Saturday, October 11, 2008

காதலித்துப்பார்; கல்யாணம் முடித்து



மனிதா காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!முன்னொரு போதும் பார்க்காத முகம் பார்த்து மணநாளன்று பார்த்த முகம் பார்த்து பின் எந்நாளும் அவளுடன் சேர்ந்திருக்கும் சுகம் எண்ணி காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதல்கள் எல்லாம் கரை சேர்வதில்லை;சேர்ந்தவைகளெல்லாம் தேர்ந்தவைகளில்லை
காதலின் அர்த்தம் புரிந்துணர்வேபுரிந்து கொள்!உன் புது வாழ்க்கையில் ஆரம்பிக்கும் புரிந்துணர்வு புத்துணர்ச்சியானதுஆகையால் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
அனுபவமில்லாத ஆரம்பம் அடிசறுக்கும்என்று தயங்காதே தளராதே அடிக்கடி நீ காணும் புளித்துப்போன புன்னகையை விட உன் புதுத்துணையின் புன்னகை புதுமையானதாகவிருக்கும் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
இங்கு காத்திருத்தல் இல்லை ;தவிப்பில்லை தண்டனையில்லைஇறுதி வரை அவள் எனக்குத்தானா என்ற ஏக்கமுமில்லை!
படகு மறைவிலும் குடையை கவசமாக்கியும்மனதையும் மகிழ்சியையும் பகிர்ந்துகொள்ளத்தேவையில்லை! காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதில் தானே சுகம்?
எவரின் தலையீடும் இல்லாமல் நீ காதலிக்கப்படுவதை விரும்புகிறாயா?இன்றே தொடங்கு காதலிப்பதைஆனால் கல்யாணம் முடித்து விட்டு காதலி உன் புதுத்துணையை! இறுதி மூச்சு வரை காதலிக்கப்படுவாய் காதலின் களிப்பை கண்டுணர்வாய்!
2002

8 comments:

சிவா சின்னப்பொடி said...

பாராட்டுக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com/

இறக்குவானை நிர்ஷன் said...

அழகான அருமையான கவிதை.

கல்யாணம் முடித்ததும் முயற்சிக்கிறேன்.

mirunalan said...
This comment has been removed by the author.
mirunalan said...

வலைப்பதிவு ஆரம்பித்தமைக்குப் பாராட்டுக்கள்... நல்ல ஆக்கங்கள்.
(ம்... என்ன கஷ்டம் வந்தாலும் அதையே படிக்கல்லாக்கும் கலை உங்களிடமுண்டு)

சிவலிங்கம் சிவகுமாரன் said...

சிவா சின்னபோடியா அல்லது சின்னபொடியனா படம் அப்படித்தான் இருக்கின்றது சகோதரா? நன்றி நன்றி

Glory George said...

கவிதை சூப்பர்....... But கல்யாணம் முடிச்சதும் நீங்க சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்

Anonymous said...

Siva Anna,
mmmmmm alahana Kawithai. unmaiyai appadiye eluthiyirukirirhal.

Antha sugame thani theriyuma? Naan idai anubawithaval… Anubawithukondirupaval…..
Oru vidayam sollamaranthu viteerhal. Thirumana panthathil pennai mudhalil paarpathendral, kattayam penparkum padalam nadanthirukkum. Enavey oru naal paartha Mugathathai meendum 06 madangalo or 1 varudamo kalithu antha madangalail avalaiyo/avanaiyo maathiram ninaithu, Antha Kadhalaiye oru Maaligaiyaga katti. Idellam yarku kidaikum?

Siva Anna, ippadi palar Kaadhalikka sinthipathillai. Idhai vida Aalamana kaadhal illai enbathaiyum unarvadhillai. U hv done a great Job. Keep it up.

Fm:
Nitharshini Milroy
(Nitharshini Rajadas)

Anonymous said...

இப்போது தான் உங்கள் வலை தளம் பார்த்தேன்.
மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் உங்கள் கவிதைகளை எதிர் பார்க்கிறேன்.

Prasha