கள் 6.4 வீதம்ஆனால் வேலையில்லா இளையோரில் உயர் தரம் மற்றும் அதற்கு மேலான தகைமைகளை கொண்டோர் 11 வீதமென் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அப்படி பார்க்கும் போது வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் நியாயமாகவே படுகின்றது.
கல்வி கற்று வீட்டில் இருக்கும் யுவதிகள்இலங்கையில் வேலையில்லாதோர் தொகையில் இளைஞர்களின் தொகையை விட (14.9%) இருமடங்கு இளம் யுவதிகளின் தொகையாகும் (28.4%வயது 1524) இது ஒரு பாரதூரமான விடயம்.இதில் குறிப்பிட்டுக்கூறவேண்டிய மற்றுமோர் விடயம் ஒரே பணியே இருபாலருக்கும் கொடுக்கப்பட்டாலும் பெண்ணிற்கு வழங்கப்படும் ஊதியத்தொகை குறைவாகும்.இதனால் இவர்களில் பலர் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். நிர்மாணம் மற்றும் விவசாயத்தோட தொடர்புபட்ட பல தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கென்று இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்று இளையோர் அரசாங்க வேலைகளை மட்டும் எதிர்ப்பார்த்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.ஆனால் அதை விட ஊதியம் கிடைக்கும் தனியார் துறை வேலைக்கு ஏற்றவாறு தங்களை உருவாக்கிக்கொள்ள பல தடைகள் உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்ததாக முன்னெடுத்துச்செல்லப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் இவர்களின் கனவை நனவாக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசாங்க தொழில் வாய்ப்புகள் மூலம் ஏனைய சலுகைகளையும் பெறலாம் ஆனால் தற்போதுள்ள இளையோர் ஊதியம் மற்றும் தொழில் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்கள் அல்ல என்கின்றது ஒரு ஆய்வு. எனினும் அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தைக்கு உள் நுழைய காத்திருக்கும் இளையோரின் எண்ணிக்கையைப்பார்த்து சரி அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதில் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம். இல்லாவிடின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் போராட்டத்தில் தான் காலத்தை கடத்த வேண்டியேற்படும்.
ஒரு நாள் சர்வதேச போட்டி, டெஸ்ட் இரண்டிலும் சந்தர்ப்பம் கிடைத்து விளையாடுவதற்கு வீரர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வித்தியாசமாக கையாளப்படும் என்பதை பலரும் அறிந்திருப்பர்.சரி விடயத்திற்கு வருவோம். டெஸ்ட் போட்டி ஒன்றில் கூட விளையாடாது தொடர்ச்சியாக அதிக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் யார் தெரியுமா? அவுஸ்திரேலிய அணியின் சகல துறை வீரர் இயன் ஹார்வியே(Ian Harvey) அவர். இது வரை 73 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு ஒரு டெஸ்டில் கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 36வயதாகும் ஹார்வி 73 போட்டிகளில் 715 ஓட்டங்களைப்பெற்றிருப்பதோடு 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவருக்கு முன்பதாக இச்சாதனையை கைவசம் வைத்திருந்தவர்கள் பாகிஸ்தானின் சகீட் அப்றிடி, அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் மற்றும் அன்ரூ சைமண்ட்ஸ். இதை விட டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத கென்யா அணியின் தலைவர் ஸ்டீவ் டிக்கலோ இது வரை 105 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.


தோட்டமுகாமையாளரின் (ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் துரை என்று அழைப்பர்) பங்களாக்கள் மற்றும், மலைப்பிரதேசம். மலையகப்பகுதிகளில் ஆலயங்கள் இல்லாத பெருந்தோட்டங்களே இல்லை எனலாம்.ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் திருவிழா இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ஒன்றிவிட்டதொன்று. நான் பிறந்த இடமான வட்டகொடையில் ஓர் அம்மன் ஆலயம் உண்டு.இலங்கையில் வேறெந்த பெருந்தோட்டப்பகுதிகளிலும்
இல்லாத ஒரு அமைப்பு எமது ஆலயத்திற்கு உண்டு. அதாவது ஆலயத்தின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி நிலத்திலும் அமையுமாறு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்திற்கும் எமது குடும்பத்தாருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 1920 களில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் பணியை பிரதானமாக ஏற்று செய்தவர்கள் Head Kanganies என்று அழைக்கப்படும் பெரிய கங்காணிமார். அக்காலத்தில் ஒரு தோட்டத்துரைக்கு அடுத்து சகல அதிகாரங்களும் கொண்டு விளங்கியவர்கள் இந்த பெரிய கங்காணிமார். இப்படி வட்டகொடை பிரதசத்திற்கு இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பலரை அழைத்து வந்தவர் எனது பாட்டனார் திருமலை வேலுப்பிள்ளை அவர்கள். பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதற்குப்பிறகும் இந்த பெரியகங்காணிமாரின் அட்டூழியங்களை தனி அத்தியாயமாக எழுதலாம். அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். ஆனால் எனது பாட்டனார் தொழிலாளர் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அவர் நிரந்தரமாக இங்கு குடியேறிய பிறகு தான் இக்கோயிலின் நிர்வாகத்தை பொறுப்பேற்றார். மற்ற கோயில்களை விட இங்கு நடக்கும் திருவிழா சற்று வித்தியாசமானது. தேர் போன்ற ஒரு அலங்கார அமைப்பை உருவாக்கி அதில் அம்மன் சிலையை வைத்து இக்கோயில் அமைந்துள்ள குளத்தில் திருவிழா அன்று இரவு வலம் வரச்செய்வர். இதற்கு தெப்பத்தேர் என்பர். இதை தெப்பத்திருவிழா என்று அழைப்பர். அலங்கார மின்விளக்குகள் மின்ன,மேளதாளம் முழங்க அம்மன் தெப்பத்தில் இரவு நேரம் உலா வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சரி விடயத்திற்கு வருவோம் எனது பாட்டனார் அக்காலத்தில் இக்கோயிலின் நிர்வாக பொறுப்பை ஏற்று தெப்பத்திருவிழாவை மிக அமர்க்களமாக செய்திருக்கிறார். இக்கதைகளை நாம் ஆத்தா என்று அழைக்கும் அப்பாவின் அம்மா திகட்ட திகட்ட சொல்வார். அந்நேரம் நீரில் சாகஸங்கள் நிகழத்தும் குழுவினரை இந்தியாவிலிருந்து பாட்டனார் அழைத்து வருவாரம். அவர்கள் நீரில் சைக்கிள் ஓட்டி வியக்கவைப்பார்களாம். மேலும் தெப்பம் குளத்தில் உலா வர ஆயத்தமாகும் போது வானத்தில் ‘வட்டகொடை தெப்பத்திருவிழா’ என்று ஒளிரும் வர்ண வான வெடிகள் வெடிக்குமாம். பாட்டனாருக்குப்பிறகு பரம்பரையாக இப்பணி தொடர வேண்டும் என எனது தந்தைக்கு இந்த நிர்வகப்பொறுப்பு வந்தது. திருவிழா காலங்களில் தெப்பத்தில் அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பொறுப்பு எமது குடும்பத்தாருக்கு. அந்த இரவு நேர குளிரில் அப்பாவின் கையைபிடித்துக்கொண்டு நான் நின்றது இன்னமும் ஞாபகம் உள்ளது. அம்மா தடுத்தும் என்னை தெப்பத்தில் ஏற்றி விட்டார்கள் அம்மனுடனும் பக்தர்களுடனும் சேர்ந்து நானும் ஒரு முறை தெப்பத்தில் வலம் வந்ததை மறக்க முடியாது. காலங்கள் சென்றன. பெருந்தோட்டப்பகுதிகளில் மாற்றங்கள் ஆரம்பித்தன. பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் பிரித்தானியா சார்ந்த துரைமார்கள் இங்கிலாந்திலேயே தஞ்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் அப்பா கோயில் நிர்வாகம் முழுதையும் தோட்டத்திற்கே ஒப்படைத்தார். ஆனால் அதற்குப்பின்னும் வழிவழியாக வந்த பாரம்பரியத்தை மாற்ற விரும்பாத தோட்டமக்கள் ஒவ்வொரு திருவிழாவின் போதும் அம்மன் சிலையை எடுத்து வைக்க அப்பாவையே அழைத்துச்செல்வர். எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லாது போய்விட்டதோ? இப்போது இக்கோயிலில் திருப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. எமது பரம்பரை வீடு அங்கேயே இருந்தாலும் இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்கிறோம். அண்மையில் எமது தோட்டத்தை சேர்ந்த ஒருவர் என்னை சந்தித்து கோயில் திருப்பணிக்கு நிதி வசதி போதாதுள்ளது என்றார். அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் இப்படியாவது இவ்வாலயத்திற்கு உதவ வேண்டும் என நினைத்தேன்.ஒருமுறை அங்கு சென்று கோயிலை படம் எடுத்தேன். அதை இப்போது உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்… வேதனையோடு!

